Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Wednesday, 17 March 2021

வாழை நாரும் சிறந்ததே!!

வாழை நாரில் விதவிதமான கலைப் பொருட்களை படைத்து, பிரதமர் மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றது குறித்து, தமிழகத்தை சேர்ந்த முருகேசன்: சொந்த ஊர், மதுரை அருகே உள்ள மேலக்கால் என்ற கிராமம். விவசாய குடும்பம் என்னுடையது.விவசாயத்தில் பழைய முறைகளை பின்பற்றாமல், புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம், சிறு வயது முதல் இருந்து வந்தது. எங்கள் பகுதியில், எல்லாரும் கையால் அறுவடை செய்த போது, நான் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தேன்.வழக்கமாக, இரண்டொரு நெல் ரகங்களையே விதைத்து வந்த எங்கள் பகுதியினர் மத்தியில், நான் புதுப்புது அரிசி ரகங்களை பயிரிட்டு காட்டினேன். விவசாயத் துறையால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்பேன். 


கரும்பு சக்கையை, நல்ல இயற்கை உரமாக மாற்ற முடியும் என, சொல்லித் தந்தனர். அதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.அதுபோல, பல விதமான விவசாய கழிவு பொருட்களில் இருந்து, புதுமையான பொருட்களை படைக்க முடியும் என்பதை யோசித்து அறிந்தேன்.அந்த காலத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை கூட அறியாமல், அனைத்து தரப்பினரும், பிளாஸ்டிக் பைகளை சகட்டு மேனிக்கு பயன்படுத்தத் துவங்கி இருந்தனர்.அதற்கான மூலப்பொருட்களை, கடைக்காரர்களும் வாங்கிக் குவித்திருந்தனர். 

இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமே என, மனம் கலங்கியது.தென்னை நார், கயிறாக மாறுகிறது. பல தரப்பினராலும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவது போல, வாழைக் கழிவான, வாழை நாரிலிருந்தும், பல பொருட்களை தயாரிக்கலாமே என, பத்தாண்டுகளுக்கு முன் யோசித்தேன்.வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நார், பூ கட்டுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. பிற தேவைகளுக்கு, அவை பயன்படுத்தப்படாமல், வீணாக எரிக்கப்படுகின்றன அல்லது மண்ணில் போடப்பட்டு மக்க வைக்கப்படுகின்றன. 

எனவே, வாழை நாரிலிருந்து கயிறு தயாரித்து, அந்த கயிற்றை பலமாக ஆக்கி, அதன் மூலம், பை, பழக்கூடை, மிதியடி, டேபிள் மேட் போன்றவற்றை தயாரிக்க முடியும் என அறிந்து, கயிறு திரிக்கும் இயந்திரங்கள் கிடைக்கிறதா என, பல இடங்களிலும் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை.பிறகு, நானே அந்த எளிய இயந்திரத்தை உருவாக்கி, வாழை நாரிலிருந்து கயிறு தயாரிக்கத் துவங்கினேன். விளம்பரம் இல்லாததால், பெரிய அளவில் விற்பனையாகவில்லை. 

அப்போது ஒரு நாள், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கண்காட்சியில், வாழை நார் பொருட்களை காட்சிக்கு வைத்தேன். அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான 'ஆர்டர்'கள் குவியத் துவங்கின.துவக்கத்தில், நான் மட்டுமே செய்த இந்த வேலையில், இப்போது, எங்கள் பகுதியில், 300 பேர் ஈடுபடும் அளவுக்கு, வாழை நார் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், இன்னமும் ஏராளமான வாழை நார்,வீணாகத் தான் போகிறது

முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ள : 93605 97884

From Dinamalar paper

வாழவைக்கும் வாழை நார் (From Dinamani paper)

கற்றாழை, வாழை நார்... கலகலப்பான மாற்றம்!

வாழை நார் ஆடைகள்: 'துணி'ந்தால் லாபம்தான்!

வாழைநாரில் டாலர்களைக் குவிக்கும் பாமர விவசாயி!

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்


Tuesday, 28 April 2020

காய்கறி இலவசம்!!!!!!

கிராமத்தில் புறம்போக்காக கிடந்த நிலத்தில், காய்கறி பயிரிட்டு, விளைச்சலை கிராம மக்களுக்கே இலவசமாக வழங்கி வரும், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வ.வேப்பங்குடி கிராமத்து இளைஞர், அமெரிக்காவில் வேலை பார்க்கும், நரேந்திரன் கந்தசாமி: கரூர் மாவட்டம், எப்போதுமே வறட்சியானது. அதிலும், எங்கள் ஊர், கடும் வறட்சி உடையது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத பின்தங்கிய கிராமம். கடந்த, 2010-ல், ஆஸ்திரேலியா நாட்டில், கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை கிடைத்தது. தொடர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்றேன்.சுவிட்சர்லாந்தில் நிலவிய இயற்கைச் சூழலை பார்த்து தான், 'நம்ம ஊரையும் இப்படி மாற்ற வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.

அதையடுத்து, கடந்த, 2017ல், பூவரசு, ஆலம், அரசு, வாகை, வாதாம், வாதநாராயண மரம், வேம்பு என, பல வகை மரங்களை, 10 அடி வளர்த்து, ஊர் முழுக்க நட்டோம். பொது இடங்களில், 500-க்கும் மேற்பட்ட மா, பலா, வாழை, கொய்யா மரக்கன்றுகளை வளர்த்தோம். போன வருஷம், இயற்கை காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். எங்கள் ஊர் மண்ணில் எதுவும் விளையாது; மண்ணை மாற்றிய பின், காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றனர். ஆனால், நாங்க அப்படிச் செய்யவில்லை. ஆடு, மாடு சாண எருவை மட்டுமே போட்டு, மண்ணை மாற்றினோம்.அந்த தோட்டத்துக்கு, 'சமுதாய காய்கறித் தோட்டம்' என, பெயர் வைத்தோம்.

கத்திரி, பீர்க்கங்காய், வெண்டை, துவரை, தக்காளி, மிளகாய், முருங்கை, அவரை, வெண் பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், தண்டுக்கீரை, செங்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கேரட், பீட்ருட் என, எல்லா காய்கறி, கீரைகளும் காய்ப்புக்கு வந்து விட்டன.இப்போது, ஊர் மக்களே, தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது என, எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

வாரம் இரண்டு தடவை, கிராமத்து இளைஞர்கள் வேல்முருகன், காளிமுத்து போன்றோர், எல்லா வீடுகளுக்கும் காய்கறிகளை கொடுப்பர். காய்கறி தேவைப்படுவோர், தேவையான காய்கறிகளை, தாங்களாக வந்து பறித்து செல்வர். இப்படி, இதுவரை, 3,000 கிலோ காய்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளோம். இதை பார்த்து, வெளியூர் மக்கள் சிலர், அவர்களின் ஊர்களிலும், இலவச, இயற்கை தோட்டத்தை போடத் துவங்கி விட்டனர்.

கொரோனா வைரஸ், உலகத்தையே உலுக்கிய போது, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஆனால், எங்கள் ஊர் மக்கள், எந்தக் கவலையும் இல்லாமல், சமுதாய காய்கறி தோட்டத்தில், காய்கறிகளைப் பறித்து, சமைத்து சாப்பிட்டு, ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர்!

