Sunday 29 May 2016

சதுரகிரி மலை பயணம்: 1

அறிமுகம்: ஒரு நாள் வலைதளத்தில் தேடிகொண்டிருந்தபோது சதுரகிரி மலையைப் பற்றி படிக்க நேர்ந்தது, பின் தேடி தேடி சக்தி விகடனில் வந்த சதுரகிரி பற்றிய தொடர் முழுவதையும் படித்தேன், அதிலிருந்து ஒரு முறையாவது சதுரகிரி மலையையும் அங்கு உறையும் மஹாலிங்கங்களையும் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.  நான்கு புறமும் மலையால்  சூழப்பட்ட இடமானதால் இத்தலம் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. பழமை வாய்ந்த கோவில்கள் சென்று இறைவனை தரிசிப்பது எனக்கு பிடித்த விஷயங்களுள் ஒன்று, அதிலும் குறிப்பாக மலை ஏறி தரிசிப்பது மிக மிக பிடித்த விஷயம், அப்படியிருக்கும் போது என் ஆர்வத்தை பற்றி கேட்கவா வேண்டும். 

எண்ணங்களின் நிறைவேற்றம்: நாம் எவ்வளவு உறுதியாகவும், விருப்பத்துடனும் எண்ணுகிறோமோ அவ்வளவு விரைவில் அந்த எண்ணங்கள் நிறைவேறும். மேலும் சித்தர்கள் என்ற வார்த்தையை கேட்டாலே, அவர்கள் சர்வ வல்லமை படைத்தவர்கள், பஞ்ச பூதங்களை வென்றவர்கள், அஷ்டமாசித்திகளை பெற்றவர்கள், சித்து விளையாட்டுகளில் தேர்ந்தவர்கள் என்ற எண்ணமும் அவர்களை பார்க்க வேண்டும் என்றும் தோன்றும். பதினென் சித்தர்கள் சதுரகிரியில் வாழ்ந்தார்கள், பக்தர்களுக்கு ஆசிவழங்கி வருகிறார்கள் என்ற செய்தியும் கூட மலைக்கு செல்ல மிக பெரிய தூண்டுதலாக அமைந்தது. 

திருச்சி-மதுரை-கிருஷ்ணன்கோவில்-வத்ராப்-தானிப்பறை-சதுரகிரி இதுதான் வழி. சதுரகிரி எங்கே இருக்கிறது?


(http://sathuragirihills.com/about-us/)

பயணம் ஆரம்பம்: 2011 மே 16 அன்று மலைக்கு நான் மட்டும் செல்வதாக முடிவெடுத்தேன், அடுத்த நாள் பௌர்ணமி. இதற்கு முன் அங்கு சென்றதில்லை என்றாலும் தோ ஒரு நம்பிக்கையில் கலை 10 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன். வழக்கமாக அம்மாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். திருச்சி மலைகோட்டை வாயிலில் பிள்ளையார் சந்நிதியை அடுத்து ஒரு புத்தக கடையில் முன்னர் ஒரு நாள் பார்த்து வைத்த "சதுரகிரி சித்தர்கள்" என்ற புத்தகத்தை வாங்கிகொண்டு மத்திய பேரூந்து நிலையத்தில் மதுரைக்கு வண்டி ஏறும் போது மணி 12 க்கு மேல் இருக்கும். நான் மதுரைக்கு செல்ல ஏறிய வண்டி சுற்று வண்டி போல, திண்டுக்கல் செல்லும் வழியில் மணப்பாறை வரை சென்று அங்கிருந்து கிராமங்கள் வழி சென்று துவரங்குறிச்சியில் பிரதான சாலையை அடைந்து ஒரு வழியாக 3.15 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது (இதுவும் நன்மைக்கே போக போக எழுதுகிறேன்). 

