Wednesday 19 December 2018

தொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST) வழி காட்டுகிறது

'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் மகளுமான, லட்சுமி வெங்கடேசன்: கடந்த, 1990ல், அப்பாவுடன், அமெரிக்கா போனபோது, ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், வேல்ஸ் இளவரசருமான சார்லசைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை தேடிக் கண்டுபிடித்து தொழிலதிபர்களாக்கும் அவருடைய முயற்சி, என்னை கவர்ந்தது. வேலையை விட்டு, அதே மாதிரியான திட்டத்தை ஆரம்பிக்க நினைத்தேன். என் யோசனையை, ஜே.ஆர்.டி., டாட்டாவிடம் கொடுத்தேன். வழிகாட்டியாகவும், நிறுவன தலைவராகவும் இருக்க அவர் சம்மதிக்க, 1992ல், Bharatiya Yuva Shakti Trust (BYST) ஆரம்பமானது.

அதாவது, 18 - 35 வயது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்போது, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போய்விடும். சிறுதொழில் ஆரம்பிக்கவும், வங்கியில் கடன் வாங்கவும் ஏகப்பட்ட கெடுபிடிகள்  உள்ளது. பெண்கள் நிலை இன்னும் மோசம். BYST  மூலமாக, கிராமம், சிறுநகரங்களுக்குச் சென்று, சிறுதொழில் செய்ய நினைப்பவர்களை கண்டுபிடிக்கிறோம். சாதாரண கைவினைப் பொருள் தயாரிப்போ, அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படும் பிசினசோ செய்ய அவர்கள் முற்பட்டால், அவர்களுடைய யோசனைகளை வரவேற்கிறோம். சொத்து இருக்க வேண்டியதில்லை, செக்யூரிட்டி தேவையில்லை. பயிற்சி கொடுப்பதில் துவங்கி, வங்கிக் கடன் வாங்கித் தருவது, ஆலோசனை, வழிகாட்டுவது என, அனைத்தையும் செய்கிறோம்.  

தொழிலதிபர்களை உருவாக்கும் இத்திட்டத்தின் முதுகெலும்புகளே, வழிகாட்டிகள் தான். அப்படிப்பட்டவர்களை, பெரிய நிறுவனங்கள், தொழிற்பேட்டை, ரோட்டரி, லயன்ஸ் கிளப் அமைப்புகள் என, பல பின்னணியிலிருந்து தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவோம். வருங்கால தொழிலதிபர்களுக்கு வழிகாட்டப் போகும் அவர்களுக்கும், 'ட்ரெயினிங் ஆப் தி ட்ரெயினர்ஸ்' என்ற பெயரில், பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ தொழில் ஆரம்பித்த பிறகும், இரண்டு ஆண்டுகளுக்கு வழிகாட்டிகளின் ஆதரவு தொடரும்.

எங்கள் முயற்சியால், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவாகி, அவர்கள் வாயிலாக, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 42 நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 'தொழிலில் ஜெயிக்க, பெரிய பின்புலம் தேவை' என்ற கருத்தை உடைப்பதே, எங்கள் நோக்கம். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஆண், பெண் கூட, தொழிலதிபர் ஆகலாம்; அவர்கள், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம் என, நிரூபித்து வருகிறோம்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Thursday 13 December 2018

தலை குளியல் முறைகள்

தலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்:  தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும். 
  • மருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும். 
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.
  • மருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும். 
  • படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும். 
  • கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும். 
  • தேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.

'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.

தற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக வியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது!
--தினமலர் நாளிதழிலிருந்து

Monday 3 December 2018

200 மரங்களை காப்பாற்ற காரணம் - துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவும்

 பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திருவாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். கஜா புயலின் கோர தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதே கிராமத்தில், சீனு என்ற விவசாயி மட்டும் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது, ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு.
தன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளைக் கணித்து கூறி வருபவர் ஆசிரியர் செல்வ குமார். கஜா புயல் வேதாரண்யம் அருகேதான் கரையைக் கடக் கும் என்று துல்லியமாகக் கணித்து கூறியிருந்தார். முன்பு தனுஷ் கோடியை அழித்த புயல் போலவே, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு பேரழிவு ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்து வந்தார். அதைக் கேட்டதால்தான் தனது தென்னை மரங்களை கணிச மாக காப்பாற்ற முடிந்தது என் கிறார் இடும்பாவனம் விவசாயி சீனு.


 இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் ஒரு சாதாரண விவசாயி. 250 தென்னை மரங்களோட ஒரு தோப்பு இருக்கு. தோப்பிலேயே கூரை வீட்டில் குடியிருக்கோம். 10 மாடுகளும் வளர்க்கிறேன். கடந்த சில வருஷமாகவே பள்ளிக்கூட வாத்தியார் செல்வ குமார் சொல்ற வானிலை செய்தி களை கேட்டு, அதுக்கேத்தபடிதான் சாகுபடி செய்றேன். வேதாரண்யத் தில புயல் அடிக்கப் போவுதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே சொன் னாரு. தனுஷ்கோடிய அழிச்சது போல பயங்கரமா தாக்கப் போவு துன்னும் ஒரு வாரம் முன்னாடியே சொன்னாரு.
சேதத்தை எப்படி குறைக்க லாம்னு நிறைய ஆலோசனை களும் சொன்னாரு. தென்னை மரத்தோட தலைக்கனத்தைக் குறைச்சிட்டா மரங்களை ஓரளவு காப்பாத்த முடியும்னாரு.

பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு
அதனால, புயலுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆள் வச்சு, ஒவ்வொரு மரத்திலயும் தலா 10 பச்சை மட்டைய வெட்டினேன். தேங்காய், இளநீர், குரும்பை எல்லாத்தையும் இறக்கிட்டேன். குரும்பை மட்டுமே 12 ஆயிரத் துக்கு மேல இருக்கும். இதெல் லாம் நல்லா தேறி, தேங்காயா பறிச்சா ஒன்னேகால் லட்சம் ரூபா வரை விலை கிடைக்கும். இப்போ அவ்வளவும் நஷ்டம்தான். இதுகள வெட்டி இறக்கவே பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு.
வாத்தியார் சொன்னதுபோல, எங்க கூரை வீட்டுலயும், மாட்டு கொட்டகை மேலேயும் பச்சை தென்னை மட்டைய அடுக்கி, கயித்தாலே நல்லா வரிஞ்சு கட்டினேன். வீட்டுக்கு பக்கத்துல நின்ன ஒரு புளிய மரத்தை மட்டும் வெட்ட முடியல. அதனால, அந்த மரம் விழுந்து வீட்டோட அடுப்படி பக்கம் மட்டும் கொஞ்சம் சேதமாயிட்டு. மத்தபடி வீட்டுக்கோ, மாட்டு கொட்டகைக்கோ எந்த பாதிப்பும் இல்ல. தென்னையில 30 மரம் மட்டும் விழுந்துட்டு. இருநூத்தி சொச்சம் மரங்களைக் காப்பாத்திட்டேன். வாத்தியாரோட நீண்டகால முன்னறிவிப்பை கேட்டு, நெல் வயல்ல முன்னாடியே நடவை முடிச்சுட்டேன். அதனாலே இப்போ பயிர் நல்லா வளர்ந்து, பாதிப்பு இல்லாம தப்பிச்சது.
இவ்வாறு அவர் கூறினார். ‘‘புயல் வர்றதுக்கு முன்னா டியே பச்சை மட்டைகளை வெட்டி னீங்களே, ஊர்ல யாரும் எதுவும் சொல்லலியா?’’ என்று கேட்டதற்கு, “ஊர் மக்களை விடுங்க. எங்க வீட்டுல என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா’’ என்று, மகளைப் பார்த்தார்.

எம்எஸ்சி படித்துள்ள அவரது மகள் சுபஸ்ரீ கூறும்போது, ‘‘பச்சை மட்டைகளை அப்பா வெட்டுறதை பார்த்து பதறிட்டோம். ‘நல்லா வளர்ந்துட்டு இருக்கிற மரத்தில் இப்படி வெட்டாதீங்க’ன்னு கெஞ்சி னோம். நாங்க சொன்னதால, சில மரங்களை மட்டும் விட்டுட்டாரு. அந்த மரங்கள்தான் இப்போ விழுந்து கிடக்குது. அப்பாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தா, இந்த மரங்களையும் காப்பாத்தி இருக்கலாம்னு இப்ப தோணுது” என்றார். தொடர்ந்து பேசிய விவசாயி சீனு, ‘‘ஒருவேளை புயல் வீசாமல் போயிருந்தால், பச்சை மட்டை களை வெட்டித் தள்ளிய நான் கிராமத்தில் பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருப்பேன். அதை நான் பெரிய விஷயமா நினைக்கல. அந்த கிண்டல், கேலியைக்கூட நான் ஏத்துக்கு வேன். ஆனால், அந்த நஷ்டம் என்னோட போயிருக்கும். இப்ப புயல் அடிச்சு ஊரே அழிஞ்சு கிடக்கிற சூழ்நிலையில, என் மரத்தைக் காப்பாத்திட்டேன் என்று என்னால் சந்தோஷப்பட முடிய வில்லை...’’ என்று வேதனையோடு கூறினார் சீனு.

துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடி வும் சேரும்போது, ஆக்ரோஷமாக தாக்கும் பேரிடரையே எதிர் கொண்டு ஓரளவு பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதா ரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பல ருக்கு இது வழிகாட்டியாக இருக் கும் என்பது மட்டும் நிச்சயம்!

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து


மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூ இயற்கை முறையில் சாகுபடி:

மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூவை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி: கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். விவசாயத்துக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து, சென்னையில், ஒரு, 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 10 ஆண்டுகள் வேலை செய்தேன்.ஒரு கட்டத்தில் வேலை மிகவும் போர் அடிக்கவும், 2015ல், குடும்பத்தோடு ஊர் திரும்பி விட்டேன். எங்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர், கரம்பை நிலம், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், சீமைக்கருவேல மரங்களால் அடர்ந்து இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை தயார் செய்து, 4,000 செம்பருத்தி செடிகளை நடவு செய்தேன்.


அதில், 500 செடிகள் பட்டுப்போயின.மீத செடிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை, ஆறு மாதங்களாக, அறுவடை செய்து வருகிறேன். சென்னை, கோவை, டில்லி நகரங்களில் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்களை தேடிப்பிடித்து, நேரடியாக பூக்களை விற்பனை செய்து வருகிறேன். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்கள், மணப்பாகு தயாரிக்க, தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.உலராத பூக்களாகவும், மீதியை காய வைத்த பூக்களாகவும் விற்பனை செய்து வருகிறேன். 100 கிலோ பூவை காய வைத்தால், 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத, 200 கிலோ பூக்களை, கிலோ, 200 ரூபாய் என விற்று, 40 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது.