--தினமலர் நாளிதழிலிருந்து



Tuesday, 12 November 2019

சத்திரம் பேருந்து நிலைய புதிய பேருந்து நிறுத்த இடங்கள்:

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் (பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்குமிடம்) மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் (உள்ளூர்  மற்றும் வெளியூர் பேருந்துகள் நிற்குமிடம்) என்று இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது தெரிந்ததே. Smart city திட்டத்தின் ஒரு பகுதியாக சத்திரம் பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது, அடுத்த 2 வருடங்கள் தொடர்ந்து நடைபெறும். இரண்டு தளங்கள், பார்க்கிங் வசதி, ஓய்வறை, பொருட்கள் வைப்பு அறை, ஒதுங்கிடம் உட்பட பல வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்படவிருக்கிறது. அதன் பொருட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் வரைபடம் கீழே உள்ளது.


--தினமலர் நாளிதழிலிருந்து.



Sunday, 10 November 2019

போத்து முறையில் மரங்களை வேகமாக வளர்க்க முடியும்

மரங்களை விரைவில் வளர்க்க வகை செய்யும் தொழில் நுட்பம் குறித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தை துணை வேளாண் அலுவலர் அய்யப்பன்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, பாப்பநாயக்கன்பட்டி சொந்த ஊர். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்தேன்.

புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்துார் கிராமத்தில், ஆனந்த ராவ் என்பவர், ஆலமரக் கிளையை வெட்டி, போத்து முறையில் நடவு செய்து, பண்ணையை சோலைவனமாக மாற்றினார். அந்த பகுதியில் பணியாற்றிய போது, ஆனந்த ராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் தான், போத்து முறை நடவு பற்றி தெரிந்தேன்.

போத்து என்றால், எங்கள் பகுதியில், மரத்தின் கிளை என, பொருள். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை போன்ற மரங்கள், போத்து முறைக்கு ஏற்றவை; உதியன், வாதமடக்கி வேகமாக வளரும் தன்மை கொண்டவை. இந்த முறைக்கு தேர்வு செய்யப்படும் மரங்கள், 10 ஆண்டுகள் வளர்ந்தவையாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், கை மணிக்கட்டு கனத்தில், அதிக வளைவு இல்லாமல், நேராக இருக்க வேண்டும். அது, ௮ - ௧௦ அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் கொப்புகளை வெட்டி அகற்றி விட வேண்டும். மரத்திலிருந்து நடவுக்காக வெட்டும் கிளையை, கரும்பு வெட்டுவது போல, சரிவாக வெட்ட வேண்டும்.

இன்று நடப் போகிறோம் என்றால், முந்தைய நாளில் கிளைகளை வெட்ட வேண்டும். நடவுக்கு தாமதமானால், கிளையின் அடிப்பகுதியில் ஈரத்துணி சுற்றி, நிழலில் வைக்கலாம். முன்னதாக, ௪ அடி ஆழம், ௪ அடி சுற்றளவுக்கு குழி தோண்ட வேண்டும். அந்த குழியை, ஒரு வாரம், அப்படியே விட வேண்டும். நடவிற்கு முந்தைய நாள் மாலை, ஒரு குடம் தண்ணீரை அந்த குழியில் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில், ௫ கிலோ மக்கிய தொழு உரத்துடன், மேல் மண்ணை கலந்து, குழிக்குள், ௧.௫ அடி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அந்த குழிக்குள், மரக்கிளை நட்டு, சுற்றிலும் நன்றாக மண் மிதித்து, மண்ணை குவியல் போல வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால், காற்றின் சலனம், நீர் சலனத்தால், வேர் பிடித்தல் தாமதாகும். கிளையின் உச்சிப் பகுதியில், பசுஞ்சாணத்தை உருண்டை போல பிடித்து வைக்க வேண்டும். அடுத்த, ௪௫ - ௫௦ நாட்களில் இலைகள் துளிர் விடும். வெப்பம் குறைந்த, ஆடி துவங்கி, மார்கழி வரை, இந்த முறையில் மரங்களை நடவு செய்யலாம். இதனால், மரமாக வளரும் காலம் குறைந்து, விரைவில் பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பின், கிராமங்களுக்கு சென்று, போத்து தொழில் நுட்பத்தில் நிறைய மரங்கள் வளர்க்க உள்ளேன்.

மூலம் :: தினமலர் (13/8/19 பதிப்பு)

Thursday, 10 January 2019

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: உடலுக்குக் கெடுதல் தரும், 'ஷாம்பு, சென்ட்' உள்ளிட்ட வேதிப்பொருட்கள் எதுவும் இல்லாமல், இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி, நம் கூந்தலின் மணத்தை அதிகரிக்கலாம்.முந்தைய காலத்தில் வெந்தயத்தை அரைத்து, தலைக்குக் குளிப்பர். கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை அரைத்து, தலையில் தேய்த்து, அரப்புப்பொடி, சிகைக்காய் தேய்த்துக் குளிப்பர். வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலைக்குத் தேய்ப்பர். வடிகஞ்சித் தண்ணீரை தலைக்குத் தேய்த்துக் குளிப்பர். இப்போது இந்த முறைகளெல்லாம், வழக்கொழிந்து விட்டன.

முடக்கத்தான் கீரையை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்க, தலையில் உள்ள அழுக்கு போகும். இதன் பின், கீழ்கண்ட பொடிகளால் துாபமிட, கூந்தல் மணக்கும்.
  • வெட்டிவேர், லவங்கபத்திரி, அகரு கட்டை, திருவட்டப்பச்சை தலா ஒரு பங்கு, கற்கண்டு மற்றும் சாம்பிராணி தலா, 5 பங்கு, சந்தனத்துாள், 10 பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, பொடி செய்து, தலைக்குத் துாபமிட்டால், கபாலத்திற்கும், தலை முடிக்கும் மிகவும் நல்லது. 
  • சந்தனத்துாள், 72 கிராம், கிச்சிலிக் கிழங்கு, 55 கிராம், வெள்ளை குங்கிலியம், 33 கிராம், சாம்பிராணி, 55 கிராம், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால் தலா, 15 கிராம், நாட்டுச்சர்க்கரை, 25 கிராம் எடுத்து, நன்றாகப் பொடி செய்து, தலைக்குத் துாபமிடலாம். 
  • சந்தனத்துாள், 120 கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்திதகரம், சாம்பிராணி, திருவட்டப்பச்சை தலா, 72 கிராம் எடுத்து துாபமிடலாம்.
  • சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி தலா, 25 கிராம், கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம், கொட்டம் தலா, 16 கிராம், அகில்கட்டை, 25 கிராம் எடுத்து, பொடி செய்து, பன்னீர் விட்டுப் பிசைந்து, சூரிய ஒளியில் காய வைக்கவும். பின் அதை நன்றாக பொடித்து, துாபமிட, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதால் உண்டாகும் தலை பாரம், சைனஸ், சளி, மூக்கில் நீர்வடிதல் மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை நீங்கும். 
  • ரோஜாப்பூ, 850 கிராம், கிச்சிலிக்கிழங்கு, இலந்தைப் பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி - ஜடாமஞ்சி, லவங்கபத்திரி, பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தம் தோல் தலா, 50 கிராம், கஸ்துாரி, 6 கிராம் ஆகியவற்றை பொடித்து, அதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து காய வைக்கவும். இதை பொடி செய்து, துாபமிட, கூந்தலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி, அருமையான வாசனை உண்டாகும்!
--தினமலர் நாளிதழிலிருந்து

Friday, 4 January 2019

ஓராண்டு ஆனாலும் கெட்டுப் போகாது!!!.....வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்கப்பட்ட மழைநீர்!!!