ஒரு சர்பத் குடித்துவிட்டு, cellphone recharge செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வண்டிக்காக காத்திருந்தேன். செங்கோட்டை செல்லும் வண்டி என்று நினைக்கிறேன் கிளம்பியது இருக்கைகள் காளியாக இருந்ததால் அதில் ஏறி கடைசியில் அமர்ந்து கொண்டேன் அப்போது மணி 4. பயணசீட்டு (26 ரூபாய்) எடுக்கும் போதுதான் தெரிந்தது எனக்கு அருகில் உள்ளவரும் கிருஷ்ணன்கோவில் நிறுதத்தில்தான் இறங்கபோகிறார் என்று,  நானும் அங்குதான் இறங்க வேண்டும். திருச்சியில் வாங்கிய புத்தகத்தை படிக்கவேயில்லை ஒரே ஒரு முறை எந்த ஊரில் இறங்க வேண்டும் என்பதற்காக மட்டும் பார்த்து கொண்டேன். 

திருமங்கலம், T .கல்லுப்பட்டி தாண்டி 5.20 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் இறங்கினேன், சாலையின் எதிர்புறம் சென்று வத்ராப் செல்லும் வண்டி ஏறினேன் அமர இடமில்லை நின்றுகொண்டுதான் செல்ல வேண்டி இருந்தது, அந்த பேரூந்தின் கடைசி இருக்கையில் இருந்த மூன்று பேரை  பார்ப்பதற்கு மலைக்கு செல்பவர்கள் போதோன்றியது. (கிருஷ்ணன்கோவிலில் இருந்து 5 நிமிடம் பயணம் செய்தால் "கலசலிங்கம் பல்கலைகழகம்"  வருகிறது.) அடுத்த ஒரு நிறுத்தத்தில் காவி வேட்டியும், T - Shirt ம் , ருத்ராட்சமும் அணிந்த ஒருவர் வந்து ஏறினார், கரூரில் உள்ள கருப்பசாமி கோவிலின் பூசாரியாம் அவர். அவரும் அங்கு அமர்திருந்த மூவரும் மலையை பற்றியும், சில அதிசய சம்பவம் பற்றியும் பேசிக்கொண்டு வந்தனர், அதிலிருந்து அவர்களும் மலைக்குத்தான் செல்கின்றனர் என்று உறுதியானது. எனக்கோ துணைக்கு ஆள் கிடைத்தார்கள் என்ற நிம்மதி. 

துணை: மாலை 5.55 மணிக்கு வத்ராப் வந்து இறங்கினோம். பூசாரியும் மற்ற மூவரும் கடைக்கு சென்று விட்டனர், நானோ தனியாக செல்வதினால் எவ்வளவு சீக்கிரமாக செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக மலைக்கு சென்று விட வேண்டும் என்று அவர்களுக்காக காத்திருக்காமல் செல்ல முடிவெடுத்தேன். Share auto ஓட்டுனர்கள் தாணிப்பாறை, தாணிப்பாறை என்று அழைத்துகொண்டிருந்தார்கள். அதில் கிளம்ப தயாராக இருந்த ஒரு ஆட்டோவில் பின்புறம் அமர்ந்தேன், அங்கு 3 பேர் அமரலாம் நான் மட்டும் தான் இருந்தேன். சற்று நேரத்தில் ஒரு முதியவரும் அவரது பையனும் வந்து ஏறினார்கள். நான் வந்த பேரூந்து (திருச்சி-மதுரை) மெதுவாக வந்ததால் வருத்தப்பட்டேன் ஆனால் இப்போது இவர்களுடன் செல்வதற்க்காகதான் தாமதமோ என்று தோன்றுகிறது, ஏனெனில் இந்த பயணம் முழுவதும் வர்கள் என்னுடன் வரபோகிரார்கள் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. 

திருச்சியை அடுத்து இருக்கும் சிறுகாம்பூர் அவர்களுடையது அந்த ஊரிலிருந்து காளிபட்டிக்கு (என் ஊர் ) பெண் கொடுத்திருக்கிறார்கள், காளிபட்டியிலிருந்து பெண் எடுத்தும் இருக்கிறார்கள். எனவே அவர் என்னுடன் நன்றாக பேசிக்கொண்டு வந்தார். 6.15 மணிக்கு தாணிப்பாறையை அடைந்தோம், அந்த இடம்தான் சதுரகிரி மலையின் அடிவாரம். கடைகள் நிறைய இருந்தன, மனித நடமாட்டமும் அதிகமாக இருந்தது. என்னுடன் வந்தவர் கடந்த 4 மாதங்களாக அனைத்து பௌர்ணமி நாட்களிலும் மலைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார், அதனால் அவருக்கு அனைத்து இடங்களும் தெரியும். ஆடோவிலிருந்து இறங்கியதும் (10 ரூபாய் ஒருவருக்கு) நேரே மூலிகை சூப் விற்ற கடைக்கு சென்று மூலிகை சூப் 3 (10 ரூபாய் ஒன்று) சொன்னார், சூப் வந்தது சற்றே காரமாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருந்தது. 

