Tuesday 28 November 2017

மரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!

நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.


 சிறுவர், சிறுமி விளையாட்டுகள்,
மகளிர் விளையாட்டுகள்
ஆடுவர் விளையாட்டுகள்
இரு பாலர் விளையாட்டுகள்
முதியோர் விளையாட்டுகள்
நீர் விளையாட்டுகள்
மனையக வியைாட்டுகள்
வீர விளையாட்டுகள்
ஆடற்கலை சார்ந்த விளையாட்டுகள்
என விளையாட்டுகளை  பல வகைகளாகப் பிரிக்கலாம்.

பழந்தமிழர் விளையாட்டுகள் என்றால் எப்பொழுதோ விளையாடிய விளையாட்டு என்று எண்ண வேண்டாம்.  பழந்தமிழர் விளையாட்டுகள் என்றாலும் கடந்த நூற்றாண்டு தொடக்கத்திலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள் இவை.  செக்கிழுத்த செம்மல் தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தாம் ஆடிய விளையாட்டுகளாகப் பல விளையாட்டுகளைக் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு கடந்த நூற்றாண்டில் பள்ளியில் சிறாருக்கேற்ற மரபார்ந்த விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட்டன. காலங்காலமாக நாம்ஆடிவந்த விளையாட்டுகளில்  சிலவற்றைப் பார்க்கலாம்.


இவை மட்டுமல்ல, வீர விளையாட்டுகள் முதலான தலைப்புகளின் கீழ் நாம் பார்த்தால்  மேலும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை அறிய இயலும். 

இவற்றுள் இளஞ்சிறார் விளையாட்டுகளைத் தொடக்கத்தில் கற்றுத்தர வேண்டும். உச்சரிப்பு விளையாட்டு, வினா விடை விளையாட்டு முதலான மொழி சார்விளையாட்டுகள், மாணாக்கர்களின் அறிவுத்திறனையும் நிறைவாற்றலையும் வளர்ப்பன. அவற்றைத் தொடக்கப்பள்ளியிலேயே கற்றுத் தர வேண்டும். 

மாணாக்கர்களின் அகவைக்கேற்ற விளையாட்டுகளைப் பகுத்து விளையாட்டுப் பயிற்சி அளிக்கப் பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும்.  விளையாட்டு என்பது  உடற்பயிற்சிக்கானதும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமன்று. வாழ்நாள் முழுவதும் சிறப்பு  தரும் கல்வியுமாகும்.


தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள் 
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12?  

  

தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி

பரபரப்பும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையைச் சுமந்து கொண்டு, தங்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டு எதை நோக்கியோ இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கரகாட்டம், பறையாட்டம், கும்மி, காவடி, மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து போன்ற வண்ணமயமான கலைகளும், கபடி, சிலம்பம், வளரி (பூமராங்), வாள் சண்டை, வடம் இழுத்தல், ஈட்டி எறிதல், வழுக்கு மரம் ஏறுதல், வில் அம்பு எய்தல் போன்ற தமிழ் பண்பாடு மணக்கும் விளையாட்டுகளும் இன்றுள்ள பிள்ளைகளுக்கு அந்நியமாகிவிட்டன.

பாடப்புத்தகங்களின் அழுத்தத்தில் தவிக்கும் பிள்ளைகளுக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவோ, கற்றுக்கொள்ளவோ நேரமில்லை. கற்றுத்தரவும் யாருமில்லை. இந்தப் பேரவலத்தைப் போக்குவதற்காகவே டாக்டர் ப்ரீத்தா நிலா ‘கற்றல் இனிது’ வாழ்வியல் பள்ளியைத் தொடங்கியிருக்கிறார்.


"கற்றல் இனிது" பள்ளி செயல்பாடுகள்:
தேனி மாவட்டம், வீரபாண்டியில் செயல்படும் இந்தப் பள்ளியில் தமிழர் கலைகள், கதை சொல்லல், பாரம்பரிய வேளாண்மை, சிறுதானிய சமையல் முறை, பாரம்பரிய வைத்திய முறை என நம் மூதாதையர்கள் வாழ்ந்த அத்தனை வாழ்க்கை முறைகளையும் கற்றுத்தருகிறார்கள்.

கலைகள், விளையாட்டுகள் தவிர, விவசாயத்தின் அவசியம், விவசாயம் குறித்த விழிப்புணர்வு, இயற்கை விவசாய முறைகள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல், உயிர் உரங்கள், மண்புழு உரம் போன்றவைகளைத் தயாரித்தல் போன்றவைகளும், நோய் வராமல் உடல் நலனைப் பாதுகாத்தல், இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தல், மன நலனுக்கான பல்வேறு கதைகளை மாணவர்களுக்குச் சொல்லுதல் போன்றவைகளும் இந்த பள்ளியில் கற்றுத்தரப்படுகின்றன.

