Friday 25 December 2015

Awareness on Solid Waste Management: (Reduce, Reuse, Recycle)

மீபத்தில் குவஹாத்தியில் முனிசிபாலிட்டி குப்பை கொட்டும் பகுதிக்கு (GMC Dumping Site) முதல் முறையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்து. நகரத்திலிருந்து 25 km தொலைவில் இருக்கிறது, அந்த பகுதியில் இருந்த ஈரநிலத்தை (wetland) அழித்து அந்த இடம் உருவாக்கப்பட்டிருந்தது.  நகரத்தில் சேகரமாகும் குப்பைகளை அள்ளிக்கொண்டுவந்து குவியலாக கொட்டிவிடுவது. அங்கு பார்த்த காட்சிகள், அனுபவங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கமே இந்த பதிவு. இந்த பிரபஞ்சமே ஒரு முழுமை; அதாவது எற்றம் இறக்கம், இன்பம் துன்பம், இரவு பகல் இருப்பது போல ஒரு இடம் தூய்மையாக இருந்தால் ஒரு இடம் அசுத்தமாக இருக்கும். அந்த விதியை உடைத்து அப்படி ஒரு இடம் இல்லாமல் செய்தால் தான் வருங்கால சந்ததிகள் நன்றாக வாழ்ந்து அவர்களின் சந்ததிகளுக்கு ஒரு நல்ல இடத்தை வாழ்வதற்கு விட்டு செல்ல முடியும்.







பழைய குப்பை குவியல்கள்


புதிய குப்பை கொட்டப்படும் இடம்  கொட்டப்படும் குப்பையில் உள்ள மறு சுழற்சி பொருட்களை எடுக்கும் மக்கள்
                                                                                                                                                                     

முதலில் குப்பை வகைகளை தெரிந்து கொள்வது நல்லது,

மட்கும் குப்பை :::: மண்ணில் வீசி எறிந்த பின் உயிரினங்களால் சிதைக்கப்பட்டு மட்கி மண்ணோடு மண்ணாகும் பொருட்கள் அனைத்தும் மட்கும் குப்பையே. 

உதாரணம்: உணவு & காய்கறி கழிவுகள், பருத்தி துணி, மர பொருட்கள், காகிதம், காகித அட்டைப்பெட்டி, இரும்பு, மற்றும் பல.....

மட்காத குப்பை :::: மண்ணில் வீசி எறிந்த பின்னர் மண்ணால் அரிக்கபடாமல், மண்ணில் உள்ள உயிரினங்களால் சிதைக்கபடமுடியாமல் உள்ள பொருட்களே மட்காத குப்பை.  

உதாரணம்: Polythene, glass, rubber(sandals, shoes), plastic(chair, bottle caps,etc..), wrappers and covers of eatables (chocolate cover, oil cover, milk cover, tooth paste cover,etc..), Electrical and electronic waste (bulbs, phone, computer, etc..), tin (perfume tin, beverage tins,etc..),ballpoint pens, tooth brush, water bottles, tires, chemical waste(automobile batteries, watch & calculator battery ), etc...


இந்த மட்கும் மட்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து முக்கியமாக பாலிதீன் பைகளில் போடாமல் நேரடியாக குப்பைதொட்டிகளில் போடுவது மக்களாகிய நமது சமுதாய கடமை. குப்பைகளை ஒரே இடத்தில கொட்டுவதால் என்ன கெடுதல்? குப்பைகள் குவித்து ஒரே இடத்தில் கொட்டுவதால் அதன் மட்கும் தன்மை மட்டுபடுத்தப்படுகிறது. காற்றோட்டம் இருந்தால் தான் குப்பைகள் எளிதில் மட்கும். 

மேலும் ஈர தன்மை அதிகமுள்ள கழிவுகளிலிருந்து வெளியேறும் நீர் பல பொருட்களுடன் கலந்து துர்நாற்றத்தை வெளியேற்றுகிறது. இதனால் தொற்று நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதனால் சுவாச கோளாறு, சரும கோளாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மழைக்காலங்களில் இந்த குப்பைகளில் இருந்து அதிக அளவில் வெளியேறும் கழுநீர் (Leachate) நிலத்தடி நீர், ஏரி, குளம் மற்றும் ஆற்று நீரில் கலக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் நீர் மாசுபடுத்த படும் விதத்தை கீழே காணலாம் .