(http://www.panoramio.com/user/4246158/tags/Thaniparai)

மலையேற்றம்: 6.30 க்கு மலை ஏற ஆரம்பித்தோம், எங்கும் நிற்காமல் நடந்து சென்றால் சன்னதியை அடைய 4 மணி நேரம் ஆகும். என்னுடன் வந்தவரின் மகனை அவர் வேறு எங்கோ கூட்டிசெல்கிறேன் என்று சொல்லி இங்கு கூட்டி வந்துவிட்டார், அதனால் அந்த பையன் ஆரம்பத்தில் அவ்வளவாக பேசவில்லை போக போக பேச ஆரம்பித்துவிட்டான் அந்த பையனுக்கும் இது தான் முதல் முறை சதுரகிரி பயணம். அந்த பையன் இங்கு சாப்பிட்டு செல்லலாம் என்றவுடன் நான் என்னுடன் கொண்டுவந்திருந்த சப்பாத்தியை சாப்பிட்டு செல்லலாம் என்றேன். (நான் over  night journey எங்கு சென்றாலும் என் அம்மா எனக்கு பிடித்த சப்பாத்தியை செய்து கொடுத்து விடுவார்). பையனுடைய அப்பா கொஞ்சம் மேலே  போய் சாப்பிடலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். 

வெயில் சாய்ந்து மலை முழுவதும் நிழல் படர்ந்திருந்தது. அடிவாரத்திலிருந்து 10 நிமிடம் ஏறியதும் பாதையின் இடதுபுறம் 50 மீட்டரில் ஒரு அருவி உள்ளது அதில் வந்த களைப்பு தீர குளித்து மேலே ஏற ஆரம்பித்தோம். வழியில் இருந்த ராஜதங்ககாளியம்மன் காளியை தரிசித்து விட்டு அருகில் இருந்த இட்லிகடையில் 2 தட்டு இட்லி வாங்கி என்னிடம் இருந்த ஒரு packet சப்பாத்தியையும் சேர்த்து மூவரும் பகிர்ந்து உண்டோம். அது ஒரு அருமையான தருணம், சூரியன் முழுதுமாக மறைந்து பௌர்ணமி நிலா வெளி கிளம்பி கொண்டிருந்தது. இதுவரை மலையேற்றம் அனைத்தும் பகலில்தான், இதுவே முதல் முறை இரவில் மலை ஏறுகிறேன். இதிலிருந்து புரிந்து கொண்ட உண்மையை இறங்கி வரும் போது எழுதுகிறேன்............ 

சதுரகிரி மலை பயணம்: 2
சதுரகிரி மலை பயணம்: 3


Saturday 28 May 2016

சென்னை -கல்வி சுற்றுலா :4

மஹாபலிபுரம் செல்வதும் இதுவே முதல் முறை. ஒரு முறை உணவகத்தில் நின்று கிளம்பிய வண்டி முட்டுக்காடு படகுத்துறையை தாண்டி சென்றபோது சிலர் படகில் செல்ல ஆசைப்பட்டதால் திரும்பி வந்து விலையை விசாரித்தோம் நபர் ஒருவருக்கு 35 ரூபாய் படகில் சென்று வர. "நான் போகல நீ போ" "ஏ நான் போகல நீ வேணும்னா போ" என ஆளாளுக்கு சொல்ல இறங்கியதற்கு நானும் ஜோஷ்வாவும் 2 cone icecream 1 spoon வாங்கிகொண்டு மீண்டும் வண்டிக்கே வந்துவிட்டோம்.                                                    