மழைநீரை சேமித்து, குடிநீராக பயன்படுத்தி வரும், அரியலுார் மாவட்டம், கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த, சண்முகசுந்தரம்: விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், நான். அதனால், விவசாயத்தில் ஆர்வம் அதிகம். 15 ஆண்டுகளுக்கு முன், இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வாரோடு அறிமுகம் ஏற்பட்டது. அதனால், பாரம்பரிய விவசாயம், மரபு மருத்துவம் என, என் கவனம் திரும்பியது. என்னுடைய, ௦.5 ஏக்கர் நிலத்தில், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் போடாமல், விவசாயம்செய்கிறேன். ஆனால், சுற்று வட்டாரத்தில் ரசாயன விவசாயம் செய்வதால், பள்ளமான பகுதியில் உள்ள என் நிலத்திலும், மழைநீர் மூலமாக அந்தரசாயனங்கள் கலந்து விடுகின்றன. அதனால், வேறு இடத்தில், நண்பர்களோடு சேர்ந்து, இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவே, பச்சை நிறத்தில் ஆடை உடுத்தி வருகிறேன்.

 

'மழை நீரில், உயிராற்றல் அதிகம். அதை குடித்தால், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழலாம். கண் குறைபாடு வராது' என, நம்மாழ்வார், அடிக்கடி சொல்லி இருக்கிறார். அதனால், எங்கள் வீட்டில் உள்ள அனைவருமே, மழை நீரைத்தான் குடித்து வருகிறோம். 'மழை நீரைக் குடித்தால், சளி பிடிக்கும்' எனக் கூறுவர்; அது, தவறான கருத்து. எங்கள் அனுபவத்தில், அப்படி யாருக்கும் நடக்கவில்லை. பொதுவாக, தண்ணீரை சுட வைத்தால், அதன் சுவை மாறும். ஆனால், மழைநீரைக் கொதிக்க வைத்து குடித்தாலும், சுவை மாறாது. அத்துடன், மழை நீரைக் கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒரு நாளுக்கு, 300 மி.லி., மழைநீரே, ஒருவருக்குபோதுமானதாக இருக்கும்.

மழை நீரை குடிப்பதால், தாகம் எடுக்காது; உடலில் சோர்வு ஏற்படாது. அந்தளவு, அதில் தேவையான உயிர் சத்துக்கள் உள்ளன. மழை பெய்ய ஆரம்பித்ததும், மொட்டை மாடியில் உள்ள கழிவுகள் எல்லாம் அடித்து, குழாய் வழியாக கீழே வரும்.அதெல்லாம் நீங்கி, தண்ணீர் சுத்தமாக வரத் துவங்கியதும், பருத்தி துணியால் வடிகட்டி, பாத்திரங்களில் பிடித்து வைத்துக் கொள்வோம். வெயில் படாமல் வைத்திருந்தால், ஓராண்டு ஆனாலும் மழைநீர் கெட்டுப் போகாது; துர்நாற்றம் வராது. இயல்புத் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். மழைநீரை மட்டுமே குடித்து, எந்த உணவும் சாப்பிடாமல், பல நாட்கள் இருந்துஉள்ளேன்.
--தினமலர் நாளிதழிலிருந்து

மழைநீரை வடிகட்டி குடிக்கும் முறை:
எங்கள் வீட்டிலும் மழைநீரைத்தான் குடிக்க பயன்படுத்துகிறோம். வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் போது முதல் இரண்டு மழை நீரை பிடிப்பதில்லை, அதில் காற்றில் மற்றும் மேற்கூரையில் இருக்கும் அசுத்தங்கள் கலந்து இருக்கும். வசதி இருந்தால் மழை நீர் சேமிப்பு அமைப்பை முறையாக நிறுவிக்கொள்ளலாம் இல்லையெனில் மழைநீரை பாத்திரத்திலோ, drum அல்லது பிளாஸ்டிக் Barrel லிலோ பிடித்து வைக்கலாம். ஒரு நாள் அந்த பாத்திரத்திலேயே இருக்க வேண்டும்.....பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும, அதன் பிறகு நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து வேறொரு பாத்திரத்தில் மழைநீரை மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும.

என்னதான் வடிகட்டினாலும் மழைநீரில் கலந்திருக்கும் நுண் துகள்கள் வடிகட்டப்படாது, ஒரு வாரம் வரை வைக்கும் போதுதான் அந்த துகள்கள் பாத்திரத்தின் அடியில் சேகரமாகும். பாத்திரத்தில் உள்ள மழைநீரை மாற்றிய பிறகு பாத்திரத்தின் உட்பகுதியை தேய்த்து கழுவினால் வெளிர் பழுப்பு நிறத்தில் படிந்துள்ள அசுத்தங்களை காண முடியும். இப்படி இரண்டு மூன்று முறை மாற்றிய நீரை குடிக்க பயன்படுத்தலாம். கடைசியாக மாற்றிய பாத்திரத்தில் கூட அடியில் உள்ள நீர் வரை குடிக்காமல் கடைசியில் உள்ள நீரை அலசி ஊற்றி விட வேண்டும். தொடர் மழை பெய்யும் காலங்களில் இந்த அசுத்தங்கள் குறைய வாய்ப்புள்ளது.

 தொடர்புடையவை....
தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்
தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2  
 

Wednesday, 19 December 2018

தொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST) வழி காட்டுகிறது

'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் மகளுமான, லட்சுமி வெங்கடேசன்: கடந்த, 1990ல், அப்பாவுடன், அமெரிக்கா போனபோது, ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், வேல்ஸ் இளவரசருமான சார்லசைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை தேடிக் கண்டுபிடித்து தொழிலதிபர்களாக்கும் அவருடைய முயற்சி, என்னை கவர்ந்தது. வேலையை விட்டு, அதே மாதிரியான திட்டத்தை ஆரம்பிக்க நினைத்தேன். என் யோசனையை, ஜே.ஆர்.டி., டாட்டாவிடம் கொடுத்தேன். வழிகாட்டியாகவும், நிறுவன தலைவராகவும் இருக்க அவர் சம்மதிக்க, 1992ல், Bharatiya Yuva Shakti Trust (BYST) ஆரம்பமானது.

அதாவது, 18 - 35 வயது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்போது, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போய்விடும். சிறுதொழில் ஆரம்பிக்கவும், வங்கியில் கடன் வாங்கவும் ஏகப்பட்ட கெடுபிடிகள்  உள்ளது. பெண்கள் நிலை இன்னும் மோசம். BYST  மூலமாக, கிராமம், சிறுநகரங்களுக்குச் சென்று, சிறுதொழில் செய்ய நினைப்பவர்களை கண்டுபிடிக்கிறோம். சாதாரண கைவினைப் பொருள் தயாரிப்போ, அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படும் பிசினசோ செய்ய அவர்கள் முற்பட்டால், அவர்களுடைய யோசனைகளை வரவேற்கிறோம். சொத்து இருக்க வேண்டியதில்லை, செக்யூரிட்டி தேவையில்லை. பயிற்சி கொடுப்பதில் துவங்கி, வங்கிக் கடன் வாங்கித் தருவது, ஆலோசனை, வழிகாட்டுவது என, அனைத்தையும் செய்கிறோம்.  