‘கற்றல் இனிது’ பள்ளி இருக்கும் சூழலே ஈர்க்கிறது. தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒரு மைதானம். ஒருபுறம் அழகிய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் புல்வெளியால் நிரம்பியிருக்கிறது. “அண்மையில் கோடைகாலப் பயிற்சிகள் நிறைவடைந்தன.

"இப்போது சனி, ஞாயிறு களில் வகுப்புகள் நடக்கின்றன. தொடக்கத்தில் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி என்று நிர்ணயித்தோம். ஆனால், நிறைய பெரியவர்கள் எங்களுக்கும் பயிற்சி தாருங்கள் என்றார்கள். அதனால் இப்போது அந்த விதிமுறையைத் தளர்த்தியிருக்கிறோம். தேர்ந்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பயிற்சிகளை வழங்குகிறார்கள். அவர்களுக்குத் தருவதற்காக மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுந்த சூழல் வாய்க்கும்போது இந்த பள்ளி முற்றிலும் இலவசப் பள்ளியாக இயங்கும்" என்கிறார் டாக்டர் ப்ரீத்தா.

மதிப்பெண்களைத் தேடி....
“இன்றைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் என்ன திறன் இருக்கிறது? அந்தத் திறனை எப்படி மேம்படுத்துவது? என்பதைப் பார்க்காமல் அதிக மதிப்பெண்களைத் தேடி ஓடும் பந்தயக் குதிரைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் சேர்ப்பவர் தான் வெற்றியாளர்கள் எனும் தவறான சித்தாந்தம் உருவாகிவிட்டது.

மதிப்பெண் வேட்டைக்காக, அரசுப் பள்ளிகளிலிருந்து, ஆங்கிலவழிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைத் தள்ளுகிறார்கள். இதனால் புத்தகப்படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தும் மாணவர்கள் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வேறு எந்தத் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கூட, தங்கள் வாழ்க்கையில் நல்லதொரு வெற்றியைப் பெறமுடிவதில்லை என்பதுதான் இன்றைய நிலை.  

பள்ளியும் கல்லூரியும் திணிப்பது என்ன?
வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான பல்வேறு திறன்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில்தான் கற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அனைவருடனும் இயல்பாகப் பழகும் திறன், சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன், தொழில்நுட்பத் திறன், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன் என்று வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ அடிப்படைத் திறன்கள் இருக்கின்றன. இவைகளையெல்லாம், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ கற்றுக் கொள்ளக்கூடிய சூழல் தற்போது இல்லை. 

மனப்பாடம் செய்து படிக்கும் வழிமுறையை மட்டுமே ஆசிரியர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி அவதிப்படுன்றனர். எந்த ஒரு தோல்வியையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையோ, எதிர்கொள்ளும் துணிவோ சிறிதுகூட இருப்பதில்லை.

உடல், மன நலன்களுக்கு நாம் என்ன செய்கிறோம்?
இன்றைய மாணவர்களிடத்தில் உடல் நலனுக்கான விளையாட்டுகளோ, மன நலனுக்கான பயிற்சிகளோ இல்லாமல் போய்விட்டது. ஓடியாடி விளையாடுவதை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டரிலும். மொபைல் போனிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டுகளில் பல வன்முறையான செயல்களை மையமாகக் கொண்டதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின்னணுச் சாதன விளையாட்டுகளும் மாணவர்களை மன அழுத்தங்களுக்கே உள்ளாக்குகின்றன.  

- தேனி மு. சுப்பிரமணி

தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள் 
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12? 


வாழ்வியல் கலை விளையாட்டு!

காணாமல் போன மரபு விளையாட்டுக்களை கண்டுபிடித்து வரும் இனியன்:

இன்றைய குழந்தைகளை சொக்குப்பொடி போட்டு மயக்கி வைத்துள்ளது, கம்ப்யூட்டர் விளையாட்டு. இதைவிட எளிதாக, ஸ்மார்ட் போனின் பிளே ஸ்டோருக்குள், விளையாட்டு கொட்டிக் கிடக்கிறது.'ஓடி விளையாடு பாப்பா' என்று சொல்ல, எந்த பாரதியும் இன்று இல்லை. அப்படியே சொன்னாலும் அதை கேட்கும் மனநிலையிலும், இந்த தலைமுறை குழந்தைகள் இல்லை. இவர்கள் மாறி போனதற்கு, அன்னிய மோகமும் காரணம்.இதில் என்று மூழ்க ஆரம்பித்தோமோ அன்றே நம் அடையாளம், பாரம்பரியம் என பல விஷயங்களை, மறந்து போனோம் அல்லது மறைக்கப்பட்டன.