அதேபோல், 3,154 கிலோ பூக்களை உலர வைத்து, 616 கிலோ கிடைத்தது. இது, கிலோ, 490 - 750 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலமாக, 3.08 லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இதுவரை, நிலம் சீரமைப்பு, செடிகள், சொட்டுநீர் பாசனம், களை எடுப்பு, இடுபொருள் செலவு என, 2.71 லட்சம் ரூபாய் செலவு போக, 77 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும்; பராமரிப்பு செலவு குறைந்து விடும் என்பதால், இனி, லாபம் அதிகரிக்கும். அத்துடன், செம்பருத்தியில் இருந்து தேநீர்ப் பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி ஜாம் என, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் யோசனையும் உள்ளது. அப்படி விற்பனை செய்ய ஆரம்பித்தால், கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பித்து விடும். தொடர்புக்கு: 99430 06666.
-- தினமலர் நாளிதழிலிருந்து
செம்பருத்தியல் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள்
செம்பருத்தி பூவினால் செழிக்கும் அழகு

Saturday 24 November 2018

ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் (Airtel, Vodafone-Idea) சேவை துண்டிப்பு

இனி ஒரு மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் சேவை துண்டிக்கப்படும் என ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
‘ஏர்டெல், வோடபோன் ஐடியா’ நிறுவனங்கள், வரும் அழைப்புகளை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறும் சேவையை நிறுத்தியுள்ளன. அதனால், வரும் அழைப்புகளுக்காக, இந்நிறுவனங்களின் சேவையை வைத்திருப்பவர்கள், தற்போது, 28 நாட்களுக்கு ஒரு முறை, குறைந்தபட்சம், 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை ஏர்டெல், வேடபோன் ஐடியா நிறுவனங்கள் இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்துள்ளன. அவுட் கோயிங் சேவைக்காக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் மொபைல் போன் இணைப்புக்கள் 30 நாட்களில் துண்டிக்கப்படும். தொடர்ந்து இன்கம்மிங் சேவையும் 45 நாட்களில் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெலின் 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 15 கோடி வாடிக்கையாளர்களும் மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்கின்றனர். 25 கோடி வாடிக்கையாளர்கள் இரண்டு சிம் கார்டுகளை கொண்ட மொபைல்களை பயன்படுத்துபவராக உள்ளனர். இவர்கள் இன்கம்மிங்கிற்கு ஒரு சிம்கார்டினையும், அவுட் கோயிங் அழைப்புக்களுக்கு ஒரு சிம்கார்டினையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்கள் மிக குறைந்த அளவிற்கே ரீசார்ஜ் செய்கின்றனர். அதுவும் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிற நிறுவனங்களின் சேவையை பெறுவோம் தங்களின் சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்வது மிகவும் குறைந்து விட்டதால், அந்நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.10 லிருந்து ரூ.35 ஆக உயர்த்தி இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுடன், மீதம் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதும் குறைந்து விட்டதால் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில், முதலில் அவுட்கோயிங் துண்டிக்கப்படும்; 15 நாட்களில் இன்கமிங் துண்டிக்கப்படும். பின், நம்பர் செயல் இழந்துவிடும்.

இது குறித்து, தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் மொபைல் எண்ணுக்கு வரும். மொபைல் எண்ணில், 1,000 ரூபாய் இருப்பு இருந்தாலும், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில் மொபைல் எண் செயல் இழந்து விடும். குறைந்தது, 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

 --தினமலர் நாளிதழிலிருந்து

ஏர்டெல் வோடஃபோன் முடிவு நியாயமா? [FAQ]



தினமும் கீரை சாப்பிடுவது நல்லது!

ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகரிக்கும் உணவு முறை குறித்து கூறும், மருத்துவர், வி.ஜமுனா: தினமும் காலையில், கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையை, சுடு தண்ணீரில் கழுவி, மென்று சாப்பிட வேண்டும். காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், மண்பாண்ட சமையலை சாப்பிட வேண்டும்.இது, ஆண்களுக்கு விதைப்பையை குளிர்ச்சியாக்கும்; விந்து உற்பத்தியைப் பெருக்கும்; உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கும் கூட, சினை முட்டை வெளியேறுவதை ஊக்குவிக்கும், வெள்ளைப்படுதலை குறைக்கும். பெண்ணுறுப்பின் நுழைவாயிலில், ஈரத்தன்மையை நிலைநிறுத்தும். தவிர, தம்பதியின் தாம்பத்திய விருப்பத்தை கூட்டும்.

சர்க்கரை வியாதி இல்லை என்றால், கருணைக்கிழங்கை, வாரம் இருமுறை, சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மதிய உணவில், 2 - 3 நார்ச்சத்து காய்கறிகள். குறிப்பாக, அவரைக்காய், நாட்டு அவரைக்காய், பீன்ஸ், புரோக்கோலி, காலிபிளவர், முருங்கைக்காய் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.மதிய உணவில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை என, ஒவ்வொரு நாளும் ஒரு கீரை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். முருங்கைக்கீரையில், முட்டையை உடைத்து ஊற்றி பொரியலாக சமைத்து, வாரம், இருமுறை சாப்பிட்டு வரலாம்.முருங்கைப்பூக்களை சூடான பாலில் போட்டு சாப்பிட்டு வருவதும் நல்லது. முருங்கைப் பூக்களை நெய்யில் வறுத்து, மதியம் சாதத்துடன் முதல் கவளமாக, பிசைந்துச் சாப்பிடலாம்.

உளுந்தில் செய்த பதார்த்தங்களை, சாப்பிடுவது நல்லது.அசைவப் பிரியர்கள், வாரம் இரண்டு முறை, ஆட்டுக்கறி சாப்பிடலாம். சித்த மருத்துவ சிகிச்சைக்கு முன், மீன் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்கள் சாப்பிடலாம். தினமும், ஒரு ஆப்பிள் அல்லது ஒரு மாதுளை அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.எடை குறைவானவர்கள், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடலாம். அக்ரூட், பிஸ்தா சாப்பிடலாம். ஓரளவு எடை கூடியபின், இதன் அளவைக் குறைத்து விடலாம். ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.நைசான களிமண்ணை சுடுநீரில் குழைத்து, ஆறியதும், அடிவயிறு, விதைப்பையில் பூசி வரலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான துாய பருத்தி ஆடைகளை அணியலாம். காலை மற்றும் மாலை, அரை மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.மது, சிகரெட் பழக்கம் இருந்தால், அடியோடு நிறுத்த வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால், உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நல்ல உயிர்துடிப்பும், உயிரோட்டமும் உள்ள அணுக்களாக மாறும்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Wednesday 21 November 2018

நாடு முழுவதும் 1.13 லட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்

வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 2.38 லட்சம் ஏ  டி  எம்களில் அதிக பயன்பாடு இல்லாதபுறநகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள 1.13 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்களை நி்ர்வகிக்கும் அமைப்பு கூறி உள்ளது. அதோடு வங்கி அல்லாத பிற தனியார் நிறுவனங்கள் நடத்தும் 15,000 ஏ டி எம் களும் மூடப்படும் நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2.38 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இந்த ஏ.டி.எம்.களின் மூலம் அனைத்து தரப்பினரும் பல்வேறு வங்கி சேவைகளை எளிதில் பெற்று பயன்அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: "ஏ.டி.எம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் மாற்ம் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும்".
--தினமலர் நாளிதழிலிருந்து. 
தொடர்புடையவை:


Tuesday 16 October 2018

தியானம்:

தியானம்,   நமக்குள் நம்மை கூட்டிச்செல்லும் ஒரு அற்புத பயணம். புறம் நோக்கி ஓடும் ஆற்றலை தடுத்து அகம் நோக்கி திருப்பி, உலகத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சலனங்களிலிருந்து நம்மை பாதுகாத்து, நமது நோக்கத்தை தெளிவுபடுத்தி நம்மை உற்சாகத்துடன் பயணிக்க வைக்க உதவும் சக்தியை  தருவது தியானம்.


 நமது உடலானது காற்று, நீர், உணவு மற்றும் உறக்கம் ஆகியவற்றின் மூலமாக ஆற்றலை பெறுகின்றது. இப்படி பெறப்பட்ட ஆற்றலை நாம் எப்படி செலவிடுகிறோம்?.....இந்த செலவிடும் தன்மை எதை பொறுத்தது?

ஆற்றலை செலவிடும் தன்மை அவரவர் மனதை பொறுத்தது. மனம் ஒரு நிலையில் இல்லையென்றால் ஆற்றல் விரயம் அதிகமாக இருக்கும், நோக்கத்தில் தெளிவு இருக்காது, செய்யும் செயல்கள் முழுமை பெறாது முடிவாக சலிப்பே எஞ்சி நிற்கும்.

ரூபமான பொருள் போல கண்களுக்கு புலப்பட்டால், மனதை நாம் கட்டுப்படுத்தும் சாத்தியம் உண்டு. ஆனால் மனமோ அரூபமானது, கட்டுக்குள் வராதது, அடங்காதது, நிலையில்லாதது, சக்தி வாய்ந்தது, எதையும் தரவல்லது, இறைவனையும் காட்ட வல்லது.....கொடூரத்தின் உச்சத்தையும் காட்ட வல்லது....இவ்வளவு ஏன் நம்மை ஏமாற்றியவர்களின் பட்டியலை தயாரித்தால் அடுத்தவர்களை எல்லாம் பின்னுக்கு அல்ல.....பாதாளத்திற்கே  தள்ளி முதலிடம் பிடிப்பது நமது மனம் தான்.

இப்படிப்பட்ட அளவற்ற சக்தியை கொண்ட மனதை அடக்க அல்லது நமது நோக்கத்திற்கு பயன்படுத்தி நம்மை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல ஒரு சக்தி உண்டென்றால் அது தியானம் மட்டும்தான்.

மனதை செப்பனிட்டால் அது ஒரு வடிவம் பெறுகிறது, நாம் பெற்ற ஆற்றலை முறையாகவும், விழிப்புணர்வுடனும் செலவிட மனம் ஒரு கருவியாக மாறும். நேரடியாக மனதை வென்றுவிட முடியுமா?... முடியாது; தியானம்தான் நம் மனதை நாம் விரும்பியபடி அழைத்து செல்ல உதவும் ஒரு ஒப்பற்ற கருவி; மாட்டின் மூக்கில் போடும் மூக்கு கயிறு போல....