தொழிலதிபர்களை உருவாக்கும் இத்திட்டத்தின் முதுகெலும்புகளே, வழிகாட்டிகள் தான். அப்படிப்பட்டவர்களை, பெரிய நிறுவனங்கள், தொழிற்பேட்டை, ரோட்டரி, லயன்ஸ் கிளப் அமைப்புகள் என, பல பின்னணியிலிருந்து தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவோம். வருங்கால தொழிலதிபர்களுக்கு வழிகாட்டப் போகும் அவர்களுக்கும், 'ட்ரெயினிங் ஆப் தி ட்ரெயினர்ஸ்' என்ற பெயரில், பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ தொழில் ஆரம்பித்த பிறகும், இரண்டு ஆண்டுகளுக்கு வழிகாட்டிகளின் ஆதரவு தொடரும்.

எங்கள் முயற்சியால், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவாகி, அவர்கள் வாயிலாக, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 42 நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 'தொழிலில் ஜெயிக்க, பெரிய பின்புலம் தேவை' என்ற கருத்தை உடைப்பதே, எங்கள் நோக்கம். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஆண், பெண் கூட, தொழிலதிபர் ஆகலாம்; அவர்கள், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம் என, நிரூபித்து வருகிறோம்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Thursday, 13 December 2018

தலை குளியல் முறைகள்

தலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்:  தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும். 
  • மருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும். 
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.
  • மருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும். 
  • படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும். 
  • கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும். 
  • தேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.

'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.

தற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக வியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது!
--தினமலர் நாளிதழிலிருந்து

Monday, 3 December 2018

மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூ இயற்கை முறையில் சாகுபடி:

மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூவை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி: கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். விவசாயத்துக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து, சென்னையில், ஒரு, 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 10 ஆண்டுகள் வேலை செய்தேன்.ஒரு கட்டத்தில் வேலை மிகவும் போர் அடிக்கவும், 2015ல், குடும்பத்தோடு ஊர் திரும்பி விட்டேன். எங்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர், கரம்பை நிலம், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், சீமைக்கருவேல மரங்களால் அடர்ந்து இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை தயார் செய்து, 4,000 செம்பருத்தி செடிகளை நடவு செய்தேன்.


அதில், 500 செடிகள் பட்டுப்போயின.மீத செடிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை, ஆறு மாதங்களாக, அறுவடை செய்து வருகிறேன். சென்னை, கோவை, டில்லி நகரங்களில் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்களை தேடிப்பிடித்து, நேரடியாக பூக்களை விற்பனை செய்து வருகிறேன். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்கள், மணப்பாகு தயாரிக்க, தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.உலராத பூக்களாகவும், மீதியை காய வைத்த பூக்களாகவும் விற்பனை செய்து வருகிறேன். 100 கிலோ பூவை காய வைத்தால், 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத, 200 கிலோ பூக்களை, கிலோ, 200 ரூபாய் என விற்று, 40 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது.

அதேபோல், 3,154 கிலோ பூக்களை உலர வைத்து, 616 கிலோ கிடைத்தது. இது, கிலோ, 490 - 750 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலமாக, 3.08 லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இதுவரை, நிலம் சீரமைப்பு, செடிகள், சொட்டுநீர் பாசனம், களை எடுப்பு, இடுபொருள் செலவு என, 2.71 லட்சம் ரூபாய் செலவு போக, 77 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும்; பராமரிப்பு செலவு குறைந்து விடும் என்பதால், இனி, லாபம் அதிகரிக்கும். அத்துடன், செம்பருத்தியில் இருந்து தேநீர்ப் பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி ஜாம் என, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் யோசனையும் உள்ளது. அப்படி விற்பனை செய்ய ஆரம்பித்தால், கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பித்து விடும். தொடர்புக்கு: 99430 06666.
-- தினமலர் நாளிதழிலிருந்து
செம்பருத்தியல் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள்
செம்பருத்தி பூவினால் செழிக்கும் அழகு

Saturday, 24 November 2018

ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் (Airtel, Vodafone-Idea) சேவை துண்டிப்பு

இனி ஒரு மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் சேவை துண்டிக்கப்படும் என ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
‘ஏர்டெல், வோடபோன் ஐடியா’ நிறுவனங்கள், வரும் அழைப்புகளை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறும் சேவையை நிறுத்தியுள்ளன. அதனால், வரும் அழைப்புகளுக்காக, இந்நிறுவனங்களின் சேவையை வைத்திருப்பவர்கள், தற்போது, 28 நாட்களுக்கு ஒரு முறை, குறைந்தபட்சம், 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை ஏர்டெல், வேடபோன் ஐடியா நிறுவனங்கள் இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்துள்ளன. அவுட் கோயிங் சேவைக்காக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் மொபைல் போன் இணைப்புக்கள் 30 நாட்களில் துண்டிக்கப்படும். தொடர்ந்து இன்கம்மிங் சேவையும் 45 நாட்களில் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெலின் 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 15 கோடி வாடிக்கையாளர்களும் மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்கின்றனர். 25 கோடி வாடிக்கையாளர்கள் இரண்டு சிம் கார்டுகளை கொண்ட மொபைல்களை பயன்படுத்துபவராக உள்ளனர். இவர்கள் இன்கம்மிங்கிற்கு ஒரு சிம்கார்டினையும், அவுட் கோயிங் அழைப்புக்களுக்கு ஒரு சிம்கார்டினையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்கள் மிக குறைந்த அளவிற்கே ரீசார்ஜ் செய்கின்றனர். அதுவும் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிற நிறுவனங்களின் சேவையை பெறுவோம் தங்களின் சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்வது மிகவும் குறைந்து விட்டதால், அந்நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.10 லிருந்து ரூ.35 ஆக உயர்த்தி இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுடன், மீதம் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதும் குறைந்து விட்டதால் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில், முதலில் அவுட்கோயிங் துண்டிக்கப்படும்; 15 நாட்களில் இன்கமிங் துண்டிக்கப்படும். பின், நம்பர் செயல் இழந்துவிடும்.

இது குறித்து, தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் மொபைல் எண்ணுக்கு வரும். மொபைல் எண்ணில், 1,000 ரூபாய் இருப்பு இருந்தாலும், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில் மொபைல் எண் செயல் இழந்து விடும். குறைந்தது, 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

 --தினமலர் நாளிதழிலிருந்து

ஏர்டெல் வோடஃபோன் முடிவு நியாயமா? [FAQ]



தினமும் கீரை சாப்பிடுவது நல்லது!

ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகரிக்கும் உணவு முறை குறித்து கூறும், மருத்துவர், வி.ஜமுனா: தினமும் காலையில், கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையை, சுடு தண்ணீரில் கழுவி, மென்று சாப்பிட வேண்டும். காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், மண்பாண்ட சமையலை சாப்பிட வேண்டும்.இது, ஆண்களுக்கு விதைப்பையை குளிர்ச்சியாக்கும்; விந்து உற்பத்தியைப் பெருக்கும்; உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கும் கூட, சினை முட்டை வெளியேறுவதை ஊக்குவிக்கும், வெள்ளைப்படுதலை குறைக்கும். பெண்ணுறுப்பின் நுழைவாயிலில், ஈரத்தன்மையை நிலைநிறுத்தும். தவிர, தம்பதியின் தாம்பத்திய விருப்பத்தை கூட்டும்.

சர்க்கரை வியாதி இல்லை என்றால், கருணைக்கிழங்கை, வாரம் இருமுறை, சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மதிய உணவில், 2 - 3 நார்ச்சத்து காய்கறிகள். குறிப்பாக, அவரைக்காய், நாட்டு அவரைக்காய், பீன்ஸ், புரோக்கோலி, காலிபிளவர், முருங்கைக்காய் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.மதிய உணவில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை என, ஒவ்வொரு நாளும் ஒரு கீரை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். முருங்கைக்கீரையில், முட்டையை உடைத்து ஊற்றி பொரியலாக சமைத்து, வாரம், இருமுறை சாப்பிட்டு வரலாம்.முருங்கைப்பூக்களை சூடான பாலில் போட்டு சாப்பிட்டு வருவதும் நல்லது. முருங்கைப் பூக்களை நெய்யில் வறுத்து, மதியம் சாதத்துடன் முதல் கவளமாக, பிசைந்துச் சாப்பிடலாம்.

உளுந்தில் செய்த பதார்த்தங்களை, சாப்பிடுவது நல்லது.அசைவப் பிரியர்கள், வாரம் இரண்டு முறை, ஆட்டுக்கறி சாப்பிடலாம். சித்த மருத்துவ சிகிச்சைக்கு முன், மீன் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்கள் சாப்பிடலாம். தினமும், ஒரு ஆப்பிள் அல்லது ஒரு மாதுளை அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.எடை குறைவானவர்கள், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடலாம். அக்ரூட், பிஸ்தா சாப்பிடலாம். ஓரளவு எடை கூடியபின், இதன் அளவைக் குறைத்து விடலாம். ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.நைசான களிமண்ணை சுடுநீரில் குழைத்து, ஆறியதும், அடிவயிறு, விதைப்பையில் பூசி வரலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான துாய பருத்தி ஆடைகளை அணியலாம். காலை மற்றும் மாலை, அரை மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.மது, சிகரெட் பழக்கம் இருந்தால், அடியோடு நிறுத்த வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால், உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நல்ல உயிர்துடிப்பும், உயிரோட்டமும் உள்ள அணுக்களாக மாறும்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Wednesday, 21 November 2018

நாடு முழுவதும் 1.13 லட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்

வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 2.38 லட்சம் ஏ  டி  எம்களில் அதிக பயன்பாடு இல்லாதபுறநகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள 1.13 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்களை நி்ர்வகிக்கும் அமைப்பு கூறி உள்ளது. அதோடு வங்கி அல்லாத பிற தனியார் நிறுவனங்கள் நடத்தும் 15,000 ஏ டி எம் களும் மூடப்படும் நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2.38 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இந்த ஏ.டி.எம்.களின் மூலம் அனைத்து தரப்பினரும் பல்வேறு வங்கி சேவைகளை எளிதில் பெற்று பயன்அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: "ஏ.டி.எம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் மாற்ம் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும்".
--தினமலர் நாளிதழிலிருந்து. 
தொடர்புடையவை:


Tuesday, 16 October 2018

ஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா?

ஒவ்வொருநாளும், தினமும் காலையில் எழுந்ததும் நாம் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவதாகத் தான் இருக்கும். நாமே சொந்தமாக டூத் பெளடர் தயாரித்து அதைப் பயன்படுத்தி பார்த்தால் என்ன?



தேவையான பொருட்கள்...

நெல்லிக்காய் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

வேப்பிலைப் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

லவங்கப்பட்டை - 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா/சமையல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பிங்க் இமாலயன் சால்ட் - 1 டேபிள் ஸ்பூன்

டீ ட்ரி ஆயில் - சில துளிகள்

புதினா இலை பெளடர் - 1 டீஸ்பூன்

செய்முறை: மேலே கூறப்பட்டுள்ள பெளடர்கள் அனைத்துமே சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஒருவேளை கிடைக்காவிட்டாலும் கவலையில்லை. இவை அனைத்துமே சமையற்கட்டில் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தான், எனவே அவற்றை எடுத்துக் காய வைத்து அரைத்துப் பொடி செய்து கொள்ளலாம். அப்படிப் பொடி செய்தவற்றை மேலே சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு பெளலில் இட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது நீங்கள் விரும்பும் உங்களது டூத் பெளடர் தயார். 

இந்தப் பெளடரைப் பயன்படுத்தி தினமும் இருவேளை பல் துலக்கி வந்தீர்களானால் உங்களது பல் பளீரிடும் என்பதோடு டூத் பேஸ்டுகளால் விளையும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம். ஏனெனில் இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் டூத்பேஸ்டுகளில் அதிக அளவில் கலந்துள்ள ஃப்ளோரைடு எனும் வேதிப்பொருள் உடல் நலனுக்கு உகந்ததல்ல. கமர்சியல் டூத் பேஸ்டுகளில் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய சோடியல் லாரைல் சல்ஃபேட், ப்ரொப்பிலீன் கிளைக்கால், ஃபுளோரைடு மற்றும் செயற்கை இனிப்பூட்டி ரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. அவற்றினால் விளையும் பக்க விளையும் மிக மோசமானவை. அந்த ஆபத்தில் இருந்து நமது பற்களை காத்துக் கொள்ள வேண்டுமெனில் நாம் இனிவரும் காலங்களில் நமக்குத் தேவையான பற்பொடிகளை மேற்கூறிய விதத்தில் நாமே தயாரித்துக் கொண்டால் நல்லது.

மேற்கண்ட பொருட்களின் சிறப்புகள்...

நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது பல் மற்றும் வாயின் உட்புறக்காயங்களை எளிதில் ஆற்றக்கூடியது. அதுமட்டுமல்ல இதன் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் குணங்களால் பற்குழிகள் வராமல் காக்கும்.

வேப்பிலைப் பெளடரில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி வைரல் தன்மையானது வாய்க்குள் இருக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்கக் கூடிய திறன் கொண்டது.

அடுத்ததாக கிராம்பு மற்றும் லவங்கப் பட்ட இரண்டையும் நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தத் தேவையில்லை. பற்பொடி தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இரண்டுமே பற்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியவை. கிராம்பு பல்வலி மற்றும் ஈறுகளில் வலி ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் திறன் கொண்டது. அதோடு அதன் ஆண்ட்டி செப்டிக் திறன் காரணமாக வாய்க்குள் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை களையும் சக்தியும் இதற்கு உண்டு.

லவங்கப் பட்டைக்கு பற்சொத்தை மற்றும் வாய்துர்நாற்றத்தை அகற்றும் திறன் உண்டு. அது மட்டுமல்ல இதன் இனிப்புச் சுவை குழந்தைகளுக்கு இந்தப் பற்பொடியை விரும்பத் தக்கதாக மாற்றும்.

