Sunday 30 September 2018

முதியோரின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்து!

முதியோர் நலனுக்காக, silvertalkies.com என்ற இணையதளம் துவங்கியுள்ள நிதி சாவ்லா மற்றும் ரேஷ்மி: டில்லியை சேர்ந்தவள் நான்; என் கணவரின் சொந்த ஊர், சென்னை. இப்போது நாங்கள், பெங்களூரில் வசித்து வருகிறோம். வயதான காலத்தில், என் பெற்றோர் எதிர் கொள்ளும் அவஸ்தைகளை பார்த்தவள் நான். தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும், சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, யாருமற்ற தனிமை தரும் மன அழுத்தமே, அவர்களை வாட்டும், முதல் நோய். அவர்களின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்தாக, தங்கள் வயதினருடன் உரையாட, சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தான் என, உணர்ந்தேன்.

கடந்த, 2014ல், புனேயில் வசிக்கும் என் தோழி, ரேஷ்மியுடன் இணைந்து, பெற்றோருடனான எங்கள் அனுபவங்களை, மற்றவர்களுக்கும் உதவும் வகையில் தொகுத்து, வலைப்பதிவில் பதிவிட ஆரம்பித்தோம். அதைப் படித்த பலரும், பயனுள்ளதாக இருந்ததாக மனதாரப் பாராட்டியதுடன், சீனியர் சிட்டிசன்களின் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டனர். அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க, இணையதளத்தை துவங்கினோம். அதன் மூலம், தனிமையில் தவிக்கும் சீனியர்களை ஒன்றிணைத்து, நண்பர்கள் குழுக்களை ஆரம்பித்தோம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் கூடி, தங்கள் உணர்வுகளைப் பகிரவும், பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழி செய்தோம்.

'ரோட்டரி கிளப்'புக்கு சொந்தமான நுாலகம், கணிப்பொறி மற்றும் விளையாட்டுச் சாதனங்களை, சீனியர்கள் பயன்படுத்தவும் அனுமதி பெற்றோம். இப்படி, அவர்களின் தனிமைத் துயரத்தை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து, செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றோம். உயில் எழுதுதல், வருமானவரித் தாக்கல் முதல், உடல், மன உபாதைகள் வரை, முதியோரின் அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கும் வகையில், கலந்துரையாடல்களை நடத்துகிறோம். அதில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். இணையத்தில் முதியோர் நலன் சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிடுகிறோம். இமயம் முதல் குமரி வரை, 8,000க்கும் மேற்பட்டோர், இவற்றைப் படிக்கின்றனர். உறுப்பினர் சந்தாவாக, ஆண்டிற்கு, 2,500 ரூபாய் வசூலிக்கிறோம். இந்த பணத்தை, இலவச சேவைகளுக்காக பயன்படுத்தி கொள்கிறோம்.

சென்னை உட்பட, பல நகரங்களில் எங்கள் அமைப்பை நிறுவ எண்ணி உள்ளோம். எங்கள் பாதையைப் பின்பற்றி, இப்போது பெண் தொழில்முனைவோர் பலர், முதியவர்களுக்கான சர்வீஸ்களைச் செய்யக் களமிறங்கி இருக்கின்றனர்; இது, எங்களுக்குக் கூடுதல் சந்தோஷம்.
--தினமலர் நாளிதழிலிருந்து


தொடர்புடைய பதிவுகள்:
புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...
உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....
வேலை செய்து வந்தால்.....

Friday 7 September 2018

F1 முதல் F12 வரையிலான keys ன் பயன்பாடுகள்:

F1 key has been used for the Help menus in almost all programs. 

F2 key allows us to modify the name of the file or folder you have selected at that time.  

F3 key allows direct access to the search box form. 

F4 key with alt key allows us to close an open program and also it does the last action. (like Ctrl+V action or Ctrl+Z action) 

F5 key is widely used in the Internet field to refresh the page 

F6 key allows access to browser address bar without using a mouse

F7 key for spelling check in MS word and to navigate web pages like MS word (Turn on/off Caret Mode).

F8 key for boot functions.

F10 Shift+ F10 key gives right click.

F11 key shows full-screen mode of browser, folder and PDF files.

F12 key Opens Save as dialog in MS Office

Some Shortcuts:

Ctrl+Shift+T = Opens last closed tab in browser
Ctrl+T          = Opens new tab in browser
Ctrl+W        = Closes current tab in browser
Ctrl+Tab      = Moves through each of the open tab in browser
Alt+ Tab      = Moves through each of the open program in the  task    bar
Shift+F3      = Converts word from small letter to Capital letter in MS Office
Ctrl+D         = Select the word and press this combination for formatting the fonts in MS Office. 


Tuesday 4 September 2018

புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...

வயதான காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில வழிமுறைகள் கூறும், மருத்துவர், வி.எஸ்.நடராஜன்: நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும். ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும்.வயது ஆக ஆக, மனதளவில் பந்த பாசங்களை குறைத்து வாழ, முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது.

வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை. எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும். உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது. மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர். தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.

முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்! 
--தினமலர் நாளிதழிலிருந்து 
 
"நீங்கள் அடுத்தவரிடமிருந்து என்ன எதிர்பார்கிறீர்களோ.. அதை அவருக்கு நீங்கள் கொடுங்கள் வாழ்க்கை இனிமையாகிவிடும்" 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...