நாள் முழுதும் எண்ண சிதறல்களோடு வேலைசெய்து, நாளின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ எண்ணத்தை குவித்து தியானம் செய்வதின் பலன் மிக குறைவே. ஜென் தத்துவம் போல.... ஒவ்வொரு செயலிலும் தியானத்தில் ஈடுபடுவதுபோல் ஈடுபட்டால் பிறகு வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும்.

தியானத்தின் பயன்களாக இவற்றை குறிப்பிடுகிறார் பாரதியார் .....

* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது.

* புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.

* கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.

* மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.

Unwavering Focus | Dandapani | TEDxReno
Dhiyanam (Tamil) Paperback – 2008 by K S Ilamathi (Author)
தியானம் செய்யும்போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தியானம் செய்வது எப்படி ஒரு எளிமையான விளக்கம்:
முதன் முதலான தியானம் செய்யும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள்
தியானம் செய்தால் என்ன கிடைக்கும்?



ஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா?

ஒவ்வொருநாளும், தினமும் காலையில் எழுந்ததும் நாம் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவதாகத் தான் இருக்கும். நாமே சொந்தமாக டூத் பெளடர் தயாரித்து அதைப் பயன்படுத்தி பார்த்தால் என்ன?



தேவையான பொருட்கள்...

நெல்லிக்காய் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

வேப்பிலைப் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

லவங்கப்பட்டை - 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா/சமையல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பிங்க் இமாலயன் சால்ட் - 1 டேபிள் ஸ்பூன்

டீ ட்ரி ஆயில் - சில துளிகள்

புதினா இலை பெளடர் - 1 டீஸ்பூன்

செய்முறை: மேலே கூறப்பட்டுள்ள பெளடர்கள் அனைத்துமே சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஒருவேளை கிடைக்காவிட்டாலும் கவலையில்லை. இவை அனைத்துமே சமையற்கட்டில் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தான், எனவே அவற்றை எடுத்துக் காய வைத்து அரைத்துப் பொடி செய்து கொள்ளலாம். அப்படிப் பொடி செய்தவற்றை மேலே சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு பெளலில் இட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது நீங்கள் விரும்பும் உங்களது டூத் பெளடர் தயார். 

இந்தப் பெளடரைப் பயன்படுத்தி தினமும் இருவேளை பல் துலக்கி வந்தீர்களானால் உங்களது பல் பளீரிடும் என்பதோடு டூத் பேஸ்டுகளால் விளையும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம். ஏனெனில் இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் டூத்பேஸ்டுகளில் அதிக அளவில் கலந்துள்ள ஃப்ளோரைடு எனும் வேதிப்பொருள் உடல் நலனுக்கு உகந்ததல்ல. கமர்சியல் டூத் பேஸ்டுகளில் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய சோடியல் லாரைல் சல்ஃபேட், ப்ரொப்பிலீன் கிளைக்கால், ஃபுளோரைடு மற்றும் செயற்கை இனிப்பூட்டி ரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. அவற்றினால் விளையும் பக்க விளையும் மிக மோசமானவை. அந்த ஆபத்தில் இருந்து நமது பற்களை காத்துக் கொள்ள வேண்டுமெனில் நாம் இனிவரும் காலங்களில் நமக்குத் தேவையான பற்பொடிகளை மேற்கூறிய விதத்தில் நாமே தயாரித்துக் கொண்டால் நல்லது.

மேற்கண்ட பொருட்களின் சிறப்புகள்...

நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது பல் மற்றும் வாயின் உட்புறக்காயங்களை எளிதில் ஆற்றக்கூடியது. அதுமட்டுமல்ல இதன் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் குணங்களால் பற்குழிகள் வராமல் காக்கும்.

வேப்பிலைப் பெளடரில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி வைரல் தன்மையானது வாய்க்குள் இருக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்கக் கூடிய திறன் கொண்டது.

அடுத்ததாக கிராம்பு மற்றும் லவங்கப் பட்ட இரண்டையும் நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தத் தேவையில்லை. பற்பொடி தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இரண்டுமே பற்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியவை. கிராம்பு பல்வலி மற்றும் ஈறுகளில் வலி ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் திறன் கொண்டது. அதோடு அதன் ஆண்ட்டி செப்டிக் திறன் காரணமாக வாய்க்குள் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை களையும் சக்தியும் இதற்கு உண்டு.

லவங்கப் பட்டைக்கு பற்சொத்தை மற்றும் வாய்துர்நாற்றத்தை அகற்றும் திறன் உண்டு. அது மட்டுமல்ல இதன் இனிப்புச் சுவை குழந்தைகளுக்கு இந்தப் பற்பொடியை விரும்பத் தக்கதாக மாற்றும்.

பேக்கிங் சோடா வாயினுள் உமிழ்நீரில் இருக்கும் அமிலத்தன்மையைக் குறைத்து வாய்துர்நாற்றத்தை அகற்றும் என்பதோடு பற்களில் படிந்துள்ள கறையை நீக்கி வெண்மையாக்கவும் உதவும்.

உப்பு, வாயினுள் காயங்கள் இருப்பின் அதை ஆற்றும் திறன் கொண்டது. சிலர்... உப்பு தேவையில்லை என்று நினைத்தால் அதைத் தவிர்த்து விடலாம்.
--தினமணி நாளிதழிலிருந்து

Saturday 13 October 2018

'ஹேண்ட் இன் ஹேண்ட்' : இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும் அமைப்பு

இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' அமைப்பின், இயற்கை விவசாயப் பயிற்சித் திட்ட மேலாளர், முனைவர், ஜோ: எங்கள் அமைப்பு, 'ஹீமேனியம்' நிறுவனத்துடன் இணைந்து, விவசாயப் பண்ணையை அமைத்து, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. இது, இரண்டு ஆண்டுத் திட்டம். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமம் முழுவதும், களர் மண் நிலங்கள் தான் உள்ளன. வளம் குறைந்த மண்ணிலும், இயற்கை விவசாயம் சாத்தியமே என்பதை நிரூபிக்கவே, இக்கிராமத்தை தேர்ந்தெடுத்தோம்.

பண்ணையில் பயிற்சிக்காக, 0.5 ஏக்கரில், கோ - 4 புல், அவரைக்காய், பீர்க்கங்காய், பாகல், அரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, சிறுகீரை, தக்காளி, பீன்ஸ், தட்டைப்பயறு, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்கிறோம்.மண்புழு உரம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல், இஞ்சி பூண்டுக் கரைசலை தயாரிப்பதுடன், 'கம்மல் பாசி' என்று அழைக்கப்படும், அசோலா வளர்ப்புக் கூடத்தையும் அமைத்துள்ளோம். இதை விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம்.

 'மாதிரி பண்ணை அமைத்துள்ள நிலத்தில் ரசாயனம் போட்டாலே ஒன்றும் விளையாது. இயற்கை விவசாயத்தில் என்ன விளையப்போகுது?' எனக் கூறித்தான், இதன் உரிமையாளர், குத்தகைக்கே கொடுத்தார். இப்போது, இயற்கை முறை சாகுபடியில் விளைந்து நிற்கும் பயிர்களை பார்த்து, நிறைய விவசாயிகள் பயிற்சிக்காக வர ஆரம்பித்துள்ளனர்.இயற்கை விவசாயத்துடன், விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இயற்கை விவசாயம் சிறப்பாக செய்யும் விவசாயிகளுக்கு, 15 நாட்டுக்கோழி, ஆடுகளை கொடுக்க இருக்கிறோம். நாங்கள் தரும் நாட்டுக்கோழி மற்றும் ஆடுகளுடன், அவர்கள் பணம் கொடுத்து, ஐந்து நாட்டுக்கோழி, இரண்டு ஆடுகளையும் வாங்க வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் அவர்கள், அதை நிலையாக வைத்திருப்பர்.

விவசாயிகளுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரே மந்திரம்,  'நிலத்தில் இடப்படும் இடுபொருட்கள் எதையும் வெளியில் இருந்து வாங்கக் கூடாது; முடிந்தவரை அனைத்தையும் அவர்களே உற்பத்தி செய்ய வேண்டும்' என்பது தான். அதேபோல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

விவசாயிகளை தற்சார்புள்ளவர்களாக மாற்ற, இயற்கை விவசாயம் ஒன்றே வழி என்பதை, அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். விரைவில் இக்கிராமத்தை, முழு இயற்கை கிராமமாக மாற்றிவிடுவோம். தொடர்புக்கு: 92822 13702.
--தினமலர் நாளிதழிலிருந்து

Sunday 7 October 2018

ஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்!

ஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்!பாத்திரங்களை மெருகேற்றும், 'மாப்' எனும் துடைப்பான் தயாரித்து வரும், சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா: 10ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எங்கள் பகுதியில், பாத்திரங்களுக்கு மெருகேற்றும், 'மாப்' தயாரிப்பவர்கள் இருந்தனர். பள்ளி சென்று வந்ததும், பகுதி நேர வேலையாக, இதை செய்ய கற்று, செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், அதையே முழு நேரமாக செய்யும் அளவுக்கு வளர்ந்ததோடு, நிறைய பேருக்கு வேலையும் கொடுத்து வருகிறேன். படிப்பு, அனுபவம் என, எதுவுமின்றி, கணிசமான வருமானம் பார்க்கும் இந்த தொழில், வேலைக்குப் போக முடியாத பெண்களுக்கான சரியான வாய்ப்பு!

ஆயத்த ஆடை நிறுவனங்களில், தைத்தது போக, வீணாகும் பருத்தி துணி துண்டுகள் மட்டும் தான் இதற்கு பயன்படும். இவை, ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் அல்லது சென்னை, பாரிஸ் கார்னர் கிடங்குகளிலும் கிடைக்கும். அதை, கிலோ கணக்கில் வாங்கி, அளவுக்கேற்ப அடுக்கி, தைத்து, ஆணி வைத்து அடிக்க வேண்டும்.துணியின் தரத்துக் கேற்ப கிலோ, 5 ரூபாய் முதல் கிடைக்கும். ஒரு மாப் தயாரிக்க, 2 கிலோ துணி தேவைப்படும். ஆரம்பத்தில் குறைந்தது, 100 கிலோ வரை தேவைப்படும்.

மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரத்தோடு சேர்த்து, மொத்த மூலதனம், 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். வேகமும், நுணுக்கமும் பிடிபட்டு விட்டால், ஒரு நாளுக்கு, 100 வரை தைக்கலாம். ஆரம்பத்தில், நாள் ஒன்றுக்கு, 30 மாப் வரை செய்யலாம்.அடுக்க, தைக்க என, ஒவ்வொன்றுக்கும் உதவிக்கு ஆள் வைத்திருந்தால், இன்னும் எண்ணிக்கையை கூட்டலாம்.ஒரு மாப் செய்ய அடக்க விலை, 40 ரூபாய். அதை, 60 ரூபாய்க்கு விற்கலாம். ஆணி அடிக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாப்புக்கு, 8 ரூபாய் கொடுக்கலாம்.