(கழிவு நீரினால் நிலத்தடி நீர், ஏரி, கிணறு  மாசுபடும் விதம்)

தற்போதுள்ள குப்பை மேலாண்மை திட்டம் ஒரு பார்வை:  

முதல் இரண்டு வருடங்களுக்கு குப்பைகள் குவியலாக மட்டுமே கொட்டப்படும் அதை ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு மூன்று வருடம் கழித்து குப்பை குவியலிலிருந்து மட்கிய குப்பைகள் பிரித்து எடுக்கப்பட்டு விற்கபடுகிறது. பிறகு புதியதாக சேகரமாகும் குப்பைகள் தனிஒரு இடத்தில் கொட்டப்படும். இவ்வாறாக சுழற்சி முறையில் கழிவுகள் அகற்றப் படுகின்றன. இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவெனில் குப்பைகள் சுழற்சி செய்யப்படுவதை விட குப்பைகள் சேகரமாகும் வேகம் அதிகம்; காரணம் மக்கள் தொகை பெருக்கம். சில இடங்களில் தனியார் நிறுவனங்களும் சில இடங்களில் அரசும் இந்த மட்கிய குப்பைகளை பிறத்து விற்கும் பணியை செய்கின்றன.


  (மட்கி துகளாக மாறிய குப்பையை சலிக்கும் இயந்திரம்                                         (மூன்று வருடம் கழித்து மட்கி ரமாக         மாறிய குப்பை                                      (16 mm சல்லடை) மற்றும் மூன்று வருடம் கழித்தும் மட்காத பாலிதீன்)                  விற்பனைக்கு  தயாராகிறது)                                                                  
                                                              
                                                           
நாம் செய்ய வேண்டிய கடமைகள்:  

இதை அரசாங்கம் தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியம். இந்த பிரச்சனையின் வேர் வரை சென்று முளையிலேயே சரி செய்தால் தான் நம் வருங்கால தலைமுறை நம்மை பார்த்து அக்கறையுடன் செயல்படுவார்கள்.
REDUCE:(குறைதுகொள்ளுதல்):நாம் பயன்படுத்தும் வேண்டாத பொருட்களை, அத்தியாவசியமில்லாத பொருட்களை குறைத்து  கொள்வது பாலிதீன் பைகளை அறவே தவிர்ப்பது நல்லது
REUSE:(மறுஉபயோகம்):உபயோகித்த பொருட்களை மறுபடியும் உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது சிறந்தது. ஒரு முறை உபயோகம் (use and throw) தவிர்ப்பது நல்லது. 
RECYCLE: (மறுசுழற்சி):மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை குப்பையில் எறியாமல் கடைகளில் கொடுப்பது நன்று. (பிளாஸ்டிக், இரும்பு, அலுமினிய பொருட்கள், அட்டைபெட்டி, காகிதம்)
இந்த முறைகளை ஆரம்பத்திலேயே பயன்படுத்தி குப்பையின் அளவை நம்மால் குறைக்க முடியும். இந்த வழியில் குழந்தைகளையும் ஈடுபடுத்துதல் நல்ல மாற்றத்தை கொண்டுவரும், ஏனெனில் எதிர்காலம் அவர்களுடையது. இந்த Waste management பற்றிய மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட வலைதலதளம் மற்றும் காணொளியை    பாருங்கள். குறிப்பாக ஆமீர்கான் அவர்களின் சாத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சி மிகுந்த உபயோகமுள்ளதாய் இருக்கும்


https://www.youtube.com/watch?v=qimRK2Wzhuw 
(Satyamev Jayate Season 2 | FULL Episode # 3 | Don't Waste your Garbage - Tamil )

Monday 7 September 2015

பார்த்ததில் பிடித்தது

My clicks

படித்ததில் பிடித்தது 1

                                                 சுவாமி விவேகனந்தர்

1) மனதை ஒரு செயலுக்கு பழக்கபடுத்தி விட்டால் நம்மை அறியாமலேயே அந்த செயல் ஒரு பழக்கமாகவும் பிறகு வழக்கமாகவும் மாறுகிறது.

2) மினசாரமும் மின்சார உபகரணங்களும் உள்ளது என்று வைத்துக்கொள்வோம், மின்சாரம் காத்தாடிக்கு சென்றால் காற்று வருகிறது, விளக்கிற்கு சென்றால் வெளிச்சம் வருகிறது. அதே போல மனம் என்பது மின்சாரத்திற்கு ஒப்பானது. மனம் கண்களுடன் சேர்ந்தால் பார்க்கிறோம், காதுடன் சேர்ந்தால் கேட்கிறோம் புலன்களான கண்ணும் காதும் வெறும் ஜடங்கள் அவைகளுடன் மனம் சேர்ந்தால் மட்டுமே இயக்கம்.

                                                                    ஓஷோ 

                                     அற்புதத்தில் அற்புதம்

1) நீங்கள் யார் என்பதை நீங்கள் உணர்ந்தவுடன் எல்லா நோய்களும் பறந்துவிடும். உங்கள் சுய அறிவை மறைத்து வைப்பதாலும், உங்களை நீங்கள் புறக்கணிப்பதாலும்தான்  நோய்கள் நிலைகொள்கின்றன.

2) வெளியே பார்க்கும் கண்களை மூடிக்கொள்ளும் போது கண்கள் வழியாக செயல்பட்ட அந்த ஆற்றல் உள்நோக்கி திரும்ப ஆரம்பித்துவிடுகிறது .