பேக்கிங் சோடா வாயினுள் உமிழ்நீரில் இருக்கும் அமிலத்தன்மையைக் குறைத்து வாய்துர்நாற்றத்தை அகற்றும் என்பதோடு பற்களில் படிந்துள்ள கறையை நீக்கி வெண்மையாக்கவும் உதவும்.

உப்பு, வாயினுள் காயங்கள் இருப்பின் அதை ஆற்றும் திறன் கொண்டது. சிலர்... உப்பு தேவையில்லை என்று நினைத்தால் அதைத் தவிர்த்து விடலாம்.
--தினமணி நாளிதழிலிருந்து

Saturday, 13 October 2018

'ஹேண்ட் இன் ஹேண்ட்' : இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும் அமைப்பு

இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' அமைப்பின், இயற்கை விவசாயப் பயிற்சித் திட்ட மேலாளர், முனைவர், ஜோ: எங்கள் அமைப்பு, 'ஹீமேனியம்' நிறுவனத்துடன் இணைந்து, விவசாயப் பண்ணையை அமைத்து, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. இது, இரண்டு ஆண்டுத் திட்டம். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமம் முழுவதும், களர் மண் நிலங்கள் தான் உள்ளன. வளம் குறைந்த மண்ணிலும், இயற்கை விவசாயம் சாத்தியமே என்பதை நிரூபிக்கவே, இக்கிராமத்தை தேர்ந்தெடுத்தோம்.

பண்ணையில் பயிற்சிக்காக, 0.5 ஏக்கரில், கோ - 4 புல், அவரைக்காய், பீர்க்கங்காய், பாகல், அரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, சிறுகீரை, தக்காளி, பீன்ஸ், தட்டைப்பயறு, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்கிறோம்.மண்புழு உரம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல், இஞ்சி பூண்டுக் கரைசலை தயாரிப்பதுடன், 'கம்மல் பாசி' என்று அழைக்கப்படும், அசோலா வளர்ப்புக் கூடத்தையும் அமைத்துள்ளோம். இதை விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம்.

 'மாதிரி பண்ணை அமைத்துள்ள நிலத்தில் ரசாயனம் போட்டாலே ஒன்றும் விளையாது. இயற்கை விவசாயத்தில் என்ன விளையப்போகுது?' எனக் கூறித்தான், இதன் உரிமையாளர், குத்தகைக்கே கொடுத்தார். இப்போது, இயற்கை முறை சாகுபடியில் விளைந்து நிற்கும் பயிர்களை பார்த்து, நிறைய விவசாயிகள் பயிற்சிக்காக வர ஆரம்பித்துள்ளனர்.இயற்கை விவசாயத்துடன், விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இயற்கை விவசாயம் சிறப்பாக செய்யும் விவசாயிகளுக்கு, 15 நாட்டுக்கோழி, ஆடுகளை கொடுக்க இருக்கிறோம். நாங்கள் தரும் நாட்டுக்கோழி மற்றும் ஆடுகளுடன், அவர்கள் பணம் கொடுத்து, ஐந்து நாட்டுக்கோழி, இரண்டு ஆடுகளையும் வாங்க வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் அவர்கள், அதை நிலையாக வைத்திருப்பர்.

விவசாயிகளுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரே மந்திரம்,  'நிலத்தில் இடப்படும் இடுபொருட்கள் எதையும் வெளியில் இருந்து வாங்கக் கூடாது; முடிந்தவரை அனைத்தையும் அவர்களே உற்பத்தி செய்ய வேண்டும்' என்பது தான். அதேபோல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

விவசாயிகளை தற்சார்புள்ளவர்களாக மாற்ற, இயற்கை விவசாயம் ஒன்றே வழி என்பதை, அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். விரைவில் இக்கிராமத்தை, முழு இயற்கை கிராமமாக மாற்றிவிடுவோம். தொடர்புக்கு: 92822 13702.
--தினமலர் நாளிதழிலிருந்து

Sunday, 7 October 2018

ஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்!

ஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்!பாத்திரங்களை மெருகேற்றும், 'மாப்' எனும் துடைப்பான் தயாரித்து வரும், சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா: 10ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எங்கள் பகுதியில், பாத்திரங்களுக்கு மெருகேற்றும், 'மாப்' தயாரிப்பவர்கள் இருந்தனர். பள்ளி சென்று வந்ததும், பகுதி நேர வேலையாக, இதை செய்ய கற்று, செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், அதையே முழு நேரமாக செய்யும் அளவுக்கு வளர்ந்ததோடு, நிறைய பேருக்கு வேலையும் கொடுத்து வருகிறேன். படிப்பு, அனுபவம் என, எதுவுமின்றி, கணிசமான வருமானம் பார்க்கும் இந்த தொழில், வேலைக்குப் போக முடியாத பெண்களுக்கான சரியான வாய்ப்பு!

ஆயத்த ஆடை நிறுவனங்களில், தைத்தது போக, வீணாகும் பருத்தி துணி துண்டுகள் மட்டும் தான் இதற்கு பயன்படும். இவை, ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் அல்லது சென்னை, பாரிஸ் கார்னர் கிடங்குகளிலும் கிடைக்கும். அதை, கிலோ கணக்கில் வாங்கி, அளவுக்கேற்ப அடுக்கி, தைத்து, ஆணி வைத்து அடிக்க வேண்டும்.துணியின் தரத்துக் கேற்ப கிலோ, 5 ரூபாய் முதல் கிடைக்கும். ஒரு மாப் தயாரிக்க, 2 கிலோ துணி தேவைப்படும். ஆரம்பத்தில் குறைந்தது, 100 கிலோ வரை தேவைப்படும்.

மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரத்தோடு சேர்த்து, மொத்த மூலதனம், 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். வேகமும், நுணுக்கமும் பிடிபட்டு விட்டால், ஒரு நாளுக்கு, 100 வரை தைக்கலாம். ஆரம்பத்தில், நாள் ஒன்றுக்கு, 30 மாப் வரை செய்யலாம்.அடுக்க, தைக்க என, ஒவ்வொன்றுக்கும் உதவிக்கு ஆள் வைத்திருந்தால், இன்னும் எண்ணிக்கையை கூட்டலாம்.ஒரு மாப் செய்ய அடக்க விலை, 40 ரூபாய். அதை, 60 ரூபாய்க்கு விற்கலாம். ஆணி அடிக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாப்புக்கு, 8 ரூபாய் கொடுக்கலாம்.

10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 20 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம்.தனியாக துவங்குவதை விட, இரண்டு, மூன்று பேர் சேர்ந்து துவங்குவது லாபகரமாக இருக்கும். 300 ரூபாய் கட்டணத்தில், ஒரே நாள் பயிற்சியில், பாத்திரங்களை மெருகேற்றும் மாப் செய்ய கற்றுக் கொள்ளலாம்.
--தினமலர் நாளிதழிலிருந்து.

Sunday, 30 September 2018

முதியோரின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்து!