10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 20 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம்.தனியாக துவங்குவதை விட, இரண்டு, மூன்று பேர் சேர்ந்து துவங்குவது லாபகரமாக இருக்கும். 300 ரூபாய் கட்டணத்தில், ஒரே நாள் பயிற்சியில், பாத்திரங்களை மெருகேற்றும் மாப் செய்ய கற்றுக் கொள்ளலாம்.
--தினமலர் நாளிதழிலிருந்து.

Sunday 30 September 2018

முதியோரின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்து!

முதியோர் நலனுக்காக, silvertalkies.com என்ற இணையதளம் துவங்கியுள்ள நிதி சாவ்லா மற்றும் ரேஷ்மி: டில்லியை சேர்ந்தவள் நான்; என் கணவரின் சொந்த ஊர், சென்னை. இப்போது நாங்கள், பெங்களூரில் வசித்து வருகிறோம். வயதான காலத்தில், என் பெற்றோர் எதிர் கொள்ளும் அவஸ்தைகளை பார்த்தவள் நான். தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும், சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, யாருமற்ற தனிமை தரும் மன அழுத்தமே, அவர்களை வாட்டும், முதல் நோய். அவர்களின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்தாக, தங்கள் வயதினருடன் உரையாட, சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தான் என, உணர்ந்தேன்.

கடந்த, 2014ல், புனேயில் வசிக்கும் என் தோழி, ரேஷ்மியுடன் இணைந்து, பெற்றோருடனான எங்கள் அனுபவங்களை, மற்றவர்களுக்கும் உதவும் வகையில் தொகுத்து, வலைப்பதிவில் பதிவிட ஆரம்பித்தோம். அதைப் படித்த பலரும், பயனுள்ளதாக இருந்ததாக மனதாரப் பாராட்டியதுடன், சீனியர் சிட்டிசன்களின் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டனர். அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க, இணையதளத்தை துவங்கினோம். அதன் மூலம், தனிமையில் தவிக்கும் சீனியர்களை ஒன்றிணைத்து, நண்பர்கள் குழுக்களை ஆரம்பித்தோம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் கூடி, தங்கள் உணர்வுகளைப் பகிரவும், பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழி செய்தோம்.

'ரோட்டரி கிளப்'புக்கு சொந்தமான நுாலகம், கணிப்பொறி மற்றும் விளையாட்டுச் சாதனங்களை, சீனியர்கள் பயன்படுத்தவும் அனுமதி பெற்றோம். இப்படி, அவர்களின் தனிமைத் துயரத்தை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து, செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றோம். உயில் எழுதுதல், வருமானவரித் தாக்கல் முதல், உடல், மன உபாதைகள் வரை, முதியோரின் அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கும் வகையில், கலந்துரையாடல்களை நடத்துகிறோம். அதில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். இணையத்தில் முதியோர் நலன் சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிடுகிறோம். இமயம் முதல் குமரி வரை, 8,000க்கும் மேற்பட்டோர், இவற்றைப் படிக்கின்றனர். உறுப்பினர் சந்தாவாக, ஆண்டிற்கு, 2,500 ரூபாய் வசூலிக்கிறோம். இந்த பணத்தை, இலவச சேவைகளுக்காக பயன்படுத்தி கொள்கிறோம்.

சென்னை உட்பட, பல நகரங்களில் எங்கள் அமைப்பை நிறுவ எண்ணி உள்ளோம். எங்கள் பாதையைப் பின்பற்றி, இப்போது பெண் தொழில்முனைவோர் பலர், முதியவர்களுக்கான சர்வீஸ்களைச் செய்யக் களமிறங்கி இருக்கின்றனர்; இது, எங்களுக்குக் கூடுதல் சந்தோஷம்.
--தினமலர் நாளிதழிலிருந்து


தொடர்புடைய பதிவுகள்:
புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...
உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....
வேலை செய்து வந்தால்.....

Friday 7 September 2018

F1 முதல் F12 வரையிலான keys ன் பயன்பாடுகள்:

F1 key has been used for the Help menus in almost all programs. 

F2 key allows us to modify the name of the file or folder you have selected at that time.  

F3 key allows direct access to the search box form. 

F4 key with alt key allows us to close an open program and also it does the last action. (like Ctrl+V action or Ctrl+Z action) 

F5 key is widely used in the Internet field to refresh the page 

F6 key allows access to browser address bar without using a mouse

F7 key for spelling check in MS word and to navigate web pages like MS word (Turn on/off Caret Mode).

F8 key for boot functions.

F10 Shift+ F10 key gives right click.

F11 key shows full-screen mode of browser, folder and PDF files.

F12 key Opens Save as dialog in MS Office

Some Shortcuts:

Ctrl+Shift+T = Opens last closed tab in browser
Ctrl+T          = Opens new tab in browser
Ctrl+W        = Closes current tab in browser
Ctrl+Tab      = Moves through each of the open tab in browser
Alt+ Tab      = Moves through each of the open program in the  task    bar
Shift+F3      = Converts word from small letter to Capital letter in MS Office
Ctrl+D         = Select the word and press this combination for formatting the fonts in MS Office. 


Tuesday 4 September 2018

புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...

வயதான காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில வழிமுறைகள் கூறும், மருத்துவர், வி.எஸ்.நடராஜன்: நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும். ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும்.வயது ஆக ஆக, மனதளவில் பந்த பாசங்களை குறைத்து வாழ, முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது.

வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை. எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும். உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது. மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர். தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.

முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்! 
--தினமலர் நாளிதழிலிருந்து 
 
"நீங்கள் அடுத்தவரிடமிருந்து என்ன எதிர்பார்கிறீர்களோ.. அதை அவருக்கு நீங்கள் கொடுங்கள் வாழ்க்கை இனிமையாகிவிடும்" 

Sunday 12 August 2018

குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்தும் வழிமுறைகள்:

மழை காலத்தில் குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்த வழி கூறும், இயற்கை நல மருத்துவர், ஒய்.தீபா, ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன், எக்ஸ்னோரா நிர்மல்: இன்றைய, 'வாட்டர் பியூரி பையர்'களும், 'மினரல் வாட்டர் கேன்' களின் ஆட்சியும் இல்லாத போது, நம் முன்னோர் சில இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தினர்.

தேத்தாங்கொட்டை:
சமையலுக்கு உபயோகிக்க கூடிய தண்ணீரிலோ அல்லது குடிக்கும் தண்ணீரிலோ, தேற்றன் கொட்டையைப் பொடியாக்கிப் போட்டால், தண்ணீரில் இருக்க கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைக்கும். மேல் உள்ள தண்ணீரைக் குடிப்பதால், கண் மற்றும் தோல் நோய், வயிற்றுப்போக்கு, பசியின்மை, சிறுநீரகக் கல் உள்ளிட்டவை குணமாகும். கேன் வாட்டரிலும் தேற்றன் கொட்டையை போட்டு பயன்படுத்தலாம். நீர்த் தேக்க தொட்டியிலும் கூட, உடைத்த தேற்றன் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்து போடலாம்.

முருங்கை இலை மற்றும் விதை:
அதேபோல், முருங்கை விதை மற்றும் இலையைப் பொடித்து, மெல்லிய துணியில் கட்டி, சம்ப் மற்றும் நீர் தேக்க தொட்டியில் போட்டு, அரை மணி நேரம் கழித்து எடுத்து விடலாம். வீட்டு உபயோகத்துக்கான பானைகளிலும் போடலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஓரிரண்டு முருங்கை விதை மற்றும் ஒரு கைப்பிடி அளவு இலை சேர்த்து, 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிக் குடிக்கலாம். முருங்கை சிறந்த கிருமிநாசினியாக செயல்படும்.

மிளகு:
ஒரு பாத்திரத்தில், ஐந்து மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து, இரவு முழுவதும் ஊற விட்டு, காலையில் வடிகட்டி குடிப்பது நல்லது. மிளகு, தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை உறிஞ்சிக் கொள்ளும். அரை லி., தண்ணீருக்கு, 5 - 6 மிளகு போடலாம். தவிர, ஒரு நாள் இரவு ஊறிய தண்ணீரை, மறுநாளே பயன்படுத்தி விடுவது நல்லது.

காந்தம்:
ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, 15 - 30 நிமிடம் வரை, அதனுள் காந்தத்தை போட்டு வைத்தால், காந்த சக்தி கிடைக்கும். இதுதவிர, நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தையும் தரும். பொதுவாகவே தண்ணீர் தோன்றும் பகுதி, அது கடந்து வரும் பாதையைப் பொறுத்து, அதன் தன்மை, சத்து மாறுபடும். இந்த காந்த முறையைப் பயன்படுத்தும் போது, அது தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறு, மினரல்சை அதிகப்படுத்தும். அதனால், நம் உடலில் உள்ள உணவுக் கழிவு மற்றும் வளர்சிதைக் கழிவுகள் அனைத்தும் சேர்ந்த, வெளியேற்றப்பட வேண்டிய நச்சான, 'பிரி ரேடிக்கல்ஸ்' வெளியேறும் தன்மையையும் அதிகரிக்கும்.

இவை நம் உடலில் தங்கியிருந்தால், ஒவ்வொரு செல்லுக்கும் சேர வேண்டிய ஆக்சிஜனின் அளவை குறைத்து, செல்லை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது, நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால், காந்த முறையில், ஹைட்ரஜன் அதிகமான தண்ணீரைக் குடிக்கும் போது, இவை அனைத்தையும் சரிசெய்யும்.பயணம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
-- தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய வலைதளங்கள் .
தேத்தான் கொட்டை
உடலுக்கு பலம் தரும் தேத்தான் கொட்டை
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!
தேத்தாங்கொட்டை
தேற்றா மரக் கொட்டையின் மருத்துவப் பயன்கள்
கிழக்கில் விரியும் கிளைகள்: நீருக்குச் சுவை தரும் தேத்தாங்கொட்டை
கலங்கிய நீரையும் தெளிவாக்கும் தேற்றா மரக் கொட்டை
மெலிந்தவனையும் வலியவனாக்கும் `தேற்றான்கொட்டை’ என்கிற மகா மருந்து!


Monday 6 August 2018

உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....