3) ஒரு மரத்தை நெருங்கினால் இனிய உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வு உங்கள் உள்ளிருந்து வருவது, மரத்திலிருந்து வருவதன்று. மரத்திடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமற் போவதால் நீங்கள் நிம்மதி அடைகிறீர்கள்.

4) பிரபஞ்சமே உன்னை வேண்டும் போது-கடவுளும் உன்னை வேண்டும் போது ஒரு அர்த்தம் , முக்கியத்துவம், நறுமணம் பிறக்கிறது.

5) களங்கமான வினா:பதில் தெரிந்து கொண்டே வினா கேட்பதுகளங்கமற்ற வினா: பதில் தெரியாமல் அறிந்து கொள்ளும் நோக்கோடு கேட்கும் வினா.

6) பொறுப்புணர்வை ஏற்காதவரை நீங்கள் உள்ளீடற்றவராகத்தான் இருக்க முடியும், மேல் மட்டத்தில்தான் மிதந்து கொண்டிருக்க முடியும், ஆழங்களுக்குள் செல்ல முடியாது.

7) அகபோருக்கான சரியான சொல் உராய்வு. உங்களுக்குள் உராய்வு இல்லையென்றால், நீங்கள் மேலோட்டமான ஆற்றலையே பயன்படுத்துவீர்கள்.

8) மனதோ (அ) உடலோ சொல்வதை கேட்பதில்லை என்ற முடிவை எடுத்து பாருங்கள் உள்முரண்  தோன்றும், உள்முரண் உராய்வை ஏற்படுத்தும்.

9) மனமும் , உடலும் எளிமையான, அற்பமான விஷயங்களுக்கே நம்மை இட்டுச்செல்லும். அதனை எதிர்த்து கடினமான செயல்களுக்கு உட்படும்போது  நமக்குள் ஒரு சக்தி பிறக்கிறது.

10) நீங்கள் ஒரு முயற்சி  செய்து பார்க்க விரும்பினால் வெற்றி பெற்றே தீரவேண்டும், இல்லாவிட்டால் முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

11) வெற்றி பெற்றே தீருவது என்ற தீர்மானம் எடுத்த பிறகே முயற்சியில் இறங்குங்கள். தோற்கும் போறல்ல இது வென்றே முடிக்க வேண்டிய போர் இது.

 12) நீங்கள் ஒரு முறை வென்றுவிட்டால் வேறு அடுக்கின் ஆற்றலை வென்றுவிடுவீர்கள்.




Sunday 6 September 2015

என்னை பற்றியும் எழுத்தின் நோக்கம் பற்றியும்.....


 என்னை பற்றி

ஒரு தம்பி, ஒரு தங்கை  உள்ள  5 பேர் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் தந்தைக்கு பின் பொறுப்புகளை ஏற்க்கபிறந்தவன். அண்ணன், அக்கா, மாமா, அத்தை, சித்தி, சிற்றப்பா, பெரியம்மா, பெரியப்பா என அனைத்து சொந்தங்களும், நல்ல நண்பர்களும், இறை நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கை. சொந்த வீடு, படிப்பு மற்றும் மேற்சொன்ன சொந்தங்களை தவிர வேறு சொத்துக்கள் என்று  எதுவும் கிடையாது. படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல உள்ள சூழ்நிலை.

குறை என்று இல்லாமல் வாழ்க்கை இருக்குமா?

நான் அதிகமாக எதுவும் பகிர்ந்து கொள்ளாத ஓர் ஆஆஆஆசாமி, யாருடனும் அவ்வளவாக பகிர்ந்து கொள்ள மாட்டேன், ஏனோ என்னை பார்பவர்களுக்கு நான் ஒரு perfect person என்ற எண்ணம் தோன்றி விடுகிறது, அதாவது image  damage பண்ண நான் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. அனைவரிடமும் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவைகளினால் hai  என்றால் hai bye என்றால் bye, அடுத்தவர் என்ன சொன்னாலும் சரி என்று ஏற்று கொள்வது. எனவே எனது அபிப்ராயத்தை யாரும் கேட்பதும் இல்லை நானும் சொல்வதும் இல்லை எனது குடும்பத்தை தவிர.

கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் போல் தெரிகிறது.


சரி எதற்கு எழுத வேண்டும்?


தொடர்ந்து பேசும் பொழுதும், எழுதும் பொழுதும் நாம் நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடியும். மனதில் போட்டு குழப்பி கொண்டிருக்கும் விஷயங்களை எழுத்து வடிவில் கொண்டு வர நிறைய யோசிக்க வேண்டும் வார்த்தைகளை தேட வேண்டும் இந்த செயல்களினால் நாம் தெளிவான ஒரு பாதையை வகுத்து கொள்ள முடியும். நம்மை நாம் நம்மோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். மேலும் அனுபவங்களை மறந்து போக வாய்ப்புகள் அதிகம், அந்த சமயங்களில் நாம் நம்மை தேடி எடுத்து கொள்ள முடியும்.

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...