 வண்டி இப்போது East Coast Road ல் சென்று கொண்டிருந்தது, ஓட்டுனர் ரஜினிகாந்த அவர்களின் என்றும் அழியாத பாடலான "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலை போட்டுவிட  மாணவர்கள் அனைவரும் உற்சாகமாயினர். அந்த பாட்டிற்கும், வண்டி சென்ற வேகத்திற்கும், மாணவர்களின் விசில் சத்ததிற்கும்  சிலரின் நடனத்திற்கும் அட அட அட அட ............ அந்த தருணங்கள் மயிர்கூச்செறிய வைத்துவிட்டன (simply electrifying moment ). அந்த பாடல் முடிந்தவுடன் நான் பின்பக்க கதவை திறந்து வைத்து கடலின் அழகையும், இயற்கை அழகையும் பருகிகொண்டேவந்தேன், கடல் நீரை தானே பருகமுடியாது. என்னுடன் இன்னும் சிலரும் படிக்கட்டில் அமர்ந்துகொண்டனர். 20 நிமிடம் கழித்து முதலை பண்ணையில் வண்டி நின்றது. பின் கதவு திறந்திருந்ததால் கவன்விற்கும் சிறுவன் வந்து "வாங்கிக்கோங்க வாங்கிக்கோங்க அண்ணா" என்று சொல்லவும் சுற்றுலாவின் கடைசி பொருளாக அதை 10 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டேன். முதலைகளை பார்க்க சிலர் வரவில்லை என்று சொல்ல மீதமுள்ள அனைவரும் உள்ளே சென்றோம், ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம். சிறிய பன்னைதான் ஏற்கனவே முதலைபன்னையை பார்த்திருந்ததால் அவ்வளவாக சுவாரஸ்யமில்லை. அங்கிருந்த ஆமையும் மீனும் முதலைகளைவிட  அழகாக இருந்தன.


பின் அங்கிருந்து கிளம்பி 4 மணியளவில் மகாபலிபுரத்தை சென்றடைந்தோம். 5 ரூபாய் அனுமதி கட்டணம், உள்ளே சென்றதும் முதலில் தென்பட்ட புல்தரை அருமையாக இருந்தது நன்கு பராமரித்து வருகின்றனர். பச்சை கம்பளம் விரித்தார் போன்று அழகான வரவேற்ப்பை தந்தது. ஒரு சிலர் அங்கு நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டோம், அது எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். ஏனெனில், அழகான மாலை நேரத்து இளவெயிலின் பொன்னொளி எங்கள் மீது விழுகிறது, எங்களுக்கு பின்னே பச்சை கம்பளம் விரித்தார் போன்று அழகான புல்வெளி, அதற்க்கு பின்னே கடலின் கரு ஊதா நிறம், அனைத்திற்கும் மேலே வானத்து இள ஊதா நிறம்  இவை அனைத்தும் சேர்ந்து அப்படி ஒரு அழகான புகைப்படமாக அமைந்தது அது. நான் நிறைய கோவில்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றேன் ஆனால் ஒரே ஒரு கோவில் மட்டும் தான் இருந்தது. கோவிலை சுற்றி பார்த்துவிட்டு  வெளிநாட்டு பயணி ஒருவரை அழைத்து ஒரு குழு புகைப்படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.


சிறிது தூரம் சுற்றி வந்து கடற்கரையை அடைந்தோம். இங்கும் volley ball எடுத்து வந்து விளையாடவில்லை, திடீரென்று ஜோஷ்வா கடலில் குளிக்க போகிறேன் என்று சட்டையை கழற்ற, பின் மார்ஷல் உற்சாகமாக பின் நானும் செந்திலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கடலில் குளித்து கும்மாலமிட்டோம். செந்தில் நன்கு மகிழ்ச்சியாக விளையாடினான். பிறகு ஆசிரியர் வந்து திட்டி எங்களை கரைக்கு வர சொன்னார். கரைக்கு வந்ததும் அதே உற்சாகத்தோடு volley ball விளையாடினோம். கடலில் குளித்த அனைவரும் நல்ல நீரில் ஒரு முறை குளித்து விட்டு வரும் வழியில் நானும் ஆனந்தும் வீடிற்கு பொருள்கள் வாங்க கடைக்கு சென்று கிளிஞ்சல்கள், சங்கு, சிப்பி போன்ற பொருள்களால் ஆன சிலவற்றை 100 ரூபாய்க்கு வாங்கிகொண்டு வந்தோம். அனைத்தும் முடிந்து கல்லூரியை நோக்கி வண்டி கிளம்பியது, வழியில் 9.50 மணிக்கு 3 star Hotel ஒன்றில் வண்டி நின்றது. ஊஞ்சல், seesaw ல் சிறிது நேரம் விளையாடி விட்டு ஒவ்வொருவராக சாப்பிட சென்றோம். கவனிப்பு மெதுவாகவே நடந்தது சாப்பாடு நன்றாக இருந்தது, ஒரு குழு புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். ஆட்டம் பாட்டத்துடன் வண்டி சென்று கொண்டிருந்தது, அப்போது "வாழ மீனு" பாடல் மிகவும் பிரபலம், போன சுற்றுலாவின் பொது அந்த பாடலை தேடினோம் கிடைக்கவில்லை இப்போது கிடைத்தது.