முதியோர் நலனுக்காக, silvertalkies.com என்ற இணையதளம் துவங்கியுள்ள நிதி சாவ்லா மற்றும் ரேஷ்மி: டில்லியை சேர்ந்தவள் நான்; என் கணவரின் சொந்த ஊர், சென்னை. இப்போது நாங்கள், பெங்களூரில் வசித்து வருகிறோம். வயதான காலத்தில், என் பெற்றோர் எதிர் கொள்ளும் அவஸ்தைகளை பார்த்தவள் நான். தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும், சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, யாருமற்ற தனிமை தரும் மன அழுத்தமே, அவர்களை வாட்டும், முதல் நோய். அவர்களின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்தாக, தங்கள் வயதினருடன் உரையாட, சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தான் என, உணர்ந்தேன்.

கடந்த, 2014ல், புனேயில் வசிக்கும் என் தோழி, ரேஷ்மியுடன் இணைந்து, பெற்றோருடனான எங்கள் அனுபவங்களை, மற்றவர்களுக்கும் உதவும் வகையில் தொகுத்து, வலைப்பதிவில் பதிவிட ஆரம்பித்தோம். அதைப் படித்த பலரும், பயனுள்ளதாக இருந்ததாக மனதாரப் பாராட்டியதுடன், சீனியர் சிட்டிசன்களின் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டனர். அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க, இணையதளத்தை துவங்கினோம். அதன் மூலம், தனிமையில் தவிக்கும் சீனியர்களை ஒன்றிணைத்து, நண்பர்கள் குழுக்களை ஆரம்பித்தோம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் கூடி, தங்கள் உணர்வுகளைப் பகிரவும், பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழி செய்தோம்.

'ரோட்டரி கிளப்'புக்கு சொந்தமான நுாலகம், கணிப்பொறி மற்றும் விளையாட்டுச் சாதனங்களை, சீனியர்கள் பயன்படுத்தவும் அனுமதி பெற்றோம். இப்படி, அவர்களின் தனிமைத் துயரத்தை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து, செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றோம். உயில் எழுதுதல், வருமானவரித் தாக்கல் முதல், உடல், மன உபாதைகள் வரை, முதியோரின் அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கும் வகையில், கலந்துரையாடல்களை நடத்துகிறோம். அதில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். இணையத்தில் முதியோர் நலன் சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிடுகிறோம். இமயம் முதல் குமரி வரை, 8,000க்கும் மேற்பட்டோர், இவற்றைப் படிக்கின்றனர். உறுப்பினர் சந்தாவாக, ஆண்டிற்கு, 2,500 ரூபாய் வசூலிக்கிறோம். இந்த பணத்தை, இலவச சேவைகளுக்காக பயன்படுத்தி கொள்கிறோம்.

சென்னை உட்பட, பல நகரங்களில் எங்கள் அமைப்பை நிறுவ எண்ணி உள்ளோம். எங்கள் பாதையைப் பின்பற்றி, இப்போது பெண் தொழில்முனைவோர் பலர், முதியவர்களுக்கான சர்வீஸ்களைச் செய்யக் களமிறங்கி இருக்கின்றனர்; இது, எங்களுக்குக் கூடுதல் சந்தோஷம்.
--தினமலர் நாளிதழிலிருந்து


தொடர்புடைய பதிவுகள்:
புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...
உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....
வேலை செய்து வந்தால்.....

Tuesday, 4 September 2018

புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...

வயதான காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில வழிமுறைகள் கூறும், மருத்துவர், வி.எஸ்.நடராஜன்: நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும். ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும்.வயது ஆக ஆக, மனதளவில் பந்த பாசங்களை குறைத்து வாழ, முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது.

வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை. எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும். உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது. மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர். தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.

முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்! 
--தினமலர் நாளிதழிலிருந்து 
 
"நீங்கள் அடுத்தவரிடமிருந்து என்ன எதிர்பார்கிறீர்களோ.. அதை அவருக்கு நீங்கள் கொடுங்கள் வாழ்க்கை இனிமையாகிவிடும்" 

Monday, 6 August 2018

உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....

மாடித் தோட்டத்தை பராமரித்து வரும், 75 வயதான, சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்: மெட்ரோ வாட்டர் போர்டில், இன்ஜினியராக இருந்த நான், 25 ஆண்டு பணி முடித்து, விருப்ப ஓய்வு பெற்று, சொந்த தொழில் ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன், அதையும் மூடி, இப்போது ஓய்வில் இருக்கிறேன். சொந்த தொழில் நடத்திய சமயத்திலேயே, மாடித் தோட்டம் ஆரம்பித்து விட்டேன்.


செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் வாளி, பைகளை தான் பயன்படுத்துகிறேன். வாளி, பையின் பக்கவாட்டில், சிறு துளை போட்டு, மணல், செம்மண், தேங்காய் நார், மாட்டு எரு, மண்புழு உரம் நிரப்பி, விதைப்பேன். வீணாகும் காய்கறிகள், மட்கின இலை தழைகளை, செடிகள் இருக்கும் தொட்டிகளில் போடுவேன். தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றுவேன்.

பருப்புக்கீரை, தண்டுக்கீரை, முடக்கத்தான், துாதுவளை, புளிச்சகீரை, புதினா, தக்காளி, கத்திரி, குடை மிளகாய், பிரண்டை, காராமணி, துளசி, திருநீற்றுப் பச்சிலை, சோற்றுக் கற்றாழை, மல்லிகைப்பூ, முல்லைப்பூ, வாழை, கீழாநெல்லி, இன்சுலின் செடி, வெற்றிலை என, பல செடிகள் உள்ளன. மல்லிகை கொடி கீழிருந்து, மூன்றாவது மாடி வரை படர்ந்து உள்ளது. 

ஒரு வாளியில், ஒரு வகை விதையை மட்டும் தான் விதைப்பேன். செடிகளில் ஊட்டம் குறையும் போது, 20 லிட்டர் தண்ணீரில், 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்து விடுவேன்.பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, அவ்வப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன். 20 நாட்களுக்கு ஒரு தடவை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி, இ.எம்., கரைசல் கலந்து தெளிப்பேன். வெயில் காலத்தில் செடி வாடாமல் இருக்க, நிழல் வலை அமைத்துஉள்ளேன்.

இயற்கையில் விளையும் காய்கறிகள், நல்ல சுவையுடன் உள்ளன. அன்றன்றே பறித்து, புத்துணர்ச்சியுடன் ஒரு கீரையை உணவில் சேர்க்க முடிகிறது. பக்கத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, தினமும் வீட்டில் இருந்து பூ பறித்து எடுத்து போவேன். வாளி, பைகளை பலகை மேல் வைத்துள்ளதால், தரைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என் மாடித் தோட்ட ஆர்வத்தை பார்த்து, 'ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்' அமைப்பினர், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கொடுத்து உள்ளனர்.

தினமும் தோட்டத்தில் வேலை செய்வது, உடற்பயிற்சியாக இருப்பதுடன், நமக்கு தேவையானதை, நாமே உற்பத்தி செய்வதும், மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வயதிலும் உடம்பும், மனதும் எப்போதும் தெம்பாக இருப்பதற்கு காரணம், இந்த செடிகள் தான். தொடர்புக்கு 94449 26128
--தினமலர் நாளிதழிலிருந்து

Saturday, 4 August 2018

வீடுகளில் நெல் அரைக்கும் இயந்திரம் - கிரைண்டர் வைக்கும் இடமே போதுமானது:

நெல் அரைக்கும் இயந்திரம் குறித்து கூறும், சென்னையைச் சேர்ந்த, 'நல்லகீரை' அமைப்பைச் சேர்ந்த ஜெகன்: சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கு, கீரை சாகுபடி தொடர்பாக பயிற்சி அளிக்க சென்ற போது, அங்கு, நெல் அரைக்கும் இயந்திரத்தை பார்த்தோம். அந்த மாநில மக்கள், வீடுகளிலேயே இந்த இயந்திரத்தை வைத்து நெல்லை அரைக்கின்றனர். தமிழக மக்களுக்கு பயன்படுமே என, இயந்திரம் தயார் செய்யும் இடத்துக்கு போய், நாலைந்து மிஷின்களை வாங்கி வந்தோம்.