மாடித் தோட்டத்தை பராமரித்து வரும், 75 வயதான, சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்: மெட்ரோ வாட்டர் போர்டில், இன்ஜினியராக இருந்த நான், 25 ஆண்டு பணி முடித்து, விருப்ப ஓய்வு பெற்று, சொந்த தொழில் ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன், அதையும் மூடி, இப்போது ஓய்வில் இருக்கிறேன். சொந்த தொழில் நடத்திய சமயத்திலேயே, மாடித் தோட்டம் ஆரம்பித்து விட்டேன்.


செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் வாளி, பைகளை தான் பயன்படுத்துகிறேன். வாளி, பையின் பக்கவாட்டில், சிறு துளை போட்டு, மணல், செம்மண், தேங்காய் நார், மாட்டு எரு, மண்புழு உரம் நிரப்பி, விதைப்பேன். வீணாகும் காய்கறிகள், மட்கின இலை தழைகளை, செடிகள் இருக்கும் தொட்டிகளில் போடுவேன். தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றுவேன்.

பருப்புக்கீரை, தண்டுக்கீரை, முடக்கத்தான், துாதுவளை, புளிச்சகீரை, புதினா, தக்காளி, கத்திரி, குடை மிளகாய், பிரண்டை, காராமணி, துளசி, திருநீற்றுப் பச்சிலை, சோற்றுக் கற்றாழை, மல்லிகைப்பூ, முல்லைப்பூ, வாழை, கீழாநெல்லி, இன்சுலின் செடி, வெற்றிலை என, பல செடிகள் உள்ளன. மல்லிகை கொடி கீழிருந்து, மூன்றாவது மாடி வரை படர்ந்து உள்ளது. 

ஒரு வாளியில், ஒரு வகை விதையை மட்டும் தான் விதைப்பேன். செடிகளில் ஊட்டம் குறையும் போது, 20 லிட்டர் தண்ணீரில், 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்து விடுவேன்.பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, அவ்வப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன். 20 நாட்களுக்கு ஒரு தடவை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி, இ.எம்., கரைசல் கலந்து தெளிப்பேன். வெயில் காலத்தில் செடி வாடாமல் இருக்க, நிழல் வலை அமைத்துஉள்ளேன்.

இயற்கையில் விளையும் காய்கறிகள், நல்ல சுவையுடன் உள்ளன. அன்றன்றே பறித்து, புத்துணர்ச்சியுடன் ஒரு கீரையை உணவில் சேர்க்க முடிகிறது. பக்கத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, தினமும் வீட்டில் இருந்து பூ பறித்து எடுத்து போவேன். வாளி, பைகளை பலகை மேல் வைத்துள்ளதால், தரைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என் மாடித் தோட்ட ஆர்வத்தை பார்த்து, 'ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்' அமைப்பினர், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கொடுத்து உள்ளனர்.

தினமும் தோட்டத்தில் வேலை செய்வது, உடற்பயிற்சியாக இருப்பதுடன், நமக்கு தேவையானதை, நாமே உற்பத்தி செய்வதும், மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வயதிலும் உடம்பும், மனதும் எப்போதும் தெம்பாக இருப்பதற்கு காரணம், இந்த செடிகள் தான். தொடர்புக்கு 94449 26128
--தினமலர் நாளிதழிலிருந்து

Sunday 5 August 2018

பேரீச்சை சாகுபடி:

பேரீச்சை சாகுபடியில் அதிக லாபம் சம்பாதிக்க வழி கூறும், தருமபுரி மாவட்டம், அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின்: சவுதி அரேபியாவில், வேளாண் பயிற்சி கூடத்தில் பணிபுரிந்த போது, பேரீச்சை சாகுபடி குறித்து அறிந்தேன்.நம் ஊரில் செய்தால் என்ன என யோசனை வந்து, அங்கிருந்த பேரீச்சை நாற்றை எடுத்து வந்து, சொந்த ஊரில் நட்டேன். 1991ல், பேரீச்சை சாகுபடியை துவங்கினேன்.

தற்போது, 1 ஏக்கருக்கு, 76 செடி வீதம், 13 ஏக்கரில், 630 பேரீச்சை செடிகளை நட்டு, பராமரித்து வருகிறேன். 24க்கு, 24 அடியில், ஒரு செடி நட வேண்டும். குழியின் அடியில், 1.5 அடி வரை, மணல் கலந்த மண்ணையும், மேல் பாகம், 1.5 அடியில் மண்ணையும், இயற்கை உரங்களையும் கலந்து நடவு செய்ய வேண்டும். இது, அனைத்து வகையான மண் ரகத்திலும் வளரும் தன்மையுடையது. நடவு செய்து ஒரு மாதம் வரை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்து, வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். மரங்களான பின், மாதத்திற்கு இரு முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் இல்லாத வறட்சி காலங்களில், தென்னையை போல், பேரீச்சை மரம் காய்ந்து போக வாய்ப்பு இல்லை.

ஆண்டுக்கு இருமுறை, இடை உழவும், இருமுறை இயற்கை உரங்களும் போட வேண்டும். பேரீச்சை மரங்கள், 90 ஆண்டு வரை பழங்கள் தரும். இதன் ஆயுட்காலம், 150 ஆண்டு. இதன் நடுவே ஊடுபயிராக, அனைத்து விதமான பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.நடவு செய்த முதல் ஆண்டில், ஒவ்வொரு செடியும், 30 - 50 கிலோ வரையும், மூன்றாம் ஆண்டு பருவத்தில், 50 முதல் 100 வரை காய்க்கும். பெரும்பாலும் ஜனவரி, பிப்ரவரியில் பூ பூத்து, ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தரமான, சுவையான பழங்களை அறுவடை செய்யலாம்.

மரத்தை சுற்றி விளையும் களைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மரம் வளர்ந்த பின், பக்கவாட்டில் உள்ள கிளைகளை வெட்டி விடுவதுடன், காய்க்க துவங்கியதும், வலைகளால், பழங்களை மூடி விட வேண்டும்; இல்லையெனில் எலி, அணில்கள், பழங்களை சேதப்படுத்தி விடும். எங்களிடம், 32 வகையான பேரீச்சை நாற்றுகள் உள்ளன.

ஒரு நாற்றின் விலை, 3,500 - 5,000 ரூபாய் வரை விற்கிறோம். பழங்கள் கிலோ, 250 - 500 ரூபாய் வரை விற்கிறோம். தற்போது, நம் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயமும் படிப்படியாக குறைகிறது. வழக்கமான விவசாயத்தை விட, குறைந்த செலவில், பேரீச்சை சாகுபடியில் அதிக பலன்களை பெற முடியும். தொடர்புக்கு94423 37717.
--தினமலர் நாளிதழிலிருந்து.

 

Saturday 4 August 2018

வீடுகளில் நெல் அரைக்கும் இயந்திரம் - கிரைண்டர் வைக்கும் இடமே போதுமானது:

நெல் அரைக்கும் இயந்திரம் குறித்து கூறும், சென்னையைச் சேர்ந்த, 'நல்லகீரை' அமைப்பைச் சேர்ந்த ஜெகன்: சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கு, கீரை சாகுபடி தொடர்பாக பயிற்சி அளிக்க சென்ற போது, அங்கு, நெல் அரைக்கும் இயந்திரத்தை பார்த்தோம். அந்த மாநில மக்கள், வீடுகளிலேயே இந்த இயந்திரத்தை வைத்து நெல்லை அரைக்கின்றனர். தமிழக மக்களுக்கு பயன்படுமே என, இயந்திரம் தயார் செய்யும் இடத்துக்கு போய், நாலைந்து மிஷின்களை வாங்கி வந்தோம்.

அதை நண்பர்கள் சிலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்போது நிறைய பேர், இயந்திரம் வாங்கி தருமாறு கேட்டதால், 'ஆர்டர்' செய்துள்ளோம். முதல் முறை வாங்கி வந்தபோது, ஒரு மிஷினுக்கு அடக்க விலை, 40 ஆயிரம் ரூபாய். இப்போது மொத்தமாக ஆர்டர் செய்திருப்பதால், 36 ஆயிரம் ரூபாய் ஆகிறது. லாபம் எதுவுமின்றி, அடக்க விலைக்கே வாங்கிக் கொடுக்கிறோம். இதை இயக்குவது, ரொம்ப சுலபம். கிரைண்டர் வைக்கும் அளவு இடமே போதுமானது. 3 ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் இதற்கு, 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பே போதும்.

100 கிலோ நெல்லை, 45 நிமிஷத்தில் அரைத்து விடலாம். 60 - 65 சதவீத அரிசி கிடைக்கும். நெல்லை பச்சையாகவும், வேக வைத்தும் அரைக்கலாம். இந்த மிஷினுக்கு மானியம் கிடைத்தால், இன்னும் குறைவான விலையில் விவசாயி களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இயந்திரத்தை பயன்படுத்தி வரும், திண்டுக் கல்லைச் சேர்ந்த ஹரிஹரன்: இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகமுள்ள நான், விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி, அரைத்து வருகிறேன். என்னிடம், 60 நாட்டு மாடுகள் உள்ளன. நெல் அரைக்கும் போது கிடைக்கும் தவிடு, மாடுகளுக்கு தீவனமாகிறது. மிஷினில் பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லை.

அரைக்கும் போது நெல்லை அதிகமாக கொட்டினால், 'பெல்ட்' இழுக்க சிரமப்படும். கொஞ்சமாக ஒரே சீராக கொட்ட வேண்டும். மிஷின் வாங்கி ஐந்து மாதம் ஆகியும், இதுவரை பிரச்னை இல்லாமல் வேலை செய்கிறது. மோட்டா, சன்னம் என, எல்லா ரக நெல்லையும் அரைத்துள்ளேன். ரகம், ஈரப்பதத்தை பொறுத்து அரிசி கிடைக்கும். எனக்கு, 100 கிலோ நெல்லுக்கு, 65 கிலோ அரிசி கிடைத்தது. தவிடு சேகரிக்க, தனியாக உள்ள பையில் விழுந்துவிடும். ஈரப்பதம் சரியாக இல்லையெனில், அரிசி உடையும். பெரும்பாலும் குருணை வருவதில்லை. ஒன்றிரண்டு வந்தாலும் தனியாக விழுந்துவிடும்;

மின் கட்டணமும் அதிகம் ஆகாது.உள்ளூர் விவசாயிகள், நெல்லை கொண்டு வந்து அரைத்து செல்கின்றனர். அரைக்கும் கூலியாக தவிட்டை கொடுத்து விடுகின்றனர். நெல் விவசாயிகளுக்கு, இது அவசியமான மிஷின்.தொடர்புக்கு: ஜெகன்: 90420 11768 ஹரிஹரன்: 73396 97444.
--தினமலர் நாளிதழிலிருந்து


Sunday 22 July 2018

திருமண நிகழ்வில் நெகிழியும், கழிவும் இல்லையா? அடடே.....

