Saturday 24 November 2018

ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் (Airtel, Vodafone-Idea) சேவை துண்டிப்பு

இனி ஒரு மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் சேவை துண்டிக்கப்படும் என ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
‘ஏர்டெல், வோடபோன் ஐடியா’ நிறுவனங்கள், வரும் அழைப்புகளை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறும் சேவையை நிறுத்தியுள்ளன. அதனால், வரும் அழைப்புகளுக்காக, இந்நிறுவனங்களின் சேவையை வைத்திருப்பவர்கள், தற்போது, 28 நாட்களுக்கு ஒரு முறை, குறைந்தபட்சம், 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை ஏர்டெல், வேடபோன் ஐடியா நிறுவனங்கள் இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்துள்ளன. அவுட் கோயிங் சேவைக்காக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் மொபைல் போன் இணைப்புக்கள் 30 நாட்களில் துண்டிக்கப்படும். தொடர்ந்து இன்கம்மிங் சேவையும் 45 நாட்களில் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெலின் 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 15 கோடி வாடிக்கையாளர்களும் மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்கின்றனர். 25 கோடி வாடிக்கையாளர்கள் இரண்டு சிம் கார்டுகளை கொண்ட மொபைல்களை பயன்படுத்துபவராக உள்ளனர். இவர்கள் இன்கம்மிங்கிற்கு ஒரு சிம்கார்டினையும், அவுட் கோயிங் அழைப்புக்களுக்கு ஒரு சிம்கார்டினையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்கள் மிக குறைந்த அளவிற்கே ரீசார்ஜ் செய்கின்றனர். அதுவும் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிற நிறுவனங்களின் சேவையை பெறுவோம் தங்களின் சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்வது மிகவும் குறைந்து விட்டதால், அந்நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.10 லிருந்து ரூ.35 ஆக உயர்த்தி இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுடன், மீதம் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதும் குறைந்து விட்டதால் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில், முதலில் அவுட்கோயிங் துண்டிக்கப்படும்; 15 நாட்களில் இன்கமிங் துண்டிக்கப்படும். பின், நம்பர் செயல் இழந்துவிடும்.

இது குறித்து, தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் மொபைல் எண்ணுக்கு வரும். மொபைல் எண்ணில், 1,000 ரூபாய் இருப்பு இருந்தாலும், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில் மொபைல் எண் செயல் இழந்து விடும். குறைந்தது, 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

 --தினமலர் நாளிதழிலிருந்து

ஏர்டெல் வோடஃபோன் முடிவு நியாயமா? [FAQ]



தினமும் கீரை சாப்பிடுவது நல்லது!

ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகரிக்கும் உணவு முறை குறித்து கூறும், மருத்துவர், வி.ஜமுனா: தினமும் காலையில், கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையை, சுடு தண்ணீரில் கழுவி, மென்று சாப்பிட வேண்டும். காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், மண்பாண்ட சமையலை சாப்பிட வேண்டும்.இது, ஆண்களுக்கு விதைப்பையை குளிர்ச்சியாக்கும்; விந்து உற்பத்தியைப் பெருக்கும்; உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கும் கூட, சினை முட்டை வெளியேறுவதை ஊக்குவிக்கும், வெள்ளைப்படுதலை குறைக்கும். பெண்ணுறுப்பின் நுழைவாயிலில், ஈரத்தன்மையை நிலைநிறுத்தும். தவிர, தம்பதியின் தாம்பத்திய விருப்பத்தை கூட்டும்.

சர்க்கரை வியாதி இல்லை என்றால், கருணைக்கிழங்கை, வாரம் இருமுறை, சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மதிய உணவில், 2 - 3 நார்ச்சத்து காய்கறிகள். குறிப்பாக, அவரைக்காய், நாட்டு அவரைக்காய், பீன்ஸ், புரோக்கோலி, காலிபிளவர், முருங்கைக்காய் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.மதிய உணவில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை என, ஒவ்வொரு நாளும் ஒரு கீரை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். முருங்கைக்கீரையில், முட்டையை உடைத்து ஊற்றி பொரியலாக சமைத்து, வாரம், இருமுறை சாப்பிட்டு வரலாம்.முருங்கைப்பூக்களை சூடான பாலில் போட்டு சாப்பிட்டு வருவதும் நல்லது. முருங்கைப் பூக்களை நெய்யில் வறுத்து, மதியம் சாதத்துடன் முதல் கவளமாக, பிசைந்துச் சாப்பிடலாம்.

உளுந்தில் செய்த பதார்த்தங்களை, சாப்பிடுவது நல்லது.அசைவப் பிரியர்கள், வாரம் இரண்டு முறை, ஆட்டுக்கறி சாப்பிடலாம். சித்த மருத்துவ சிகிச்சைக்கு முன், மீன் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்கள் சாப்பிடலாம். தினமும், ஒரு ஆப்பிள் அல்லது ஒரு மாதுளை அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.எடை குறைவானவர்கள், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடலாம். அக்ரூட், பிஸ்தா சாப்பிடலாம். ஓரளவு எடை கூடியபின், இதன் அளவைக் குறைத்து விடலாம். ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.நைசான களிமண்ணை சுடுநீரில் குழைத்து, ஆறியதும், அடிவயிறு, விதைப்பையில் பூசி வரலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான துாய பருத்தி ஆடைகளை அணியலாம். காலை மற்றும் மாலை, அரை மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.மது, சிகரெட் பழக்கம் இருந்தால், அடியோடு நிறுத்த வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால், உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நல்ல உயிர்துடிப்பும், உயிரோட்டமும் உள்ள அணுக்களாக மாறும்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Wednesday 21 November 2018

நாடு முழுவதும் 1.13 லட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்

வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 2.38 லட்சம் ஏ  டி  எம்களில் அதிக பயன்பாடு இல்லாதபுறநகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள 1.13 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்களை நி்ர்வகிக்கும் அமைப்பு கூறி உள்ளது. அதோடு வங்கி அல்லாத பிற தனியார் நிறுவனங்கள் நடத்தும் 15,000 ஏ டி எம் களும் மூடப்படும் நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2.38 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இந்த ஏ.டி.எம்.களின் மூலம் அனைத்து தரப்பினரும் பல்வேறு வங்கி சேவைகளை எளிதில் பெற்று பயன்அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: "ஏ.டி.எம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் மாற்ம் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும்".
--தினமலர் நாளிதழிலிருந்து. 
தொடர்புடையவை:


கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...