அதை நண்பர்கள் சிலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்போது நிறைய பேர், இயந்திரம் வாங்கி தருமாறு கேட்டதால், 'ஆர்டர்' செய்துள்ளோம். முதல் முறை வாங்கி வந்தபோது, ஒரு மிஷினுக்கு அடக்க விலை, 40 ஆயிரம் ரூபாய். இப்போது மொத்தமாக ஆர்டர் செய்திருப்பதால், 36 ஆயிரம் ரூபாய் ஆகிறது. லாபம் எதுவுமின்றி, அடக்க விலைக்கே வாங்கிக் கொடுக்கிறோம். இதை இயக்குவது, ரொம்ப சுலபம். கிரைண்டர் வைக்கும் அளவு இடமே போதுமானது. 3 ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் இதற்கு, 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பே போதும்.

100 கிலோ நெல்லை, 45 நிமிஷத்தில் அரைத்து விடலாம். 60 - 65 சதவீத அரிசி கிடைக்கும். நெல்லை பச்சையாகவும், வேக வைத்தும் அரைக்கலாம். இந்த மிஷினுக்கு மானியம் கிடைத்தால், இன்னும் குறைவான விலையில் விவசாயி களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இயந்திரத்தை பயன்படுத்தி வரும், திண்டுக் கல்லைச் சேர்ந்த ஹரிஹரன்: இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகமுள்ள நான், விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி, அரைத்து வருகிறேன். என்னிடம், 60 நாட்டு மாடுகள் உள்ளன. நெல் அரைக்கும் போது கிடைக்கும் தவிடு, மாடுகளுக்கு தீவனமாகிறது. மிஷினில் பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லை.

அரைக்கும் போது நெல்லை அதிகமாக கொட்டினால், 'பெல்ட்' இழுக்க சிரமப்படும். கொஞ்சமாக ஒரே சீராக கொட்ட வேண்டும். மிஷின் வாங்கி ஐந்து மாதம் ஆகியும், இதுவரை பிரச்னை இல்லாமல் வேலை செய்கிறது. மோட்டா, சன்னம் என, எல்லா ரக நெல்லையும் அரைத்துள்ளேன். ரகம், ஈரப்பதத்தை பொறுத்து அரிசி கிடைக்கும். எனக்கு, 100 கிலோ நெல்லுக்கு, 65 கிலோ அரிசி கிடைத்தது. தவிடு சேகரிக்க, தனியாக உள்ள பையில் விழுந்துவிடும். ஈரப்பதம் சரியாக இல்லையெனில், அரிசி உடையும். பெரும்பாலும் குருணை வருவதில்லை. ஒன்றிரண்டு வந்தாலும் தனியாக விழுந்துவிடும்;

மின் கட்டணமும் அதிகம் ஆகாது.உள்ளூர் விவசாயிகள், நெல்லை கொண்டு வந்து அரைத்து செல்கின்றனர். அரைக்கும் கூலியாக தவிட்டை கொடுத்து விடுகின்றனர். நெல் விவசாயிகளுக்கு, இது அவசியமான மிஷின்.தொடர்புக்கு: ஜெகன்: 90420 11768 ஹரிஹரன்: 73396 97444.
--தினமலர் நாளிதழிலிருந்து


Wednesday, 13 June 2018

பிறருடைய ATM அட்டையைப் பயன்படுத்தலாமா?

பகிரப்பட வேண்டிய செய்தி, கிரி அவர்களின் தளத்திலிருந்து ......

2013 ம் ஆண்டு பெங்களுருவில் ஒருவரின் மனைவி பிள்ளைப்பேறு நிலையில் இருந்ததால், அவரால் வெளியே சென்று பணம் எடுக்க முடியாததால் கணவனிடம் தன்னுடைய SBI ATM அட்டையைக் கொடுத்து 25,000 எடுக்கக் கூறி இருக்கிறார்.

கணவர் பணம் எடுக்கும் போது பணம் எடுக்கப்பட்டதாகச் சீட்டு மட்டும் வந்துள்ளது ஆனால், பணம் வரவில்லை. இவரும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க, அவர்கள் தொழில்நுட்ப கோளாறாகி இருக்கும், இரு நாட்களில் வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் பணம் வராததால் வங்கியில் சென்று கேட்டதும், பணம் வழங்கப்பட்டது என்று கூற, இவர்கள் இருவரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நுகர்வோர் நீதிமன்றம்
பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து CCTV யில் கணவர் பணம் எடுக்கும் போது பணம் வெளியே வராததையும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த நாளில் 25,000 அதிகம் இருப்பு ஆகி உள்ளது என்பதை நிரூபித்தும் SBI ஒத்துக்கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நடந்த வழக்கில்,
பணம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை (Log) SBI சமர்பித்து, சட்டப்படி ஒருவருடைய ATM அட்டையையும் PIN யையும் இன்னொருவரிடம் கொடுப்பது தவறு எனவே, எங்கள் வங்கி தவறுசெய்யவில்லை” என்று வாதிட்டது.

தன்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றால் “Self Cheque” அல்லது அனுமதிக் கடிதம் கொடுத்து மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கூறி விட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ATM அட்டையைச் சம்பந்தப்பட்டவர் தவிர வேறு யாரும் பயன்படுத்துவது சட்டப்படி தவறு எனவே, SBI வங்கி பணத்தைத் தரவேண்டியதில்லை என்று கூறி விட்டது  .
₹25,000 கண் முன்னாடி இருந்தும் சட்ட சிக்கலால் எடுக்க முடியாமல் போனது.

சரி இது போலச் சூழ்நிலை அமைந்தால் என்ன வழி?
காசோலை பயன்படுத்துவது நல்ல யோசனை தான் என்றாலும், ஒருவேளை அப்போது வங்கி திறந்து இருக்கவில்லை என்றால் பிரச்சனை.
எனவே, UPI பரிமாற்றமே சிறந்தது.

அதாவது உங்களுடைய கணக்குக்குச் சம்பந்தப்பட்டவரின் கணக்கில் இருந்து பணத்தை UPI (BHIM, PhonePe, Google Tez, WhatsApp) செயலிகள் மூலம் அனுப்பி உங்கள் சொந்த ATM அட்டையின் மூலமாகப் பணம் எடுத்துக் கொடுத்து விடலாம்.

இது போல அவசரத்துக்கு எடுக்கப்படும் பணம் அதிகபட்சம் 25,000 க்கு மேல் இருக்காது. எனவே, பிரச்சனைகள் இல்லை. UPI பரிவர்த்தனைக்கு கட்டணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள், அவர்களையும்  எச்சரிக்கைப்படுத்துங்கள்.



கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...