'நோ பிளாஸ்டிக்; நோ வேஸ்டேஜ்' என்ற கோட்பாடுடன், மகள் சம்யுக்தா திருமண அனுபவம் பற்றி கூறும், ஜெயஸ்ரீ:

துணிப்பை மற்றும் காகித உரை:
திருமணம் என்றால் ஷாப்பிங், சாப்பாடு, அலங்காரம், தாம்பூலம் என, நான்கு விஷயங்களில் தான், பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்துகிறோம்.எனவே, திருமண ஷாப்பிங் எதுவானாலும், அவற்றை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு தரவேண்டாம் என, கடையில் சொல்லி விட்டோம். வாங்கிய துணிமணிகளைப் பழுப்பு நிற காகித கவரில் போட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தோம். தேவையான போது, துணிப் பைகளைப் பயன்படுத்தினோம்.

கரும்பு சக்கை கிண்ணம் மற்றும் எவர்சில்வர் டம்ளர்:
திருமண கேட்டரிங் கான்ட்ராக்டரை ஒப்பந்தம் செய்யும் போதே, பிளாஸ்டிக் பயன்பாடு கூடாது என்ற, எங்கள் தீர்மானத்தை விளக்கியதும், அவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு திருமணத்திலும், ஆயிரக்கணக்கில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில், சாப்பாட்டுக்கு தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக, சுத்தமான எவர்சில்வர் டம்ளர்கள் தான் என, முடிவெடுத்தோம்.அடுத்து, ஐஸ்கிரீம் தர தெர்மோகோல் தட்டு, பேப்பர் கப்களுக்கு பதிலாக, மறு சுழற்சி செய்யக்கூடிய, கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கிண்ணங்களை பயன்படுத்தினோம்.

இயற்கையான மலர்கள் மற்றும் பனை ஓலை விசிறி:
பத்தமடையிலிருந்து, பாய் கோரையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட டப்பாக்களில், திருமண சீர் பட்சணங்களைப் போட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தோம். திருமண மேடை, அரங்க டெகரேஷனுக்கு இயற்கையான மலர்கள், நிஜப் பூந்தொட்டிகளையே வைத்தோம்.
மணமேடை பின்புலமாக, பாரம்பரிய பனை ஓலை விசிறிகளையே, புதுமையான டிசைனில் பயன்படுத்தினோம். மறுநாள் முகூர்த்தத்தின்போது, அந்த விசிறிகளை, வந்திருந்தவர்களுக்கு வினியோகித்து விட்டோம். தாம்பூலத்திற்கு துணிப்பை, மஞ்சள், குங்குமத்தை காகிதத்தில் மடித்து வைத்தோம். 'பேக்' செய்த பாக்குத் துாளுக்குப் பதிலாக, பாரம்பரியக் கொட்டைப் பாக்கு தான்.

மாநகராட்சியின் ஒத்துழைப்பு:
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திருமணத்தின்போது எதுவுமே வீண் என்று குப்பைக்குப் போகக் கூடாது என நினைத்தோம். எனவே, சென்னை மாநகராட்சியின் ஒத்துழைப்பை நாடினோம். சாப்பாட்டு கூடத்தில், இலைகளை எடுக்கும் போதே, மேஜையில் விரித்த காகிதம், கரும்புச் சக்கை கப்கள் என, மறு சுழற்சிக்கானவற்றை தனியாகப் பிரித்து விட்டோம். சமையல் கூடத்தில், காய்கறி நறுக்கிய கழிவுகளைத் தனியே சேகரித்து வைத்தோம்.
அலங்காரத்துக்குப் பயன்படுத்திய பூக்கள், சாப்பிட்ட இலைகளை கூட வீணாக்காமல், மாநகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்துக்கும், சாண எரிவாயு தயாரிப்பு மையத்துக்கும் அனுப்பி விட்டோம்.

மன திருப்தி:
இவற்றை சேகரிப்பதற்குக் கூட, வழக்கமான பெரிய கறுப்பு நிற பைகளை பயன்படுத்தாமல், டிரம்களைப் பயன்படுத்தினோம். இதனால், எங்களுக்கு கூடுதலான செலவு ஆகவில்லை. பலருடைய பாராட்டு கிடைத்ததுடன், எங்களுக்கு மன திருப்தியும் ஏற்பட்டது.தொடர்புக்கு: 98410 18301.
--தினமலர் நாளிதழிலிருந்து .

ஜெயஸ்ரீ  அவர்களுக்கு பணிவான வணக்கங்கள், நல்ல முன்மாதிரியான ஒரு திருமணத்தை முடித்துள்ளமைக்கு. நல்ல சமயத்தில் கிடைத்த நல்ல தகவல்.

Thursday 19 July 2018

கிராமத்து உணவுகளுக்கு மதிப்பு அதிகம்! - தொக்கு வகைகள்

ஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை, தொக்கு வகை செய்து லாபம் ஈட்டி வரும், சென்னை, கேளம்பாக்கத்தை சேர்ந்த நிவேதா: 

தொக்கு: ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை; மாங்காய், தக்காளி போன்றவற்றை எண்ணெயில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி.‘மாங்காய்த் தொக்கு’,‘தக்காளித் தொக்கு’.


                                                       (தக்காளி வெங்காய தொக்கு)

நான், கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறேன். இன்ஜினியரிங் படித் தும், புகுந்த வீட்டில் வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படவில்லை.ஆறாவது முதல் காலேஜ் வரை, ஹாஸ்டலில் தான் படித்தேன்; சாப்பாடு சரியாக இருக்காது. விடுமுறைக்குவீட்டுக்கு வரும் போதெல்லாம் அழு வேன். அதனால் அம்மா, விதவிமான தொக்கு செய்து கொடுப்பார்; 20 நாள் வைத்து சாப்பிடலாம்; கெட்டுப் போகாது.

என் அம்மா மாதிரியே, மாமியாரும் தொக்கு ஸ்பெஷலிட்ஸ். மாமனாருக்கு நீரிழிவை கட்டுப்படுத்த, ஆவாரம் பூவில் தொக்கு செய்வார். வீட்டில் யாருக்காவது மூட்டுவலி எனில், முடக்கத்தான் தொக்கு செய்வார்.எங்கள் வீட்டில் ஒருவேளைக்கு, 15 - 20 பேருக்கு சமையல் நடக்கும். சொந்தமாக வயல் உள்ளதால், இயற்கை விவசாயம் செய்கிறோம். செக்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்துகிறோம். எந்த கெமிக்கலும் இல்லாமல், இயற்கையான முறையில் தொக்கு செய்வது, எங்கள் வீட்டு ஸ்பெஷல் அடையாளமாவே மாறிவிட்டது. வீட்டுக்கு வந்து யார் சாப்பிட்டாலும், பாராட்டத் தவறியதே இல்லை. 'விலைக்கு தருவீங்களா?' என கேட்க ஆரம்பித்த பின் தான், இதை பிசினசாக செய்யும் யோசனை வந்து, உறவின பெண் சத்யாவும் சேர்ந்து ஆரம்பித்தோம்.

ஆவாரம்பூ, முடக்கத்தான், பாகற்காய், தக்காளி, புதினா, பூண்டு, பிரண்டை, புளித்த கீரை, துாதுவளை, வல்லாரை என, தொக்கு வகைகள் செய்து, ஆரோக்கியமான உணவு தயாரிப்பையே, பிசினசாக மாற்றவிரும்புவோருக்கும் வழிகாட்டுகிறோம். 

ஒவ்வொரு தொக்கும், 1 கிலோ அளவு தயாரிக்க, 200 - 300 ரூபாய் வரை தேவை. 10 வகை தொக்கும், தலா, 1 கிலோ செய்ய, குறைந்தபட்சம், 1,200 ரூபாய் முதலீடு போதும்.கிராமத்து உணவுகளுக்கு, நகரத்தில் எப்போதும் மதிப்பு அதிகம். இந்த தொக்கு வகைகளை இட்லி, தோசை, சப்பாத்தி என, டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்; சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். ஊறுகாய்க்கு நல்ல மாற்றும் கூட. மேலும், 300 கிராம்தொக்கு, 90 ரூபாய்க்கு விற்கலாம்.

ஐந்து நாட்கள் வரை வெளியிலேயே வைத்திருந்து பயன்படுத்தலாம்; பின், பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம். வேலைக்கு செல்பவர், பேச்சிலர், ஹாஸ்டலில் இருப்பவர் தான்வாடிக்கையாளர்கள். கடைகளில் வாங்கும் தொக்கு பெரும்பாலும் ஒரே சுவையில் இருக்கும்; ஆனால், இவை ஒவ்வொன்றும் அதன் மூலப்பொருளின் சுவைக்கேற்ப மாறுபடும் என்பதால், தினமும் சாப்பிட்டாலும் அலுப்புத் தட்டாது; 50 சதவீத லாபம் நிச்சயம்.

ஒரு நாள் பயிற்சியாக, 750 ரூபாயில், 10 வகையான தொக்குகளை கற்றுக் கொள்ளலாம்.தொடர்புக்கு: 9962146742, 9962114104.
--தினமலர் நாளிதழிலிருந்து.

Wednesday 13 June 2018

பிறருடைய ATM அட்டையைப் பயன்படுத்தலாமா?

பகிரப்பட வேண்டிய செய்தி, கிரி அவர்களின் தளத்திலிருந்து ......

2013 ம் ஆண்டு பெங்களுருவில் ஒருவரின் மனைவி பிள்ளைப்பேறு நிலையில் இருந்ததால், அவரால் வெளியே சென்று பணம் எடுக்க முடியாததால் கணவனிடம் தன்னுடைய SBI ATM அட்டையைக் கொடுத்து 25,000 எடுக்கக் கூறி இருக்கிறார்.

கணவர் பணம் எடுக்கும் போது பணம் எடுக்கப்பட்டதாகச் சீட்டு மட்டும் வந்துள்ளது ஆனால், பணம் வரவில்லை. இவரும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க, அவர்கள் தொழில்நுட்ப கோளாறாகி இருக்கும், இரு நாட்களில் வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் பணம் வராததால் வங்கியில் சென்று கேட்டதும், பணம் வழங்கப்பட்டது என்று கூற, இவர்கள் இருவரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நுகர்வோர் நீதிமன்றம்
பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து CCTV யில் கணவர் பணம் எடுக்கும் போது பணம் வெளியே வராததையும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த நாளில் 25,000 அதிகம் இருப்பு ஆகி உள்ளது என்பதை நிரூபித்தும் SBI ஒத்துக்கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நடந்த வழக்கில்,
பணம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை (Log) SBI சமர்பித்து, சட்டப்படி ஒருவருடைய ATM அட்டையையும் PIN யையும் இன்னொருவரிடம் கொடுப்பது தவறு எனவே, எங்கள் வங்கி தவறுசெய்யவில்லை” என்று வாதிட்டது.