இப்படி தொலைக்கப்பட்டவற்றுள் ஒன்று, மரபு விளையாட்டு. இதற்காக, ஏழு கடல், மலை தாண்டிப் போகவில்லை. கிராமங்களில் உள்ள பாட்டிகளை சந்தித்து, தகவல் சேகரித்தேன். தற்போது தமிழகம் முழுவதும் பயணம் செய்து, ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். முதலில் மரபு விளையாட்டுக்களை பற்றி, 'டாக்குமென்டரி' படம் எடுக்க முடிவு செய்து, ஆரம்பித்தேன். பின், பத்தோடு பதினொன்றாக, ஒரு புத்தகம் படித்து மூடி வைப்பது போல் முடிந்துவிடும் என்பதால், அதை நிறுத்தி, பள்ளிக் குழந்தைகளை சந்திக்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள பள்ளிகளுக்கு போய் நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று விளையாட்டு சொல்லிக் கொடுப்பேன். நான் சந்தித்த வரையில், நம் மரபு விளையாட்டுக்களை ஆர்வத்துடன் குழந்தைகள் விளையாடுகின்றனர். தமிழர்களிடமிருந்து மறைந்துபோன விளையாட்டுக்கள், 180க்கும் மேல் இருக்கும். இதை உள் விளையாட்டு, வெளி விளையாட்டு என பிரித்து, இரண்டாவது வகையை மட்டும், குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறேன். விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு கிடையாது; இது ஒரு வாழ்வியல் கலை. காலப்போக்கில் இதை மாற்றி விட்டோம். எந்த விளையாட்டும் காரணத்தோடு தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான விடை தெரியவில்லை என்றாலும், அதில் இருக்கக் கூடிய உடலியலும், உளவியலும் புரிய ஆரம்பித்தது.

பள்ளியில் மதிய உணவு முடித்ததும், குழந்தைகளை அமர வைத்து, கதை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவேன். பின், விட்ட இடத்தில் இருந்து விளையாட்டை துவங்குவேன். பாயும் புலி, கோலெடுத்தான், ஆடு புலி ஆட்டம், வாள் எடுத்தான், கிளிப்பாரி என, ஏகப்பட்ட விளையாட்டுகளை வைத்து உள்ளேன்.

இவற்றை கற்க விரும்பும் குழந்தைகள், எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புக்கு: 81900 49738.

--தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள் 
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  
வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!
பெற்றோர்களுக்காக


Tuesday 14 November 2017

கறிவேப்பிலையின் மருத்துவ நற்குணங்கள்:

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன் குறித்து கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி:

 

கருமுட்டை உற்பத்தி: கறிவேப்பிலையில் உள்ள, 'கார்பசோஸ்' என்ற ஆல்கலாய்டுகள், கருமுட்டை உற்பத்தியை துாண்டுகிறது.

பித்த மற்றும் கருப்பை சூடு: 20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து, காலையில், வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், பித்த மற்றும் கருப்பை சூடு சரியாகும்.

கறிவேப்பிலை - 100 கிராம், மிளகு - 5 கிராம், சீரகம் - 5 கிராம், தோல் நீக்கிய சுக்கு - 2 கிராம், பெருங்காயம் - 2 கிராம் என, அனைத்து பொருட்களையும் தனித்தனியே இளம் வறுவலாக வறுத்து, உப்பு சேர்த்து அரைத்து துாள் செய்து கொள்ளவும்.
வயிற்றுப் பொருமல், மந்தம், அஜீரணம்:
தினமும் பகல், இரவு இரண்டு நேரமும் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்க்க, வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, பித்த வாயு, மந்தம், அஜீரணம் சரியாகும்.