மார்ஷலும், ஜோஷ்வாவும் அந்த costume உடன் தோன்ற செந்தில் எதிர்பாராத விதமாக நடனம் ஆட அருமையான தருணங்கள் அவை. அதுதான் ஆரம்பம் ஒவ்வொரு ஆசிரியராக ஆட தொடங்கினார்கள். கோபால் ஐயாவும் ஏனோக் ஐயாவும் காதல் வந்திருச்சி, மான மதுர பாடல்களுக்கு நடனம் ஆட வண்டியே அல்லோலஹல்லோல பட்டு போனது. நான் அனைத்தையும் ரசித்துகொண்டிருந்தேன். 1 மணி இருக்கும் வண்டி விழுப்புரத்தில் நின்ற பொது Mercy madam மயக்கம் போட்டு விழுந்து விட்டார், அவரை ஆசுவாசபடுத்தி நாங்கள் கிளம்பினோம் ஆட்டம் பட்டம் இன்றி வண்டி அமைதியாக சென்றது. கலை 5 மணிக்கு பயணம் நல்லபடியாக நிறைவுற்று கல்லூரி வந்து சேர்ந்தோம்.  இந்த சுற்றுலா இனிதாகவே அமைந்தது  பலருக்கு இதுவே கடைசியான கல்லூரி காலகட்டம் எனவே பலரும் நன்றாக Enjoy செய்தனர்.

Photo Credit:
http://tamilnadu-favtourism.blogspot.in/2015/10      muttukadu-boat-house.html
http://www.destinationinfinity.org/2013/01/16/boating -in-chennai-muttukadu-boat-house-ecr/
http://www.destinationinfinity.org/2013/01/28/crocodile-park-madras-crocodile-bank-ecr-chennai/
http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram_structural.asp
https://sidheartchandrashaker.wordpress.com/2006/05/07/vaala-meenukkum/


Add a secondary axis: Basic thing to add Secondary vertical axis in Excel

  1)   Now I want to make graph for PH Vs TH and PH Vs Kr in the same graph, then here we need primary and secondary axis.


   2)    Select PH and TH and make the graph and make sure that your graph is not a 3D chart.


          
   3)     Now the option "Secondary axis" is not visible.

   4)      Do you know why the secondary axis is not available?

   5)      Select PH and Kr and make the graph on the same chart.

 
 
 
    6)    Now the "Secondary axis" option is visible.

    7)      First we need to include both the series in the chart area of graph.

    8)      If you have only one series then you won't see "Secondary axis" option

    9)      Now right click on the series (in which you want secondary axis) and select the secondary axis option.


 
     10 )      Method:

                               I.            Select the series (the one you want in secondary axis) in the chart and right click.
                             II.            Select “Format Data Series…” option
                           III.            In “Series Options” under “Plot Series On” select “Secondary Axis”.


                                     If you don’t find the second series from the graph then follow these steps 

                          IV.            Select series from graph, now you find “Chart Tools” under that select “Layout” option and go to left top corner of Excel.

 

                         V.            Select your series (Series “PH Vs Kr”) from drop down list.  

 
                      VI.            Select  “Format Selection” next to drop down box and select “Secondary Axis” option.

 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...