தன்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றால் “Self Cheque” அல்லது அனுமதிக் கடிதம் கொடுத்து மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கூறி விட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ATM அட்டையைச் சம்பந்தப்பட்டவர் தவிர வேறு யாரும் பயன்படுத்துவது சட்டப்படி தவறு எனவே, SBI வங்கி பணத்தைத் தரவேண்டியதில்லை என்று கூறி விட்டது  .
₹25,000 கண் முன்னாடி இருந்தும் சட்ட சிக்கலால் எடுக்க முடியாமல் போனது.

சரி இது போலச் சூழ்நிலை அமைந்தால் என்ன வழி?
காசோலை பயன்படுத்துவது நல்ல யோசனை தான் என்றாலும், ஒருவேளை அப்போது வங்கி திறந்து இருக்கவில்லை என்றால் பிரச்சனை.
எனவே, UPI பரிமாற்றமே சிறந்தது.

அதாவது உங்களுடைய கணக்குக்குச் சம்பந்தப்பட்டவரின் கணக்கில் இருந்து பணத்தை UPI (BHIM, PhonePe, Google Tez, WhatsApp) செயலிகள் மூலம் அனுப்பி உங்கள் சொந்த ATM அட்டையின் மூலமாகப் பணம் எடுத்துக் கொடுத்து விடலாம்.

இது போல அவசரத்துக்கு எடுக்கப்படும் பணம் அதிகபட்சம் 25,000 க்கு மேல் இருக்காது. எனவே, பிரச்சனைகள் இல்லை. UPI பரிவர்த்தனைக்கு கட்டணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள், அவர்களையும்  எச்சரிக்கைப்படுத்துங்கள்.



Wednesday 6 June 2018

நாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே நல்ல வருமானம் ஈட்டலாம்

நாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே, வருமானம் ஈட்ட வழிக்கூறும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சம்பத்: சிறு வயது முதலே எனக்கு, நாட்டு மாடுகள் மேல் பிரியம். பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி பயிற்சி மையத்தில், நாட்டு மாடு வளர்ப்பு பயிற்சி கொடுத்த போது, நகை தணிக்கையாளரான நானும் கலந்து கொண்டேன். மூன்றாண்டுக்கு முன், அந்த பயிற்சி மைய இயக்குனர், இரண்டு பசு மாடு, ஒரு காளை, ஒரு கன்றுக்குட்டி வாங்கி கொடுத்தார்.

'நாட்டு மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி விற்றால், பாலை விட அதிக வருமானம் கிடைக்கும்' என, 'கொங்கு கோசாலா குரூப்'பை சேர்ந்த சிவகுமார் கூறினார். அதையடுத்து, சாணத்தை மதிப்புக்கூட்டும் விதம், அதற்கான சந்தை வாய்ப்பை அறிந்து, விபூதி தயாரித்து, விற்பனை செய்கிறேன்.

இப்போது எங்கள் பண்ணையில், 60 மாடுகள் உள்ளன; பெரும்பாலானவை காங்கேயம் ரகம் தான். பண்ணையை பராமரிக்க, ஒரு குடும்பம் தங்கி இருக்கிறது. மாடுகள் சாணம் போட்டவுடனே, பசு மாட்டு சாணம் தனியாகவும், காளை மாட்டு சாணம் தனியாகவும் பிரித்து வைத்து விடுவர். மாடுகளின் சிறுநீர், வாய்க்கால் வழியாக தொட்டிக்கு செல்லும் விதமாக, இரண்டு கீழ்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .
  • பசு மாட்டு சாணத்தில் விபூதி தயாரிப்போம்; 1 கிலோ விபூதி, 500 ரூபாய்க்கு வாங்கி கொள்கின்றனர். மாதம், 75 கிலோ விபூதி விற்றால், 37 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.
  • 1 லி., சிறுநீர், 50 ரூபாய் என, மாதம், 500 லி., வரை விற்பதால், 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 
  • கன்றுகுட்டி குடித்தது போக தினமும், 15 லிட்டர் பால் கறந்து, 1 லி., 80 ரூபாய் என, மாதம், 36 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 
  • காளை மாட்டு சாணத்தை உரத்துக்கு பயன்படுத்துவோம்.  விபூதி தயாரித்தது போக, மீத சாணத்தை, ஆண்டுக்கு மூன்று முறை விவசாயிகளுக்கு விற்பதால், 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. 
  • இவ்வாறு, அனைத்தும் சேர்த்து, மாதம், 1.02 லட்சம் ரூபாய் வருமானமும், மாடுகளுக்கு தீவனம், வேலையாள் சம்பளம் என, செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது. 
அடுத்து, விபூதி உற்பத்தியை அதிகப்படுத்தவும், பஞ்ச கவ்யா தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன். உ.பி., மாநிலத்தில், மாட்டு சிறுநீரை, 'பிராசஸ்' செய்து, 'ஹெல்த் டிரிங்க்' என, 1 லி., 150 ரூபாய்க்கு விற்கின்றனர். அவ்வாறு செய்யும் யோசனை உள்ளது. நாட்டு மாடு வளர்ப்பதை, ஆத்மார்த்தமான செயலாகவே பார்க்கிறேன்; வருமானத்துக்கான தொழிலாக பார்க்கவில்லை.'தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு' என்பது போல், நாம் முறையாக பாதுகாத்து பராமரித்தால், கோமாதா கொட்டிக் கொடுக்கும். பாலை விட நாட்டு மாடுகளுடைய கழிவுகளுக்கு இன்று கிராக்கி உள்ளது. சாணத்தையும், சிறுநீரையும் வைத்தே, நல்ல லாபம் பார்க்க முடியும்.
தொடர்புக்கு: 73389 39369
-- தினமலர் நாளிதழிலிருந்து.

 தொடர்புடையவை:
விவசாயம் சாரா தொழிலில் 15 சதவீத வருமானம் கிடைக்கிறது!
கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்

 

Tuesday 15 May 2018

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி:

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்ற வழி கூறும், திருவாரூர் மாவட்டம், வீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனன்: தற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது.குறிப்பாக, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்க்க படாதபாடு படுகின்றனர்.


எங்கள் அப்பா காலத்தில், கோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க, கொழிஞ்சியை விதைத்து விடுவர். சிறந்த பசுந்தாள் உரம் இது; கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும். சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், ஏழு நாட்களில் மெழுகு பதத்துக்கு நிலம் மாறிவிடும். அந்த சமயத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து அல்லது பச்சைப்பயறு விதையோடு, 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து, 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்து விடுவர்.

ஒரு வாரத்தில் நெல் அறுவடை முடிந்ததும், உளுந்து, கொழிஞ்சி இரண்டுமே செழிப்பாக வளர ஆரம்பிக்கும்; தண்ணீரே பாய்ச்ச வேண்டியதில்லை. உளுந்தை, 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யும் போது, கொழிஞ்சி, 0.5 அடி உயரத்துக்கு நிலம் முழுக்க, குடை பிடித்த மாதிரி வளர்ந்து, சித்திரை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்கும்.சித்திரையில் கிடைக்கும் கோடை மழையே கொழிஞ்சிக்கு போதுமானதாக இருக்கும். அதில் இருந்து விதைகளை சேகரித்து, விற்பனையும் செய்வர். விதைக்காக காய்களை எடுத்த பிறகும், கொழிஞ்சி செழிப்பாக வளரும்.


அடுத்த போக நெல் விதைப்புக்கு, 15 நாட்களுக்கு முன், நிலத்தில் தண்ணீர் காட்டி, கொழிஞ்சியை மடக்கி உழுது விடுவர். நெல் சாகுபடி துவங்கியதும், தண்ணீருக்குள் கொழிஞ்சி விதைகள், உறக்கத்தில் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருந்தாலும், விதைகள் அழுகாது; களைச் செடி மாதிரி முளைத்தும் வராது. அதனால், நெற்பயிருக்கு பாதிப்பு இருக்காது. நெல் அறுவடைக்கு பின், கொழிஞ்சி தானாகவே முளைத்து வளர ஆரம்பிக்கும். கொழிஞ்சியில் தழைச்சத்து அதிகம். மற்ற பசுந்தாள் உரப்பயிர்களை விட, இது சிறப்பானது.


சணப்பு, தக்கைப்பூண்டு மாதிரியான பயிர்கள், வறட்சியை தாங்காது. அது மட்டுமின்றி இந்த பயிர்களை, 50 நாட்களில் மடக்கி உழவு செய்யாவிட்டால், தண்டு பகுதி கடினமாகி, நார்த்தன்மையாக மாறிவிடும்; அதனால், மட்க தாமதமாகும்.ஆனால், கொழிஞ்சியை பல மாதங்கள் நிலத்திலேயே விட்டு வைத்தாலும், நார்த்தன்மைக்கு மாறாது. வறட்சியிலும் வளரும் பயிர் என்பதால், கோடை காலத்தில் கூட கொழிஞ்சியை விதைத்து, உயர் மூடாக்கை உருவாக்கலாம்.

--தினமலர் நாளிதழிலிருந்து.

Saturday 12 May 2018

ஞாபக சக்தி வலுப்பெறுகிறது "ஓய்வினால்" - ஆராய்ச்சி முடிவுகள்.

நாம் மிக விரும்பி செய்தாலொழிய, சில செயல்கள் (படித்தது, பார்த்தது, கேட்டது, பேசியது, கற்றுக்கொண்டது) செய்த சிறிது நேரத்திற்குப் பிறகு அதிலிருந்து சில விஷயங்கள்தான் நம் நினைவில் இருக்கும், ஆனால் திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வதன் மூலமும் ஞாபக சக்தியை வலுப்படுத்த முடியும், இது இயல்பானதுதான்.

ஹெரியோட்-வாட் (Heriot-Watt) பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறதென்றால், "ஏதாவது கற்றுக்கொண்ட  பிறகு தொடர் இயக்கத்தில் (busy) இல்லாமல் சிறிது நேர அமைதி அல்லது ஓய்வு எடுப்பது சிறு சிறு தகவல்களையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளும் திறனை அதிகப்படுத்துமாம்".