 தழும்பு மறைய: சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்துாரி மஞ்சள், கசகசா, பட்டை சேர்த்து அரைத்து, அம்மை நோயால் வந்த தழும்புகளில் தேய்த்து வந்தால், தழும்பு மறையும்.
  • இரும்பு சத்து, பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள கறிவேப்பிலை, ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
  • முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, 'அமீபியாசிஸ் 3' எனப்படும் ஒரு வகை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த, இன்றியமையாத மூலிகை, கறிவேப்பிலை.
  • வயோதிகத்தில் வரும், 'அல்சைமர்' எனும் ஞாபக மறதியைக் குறைக்கும். 
  • உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவை சீர்படுத்தி, பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. 
  • கல்லீரல் மற்றும் கணையத்தை பலப்படுத்துகிறது.  கறிவேப்பிலை சாறு அருந்தி வர, கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • ரத்த சர்க்கரை அளவை, 42 சதவீதமும், ரத்தக் கொழுப்பை, 30 சதவீதமும் கறிவேப்பிலை குறைப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 
  • கறிவேப்பிலையில் சிறிது நீர் சேர்த்து, சங்கால் அரைத்து முகப்பருவில் தடவினால், பருக்கள் மறையும்.
  • இளநரையை கறிவேப்பிலை தடுக்கிறது.
  • கறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து, தினமும் மூன்று மாதங்கள் பருகி வர, இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள தளர்ந்த உடலை குறைத்து, அழகை மேம்படுத்தும்.
  • கறிவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து, காலை, மாலை, ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நீர்க்கோவை, சூதக வாயு தீரும்.
கறிவேப்பிலையின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம். உணவே மருந்து.

 --தினமலர்  நாளிதழிலிருந்து.

Sunday 12 November 2017

வலசை வரும் பறவைகள் - சில தகவல்கள்:


  • பறவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு.
  • வலசை என்றால் இடம் விட்டு இடம் பெயருவது என்று பொருள்.
  • பொதுவாக உலகின் வடபகுதிலிருந்து தென் பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலத்தில் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும். இதனால், அங்கு மீன், பூச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவுகள் பறவைகளுக்குக் கிடைக்காது. இதனால், காடுகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை சார்ந்து வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மிதவெப்பமண்டல நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.

  • உலகெங்கும் பறவைகளின் வான்வழி வலசைப் பாதைகள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. இந்தி யாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான் வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன.
  • அக்டோபர் தொடங்கி மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்கி இருக்கும்.

  • வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்களைக் கடந்து இந்தியாவுக்கு வருகின்றன. அப்படி வரும்போது வழியில் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால், வலசை கிளம்பும் போதே வழக்கத்தைவிட கூடுதலான உணவை உண்டு உடம்பில் கொழுப்பை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன.

  • உள்ளான் இன பறவைகள், காட்டு வாத்துகள், சிலவகை குருவி இனங்கள், கொக்கு - நாரை இனங்கள் இவற்றோடு கழுகு இனங்களும் இந்தியாவுக்கு வலசை வருகின்றன.
  • சில பறவைகள் பகலில் இடம்பெயரும்; சில இரவில் பறக்கும். சூரிய வெப்பத்தால் சக்தி இழந்து சோர்ந்து விடாமல் இருக்கவே சில பறவைகள் இரவு நேரப் பயணம் மேற்கொள்கின்றன. இவைகள் இரவில் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து, தாங்கள் செல்ல வேண்டிய திசையை எளிதாக அறிகின்றன.

  • சில பறவைகள், ஒரு நாளைக்கு ஐம்பது கி.மீ தூரம் பறக்கும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் அடுத்த இலக்கை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும். சிலவகை பறவைகள், எத்தனை ஆயிரம் கிலோ மீட்டரையும் தொடர்ச்சியாக பயணித்து இலக்கை அடைந்துவிடும்.

  • கோண மூக்கு உள்ளான் போன்ற பறவைகள் இரண்டு மூன்று நாள்கள்கூட தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டவை. வாத்து இனங்கள் ஒரு நாளில் 150 கி.மீ பறந்தால் அடுத்த ஒருவாரத்துக்கு எங்காவது ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.
 வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?  
இன்று வலசை பறவைகள் தினம் 
வலசை பறவைகள்


விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''

மக்கள் பண பரிவர்த்தனைக்கு திறன் பேசிகளை (Smartphones) அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர், எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் Credit card, Debit  card மற்றும் ATMகள் அவசியமில்லாததாகவும்  பயனற்றதாகவும் ஆகிவிடும். வங்கிகளில் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு முடிவுகட்டப்பட்டு, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது :
‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும்,  இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது. படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்.''
  
--தினமலர் நாளிதழிலிருந்து.


சமீபத்தில்வங்கி பணியில் உள்ள நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது சொன்ன தகவல் இது.

"அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் வந்துகொண்டிருக்கிறது, அதே போல வங்கியிலும் வரப்போகிறது. முதல் படியாக  வாடிக்கையாளரின் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் விதமாக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டு City Union Bank ல் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 125 விதமான செயல்பாடுகளின் கேள்விகளுக்கான பதில்களை அது தரும், இந்த ரோபோ வெற்றிபெற்றால் மேலும் பல பணிகளுக்கு பல ரோபோக்கள் வரும் அப்படி ஒரு சூழ்நிலையில் வங்கிப்பணியாளர்களின் தேவையும் மிகவும் குறைந்துவிடும். இன்னும் ஐந்து வருடங்களில் வங்கிப்பணியாளர்களின் வேலைக்கும் நிரந்தரமின்மையான தன்மை வந்துவிடும்" 

(சிட்டி யூனியன் வங்கியின் எந்திரன் லக்ஷ்மி)

திறன் பேசிகளும் பணபரிவர்தனையும்:

பணபரிவர்தனைக்கு உபயகமாக உள்ள செயலிகள் (Apps) 
  1. BHIM (மத்திய அரசின் UPI App)
  2. Paytm 
  3. PhonePe 
  4. Tez (Google ன் App)
திறன் பேசி பயன்படுத்தும் கடைகளில் பணத்தை செலுத்துவது மிக எளிதாக உள்ளது.  பணம் செலுத்த வேண்டியவருடைய தொலைபேசி எண் (அ) QR Code இருந்தால் போதும் இந்தச் செயலிகளை பயன்படுத்தி 2 நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம்.

BHIM UPI (Unified Payments Interface) App:

நமது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கொண்டுதான் இந்த செயலியை இயக்க முடியும். அந்த தொலைபேசி எண்ணுடன் எத்தனை வங்கிகளில் எத்தனை கணக்கு இருந்தாலும் அத்தனையையும் இந்த செயலியில் இணைத்து கொள்ளலாம். இதில் நமது வங்கி கணக்கில் இருந்து அடுத்தவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்று விடும்.

இப்போது ஒரு கடைக்கு செல்கிறீர்கள் பொருள் வாங்கிவிட்டு இந்த செயலி மூலம் கடைக்காரரின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி விடலாம். சேவை கட்டணம் எதுவும் கிடையாது. பணம் கொடுக்கவேண்டியவருடைய QR code வேண்டும் அல்லது அவரது வங்கி கணக்கை நமது செயலியில் சேர்க்க வேண்டும் அவ்வளவே.

PhonePe மற்றும் Tez செயலிகளும் BHIM போலவே செயல்படுபவை.

Paytm App:

இந்த செயலியில் நமது Paytm செயலியின் கணக்கில் பணம் போட்டு வைத்து அடுத்தவருக்கு அனுப்பலாம் அல்லது பணம் செலுத்த நேரிடும் போது இந்த செயலியின் உள் சென்று வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து அனுப்பலாம்.


இந்த செயலியின் கணக்கில் உள்ள பணத்தை நமது வங்கி கணக்கிற்கும் மாற்றி கொள்ளலாம், இதற்க்கு 3% சேவை கட்டணம் உண்டு. வங்கியில் KYC விளக்கங்கள் கொடுத்து இருந்தால் இந்த சேவை கட்டணம் கிடையாது.

Whats App செயலியும் UPI வசதியை கொண்டுவர உள்ளதாக ஒரு செய்தி.

மேலும் செயலிகளை பயன்படுத்துவது பற்றிய தகவல்கள் மற்றும் Technology பற்றிய தகவல்களுக்கும் குறிப்பாக GOOGLE சேவைகள் பற்றி அறிய Giriblog என்ற இணைய தளத்தை பார்வையிடுங்கள்.

“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ
நன்கொடை பெறுபவர் கொடுப்பவர் கவனத்துக்கு!
மின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள்!


Wednesday 8 November 2017

கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்

கண்ணாடி அணிந்து துன்புறும் மக்களுக்கு எளிய பயிற்சி முறை மற்றும் மருத்துவம்.

கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய...Mudra for eye issues ..Ayya Pasukkanna


குழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா?.....

  • துள்ளி விளையாடும் பிஞ்சு குழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா?. 
  • நாம் என்னென்ன தவறு செய்கிறோம்? 
  • முதல் ஏழு வருடங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது என்ன என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை அமையும்.
தெரிந்து கொள்ளுங்கள். -- காயத்ரி இளங்கோ (Child Psychologist) அவர்களின் 11 மற்றும் 13 நிமிட காணொளிகள்.

Gayatri Ilango - Child Psychologist  100% ORGANIC SCHOOL 

தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
வாழ்வியல் கலை விளையாட்டு!
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  
வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!
பெற்றோர்களுக்காக


கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...