ஓய்வு:
புதிதாக ஏதாவது கற்றுக்கொண்ட பிறகு பத்திலிருந்து பதினைந்து (10-15) நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நமது ஞாபக திறனை வளர்ப்பதோடு எளிதில் ஞாபகத்திலிருந்து நினைவு கூறவும் மற்றும் நுணுக்கமான தகவல்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். இளைஞர்களை வைத்து நடத்திய "புகைப்படங்களின் வித்தியாசத்தை கண்டறியும் சோதனை"யின் முடிவே மேற்சொன்ன தகவல்.

சோதனை:
இளைஞர்களை இரண்டு பிரிவாக பிரித்து, ஒரே புகைப்படத்தை காண்பித்து ஒரு பிரிவு இளைஞர்களை பதினைந்து (15) நிமிடம் ஓய்வு எடுக்கச் சொல்லியும் மற்றொரு பிரிவினரை வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் படியும் செய்து மீண்டும் அவர்களிடம் பழைய புகைப்படத்தை ஒத்துள்ள, ஆனால் நுண்ணிய வேறுபாடுகள் கொண்ட புதிய புகைப்படம் காட்டப்பட்டு வேறுபாடுகளை கண்டறியம் சோதனை நடந்தது.

முடிவு:
புகைப்படத்தைப் பார்த்த பிறகு வழக்கமான பணிகளை மேற்கொண்டவர்களை விட புகைப்படத்தைப் பார்த்த பிறகு ஓய்வெடுத்தவர்கள் புகைப்படங்களின் வேறுபாடுகளை நன்கு கண்டறிந்து கூறினர். "இதன் மூலம் நுணுக்கமான செய்திகளையும் ஞாபகத்தில் வைக்கும் திறன் ஓய்வினால் அதிகரிக்கிறது என்ற சான்று கிடைத்திருக்கிறது. ஓய்வு நேரத்தில் மூலையில் என்ன நிகழ்கிறது? என்ன ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது? என்பதே எங்களது அடுத்த கட்ட ஆய்வு" என்று கூறுகின்றனர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Dr Craig மற்றும் Dr Michaela Dewar.
--The Assam Tribune நாளிதழிலிருந்து.
--medicalxpress.com


திருப்பராய்த்துறை (திருச்சி)  தபோவனம், பள்ளி மற்றும் சோழவந்தான் (மதுரை) விவேகானந்தா கல்லூரியின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் மொழிகளுள் ஒன்று "சுகமாக கண்களை மூடியிருப்பது மட்டும் ஓய்வல்ல, ஒரு செயலிலிருந்து இன்னொரு மாற்று செயல் செய்வதும் ஓய்வுதான் (Change of Work is Rest)". மிகவும் பிடித்த வரிகளுள் ஒன்று இது.

குழந்தைகளை படிப்பை மட்டுமே ப(பி)டித்துக்கொண்டிருக்கும்படி
செய்யாமல் விளையாட்டு, உடற்பயிற்சி, செய்முறை பயிற்சி, பாட்டு பாடுதல், ஓவியம் அல்லது இரண்டு மணி நேரம் அவர்கள் விரும்பி அதிக ஆர்வத்துடன் ஈடுபடும் ஏதாவது ஒன்றில் (mobile phone, video game மற்றும் TV தவிர) ஈடுபட அனுமதிப்பது குழந்தைகளின் செயல்திறனையும், கற்கும் திறனையும் அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை விளையாட்டு மற்றும் ஏதாவது செயல்களில் ஈடுபட வைத்திருப்பது அவர்களை மேம்படுத்தும்.

மேலும் இரவு எட்டு (8) மணி நேர உறக்கம் மாணவர்களுக்கு மிகவும் அவசியம், ஏனெனில் பகலில் (கவனமுடன்) படித்த பாடங்கள் நன்கு நினைவில் பதிய உறக்கம் அவசியம். மற்றவர்களுக்கும் கூட இது பொருந்தும், நல்ல இரவு உறக்கம் இருப்பவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சிலர் சொல்வார்கள் "மனிதன் வாழ்நாளில் பாதி நேரத்தை தூங்கியே கழிக்கிறான்" என்று, மீதி பாதி வாழ்நாளில் திறம்படவும், ஆக்கபூர்வமாகவும் பயனுள்ள வேலைகளை செய்ய அந்த உறக்கம் அவசியம் தேவைதான்.

 

Sunday 29 April 2018

'மழைத்துளி' வாட்ஸ் ஆப் குழுவின் வீடு தேடி வரும் மரக்கன்று!

வீடு தேடி வரும் மரக்கன்று!மதுரையில், 'மழைத்துளி' என்ற பெயரில் இயங்கி வரும், 'வாட்ஸ் ஆப்' குழுவின் ஒருங் கிணைப் பாளர், மதன் குமார்: மதுரை மாவட்டம், வெள்ளளூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறேன். 'பேஸ்புக்' மூலம் இணைந்த மதுரை நண்பர்கள் நாங்கள். சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என, பேசிய போது தான், மழை வளத்தை பெருக்க அடிப்படையாக இருக்கும் மரங்களை அதிக அளவில் வளர்க்கலாம் என, முடிவு செய்தோம். அதற்காக, 'மழைத்துளி' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழுவை ஆரம்பித்தோம்.


ஆரம்பிக்கும்போது, நான்கு பேர் தான் உறுப்பினர்கள். தற்போது, 15 பேர் இணைந்துள்ளனர். இதில், 10 பேர் மதுரையில் வசிக்கின்றனர்; மீதி ஐந்து பேர், வெளியூர்க்காரர்கள். இவர்கள் வெளியிலிருந்து குழுவின் பணிகளுக்கு ஆதரவு தருகின்றனர். குழு ஆரம்பித்த பின், வில்லாபுரம் பகுதியில் மரங்கள் இல்லாத தெருக்களில், ஒவ்வொரு வீடாகப் போய், 'உங்க வீட்டு முன் மரக்கன்று நட்டு வைத்தால் வளர்ப்பீங்களா' எனக் கேட்டு, 'சர்வே' எடுத்தோம்.அவர்களில் சிலர் சம்மதிக்கவும், முதல் கட்டமாக, எட்டு மரக்கன்றுகளை நட்டு, கம்பிக் கூண்டு அமைத்து கொடுத்தோம். அப்புறம் இதே விஷயத்தை, மற்ற, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் மூலமாகவும் பரப்பினோம்.


மதுரை மாவட்டத்தில் இதுவரை, 752 பேர், தங்களின் முகவரியைப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை, 132 வீடுகளில் மரக்கன்று நட்டு வைத்துள்ளோம். கொஞ்சம் கொஞ்சமாக, பதிவு செய்துள்ளவரின் வீடுகளிலும் மரக்கன்றுகளை நட்டு விடுவோம். மதுரை மாவட்ட வனத்துறை மூலமாக விற்பனை செய்யும், வேம்பு, புங்கன் மரக்கன்றுகளைத் தான் நடவு செய்கிறோம். ஒரு கன்று, கூண்டுக்காக, 150 ரூபாய் செலவாகிறது. இதை எங்கள், 'வாட்ஸ் ஆப் குரூப்' உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வோம். மரக்கன்றுகள் நட்ட உடனே, சம்பந்தப்பட்ட வீட்டு மொபைல் எண்ணை, 'மழைத்துளி மரக்கன்றுகள் நிலவரம்' எனும், 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் சேர்த்து விடுவோம். கன்றுகளின் வளர்ச்சியை அவர்கள், 'அப்டேட்' செய்வர். நாங்களும், 15 நாட்களுக்கு ஒருமுறை நேரிலும் சென்று பார்ப்போம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு, முன்னுரிமையின் அடிப்படையில், மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.

குழு உறுப்பினர் தீபா: ஞாயிற்றுக்கிழமை தான், மரம் நடும் வேலையை செய்கிறோம். வெள்ளிக் கிழமையே அதற்கான முன்னேற்பாடுகளுக்கு திட்டமிட்டு, சனிக்கிழமையன்று, மரக்கன்று, கூண்டுகளை வாங்கி வைத்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணிக்கு குழி எடுக்கும் வேலையை ஆரம்பிப்போம். தோட்ட வேலை செய்யும் தாத்தா ஒருவரை வைத்துள்ளோம். அவர் தான், குழி எடுத்து, தொழு உரத்தை போட்டுக் கொடுப்பார். சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் அல்லது அவர்களது வீட்டுக் குழந்தைகளை நடச் சொல்கிறோம், அப்போது தான், 'நான் வெச்ச மரம்' என்று பராமரிக்கும் ஆசை வரும். தொடர்புக்கு: 86089 05957.

--தினமலர் நாளிதழிலிருந்து
--வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினால் மரக் கன்று வீடு தேடி வரும்!!


 


Wednesday 18 April 2018

படித்ததில் பிடித்தது 5


உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் அந்த ஒரு நபரை தேடுகிறீர்களா?.... அப்படியென்றால் சென்று கண்ணாடியில் பாருங்கள்.

மனதிற்கு  இணக்கமான பிடித்த வேலையை தேர்ந்தெடுத்துக் கொண்டால் நீ ஒரு போதும் வாழ்வில் வேலை செய்ய வேண்டியதில்லை.
("Choose a job you love, and you will never have to work a day in your life." -Anon)

இந்த தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவெனில், மனிதன் தனது அணுகுமுறையை மாற்றியமைப்பதின் மூலம் தனது வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.
("The greatest discovery of my generation is that human being can  alter his life by altering his attitude."-William James) 

தனக்கு எந்த விதத்திலும் எதுவும் செய்ய முடியாத ஒரு மனிதனை ஒருவன் எவ்வாறு நடத்துகிறான் என்பதை வைத்து அவனின் குணநலன்களை நாம் மதிப்பிடலாம்.
("You can easily judge the character of a man by how he treats those who can do nothing for him"-James D  Miles )

சிலருக்கு மன உறுதி உள்ளது சிலருக்கு மன உறுதி கிடையாது என்று சொல்வதைவிட சிலர் மாறுதலுக்கு தயாராக இருக்கிறார்கள் சிலர் இல்லை என்று சொல்லலாம்.
("It's not that some people have willpower and some don't. It's that some people are ready to change and others are not." -James Gordon )
 
“If you want to build a ship, don’t drum up people to collect wood and don’t assign them tasks and work, but rather teach them to long for the endless immensity of the sea.” -Epictetus

"Amid all your philosophy, be still a man." -David Hume

"Our most important thoughts are those which contradict our emotions." -Paul Valery 

"A friend is someone with whom you dare to be yourself." -Frank Crane
From The Assam Tribune Newspaper.

தொடர்புடையவை...
படித்ததில் பிடித்தது 4
படித்ததில் பிடித்தது 3
படித்ததில் பிடித்தது 2
படித்ததில் பிடித்தது 1

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...