Friday 30 June 2017

பிளாஸ்டிக் அரிசி............வதந்தியோ?


'பிளாஸ்டிக்' அரிசியின் பின்னணி குறித்து கூறும், வேளாண் வல்லுனர், அரச்சலுார் செல்வம்: 

பிளாஸ்டிக் அரிசி பற்றி நாம் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் சந்தையில் வாங்கி சாப்பிடும் பளபளப்பான அரிசிகள் அத்தனையுமே நல்ல அரிசிகள் இல்லை.பளபளப்பாகவும், வெண்மையாகவும் நாம் அரிசி கேட்கிறோம். நம்முடைய இந்த ஆசையைப் பயன்படுத்தி, பல ரசாயன மேற்பூச்சுக்களை பூசி பளபளப்பாகவும், வெண்மையாகவும் அரிசியை விற்கின்றனர்.

இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வளவு அதிகமாக, தினசரி உணவில் அரிசியை உட்கொள்ளவில்லை. விழாக்கால உணவாக மட்டுமே, அரிசி இருந்தது. பசுமைப் புரட்சிக்கு பின் தான், தினமும் மூன்று வேளையும் அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது. அதன் பின், சரிவிகித உணவே இல்லாமல் போய் விட்டது. இதனால் தான், நோய்களும் அதிகமானது. அரிசியை பட்டை தீட்டாமல், பழுப்பு அரிசியாக சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால், நாம் வெண்மையான அரிசியை விரும்புவதால், பட்டை தீட்டி தருகின்றனர். இதனால், வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டுமே சாப்பிடுகிறோம். இதே நிலை தான், சர்க்கரையிலும் நடக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் தான், இன்று பிளாஸ்டிக் அரிசி வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.


எண்ணெய்:
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், கடுகு எண்ணெயில் கலப்படம் காரணமாக, 18 பேர் இறந்ததாக செய்தி வந்தது. அதன் பின், உபரியாக எண்ணெய் விற்க கட்டுப்பாடுகள் அதிகமாகி, செக்கில் எண்ணெய் ஆட்ட, விற்க கெடுபிடிகள் வந்தன. இதன் காரணமாக பல லட்சம் செக்கு தொழில் செய்வோர், வேலை இழந்தனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, 'ரிபைண்ட்' செய்யப்பட்ட எண்ணெய் தான் சுத்தமானது, சுகாதாரமானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. அதன்பின் தான் தெரிந்தது, ரிபைண்ட் எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனம் செய்த, 'லாபி' என்று.

உப்பு:
இதுபோலவே தான், உப்புக்கும் நடந்தது. அயோடின் உப்பு தான் சிறந்தது என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக பெரிய உணவு அரசியல் செய்யப்பட்டு, சிறிய உப்பு வியாபாரிகள் அழித்தொழிக்கப் பட்டனர்.

அரிசி:
இதுபோலவே பிளாஸ்டிக் அரிசி போன்ற பீதியை உருவாக்கி, 'நாங்கள் சுத்தமான அரிசியை தருகிறோம்' என, அரிசி சந்தையை கைப்பற்றத் தான், இந்த வதந்தியோ என்று அச்சப்படாமலும் இருக்க முடியவில்லை; மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம் பாரம்பரிய அரிசி வகைகளை வாங்கி, பட்டை தீட்டாமல் சாப்பிட வேண்டும். அருகாமையில் சிறிய கடையில் பொருட்களை வாங்க, பழக வேண்டும் அல்லது நேரடியாக விளைவிப்பவர்களிடம் வாங்கலாம். 


வெண்மையாக இருக்கும் பொருள் தான் சுத்தமானது, பெரிய நிறுவனத்தின் பொருள் தான் தரமானது என்ற மனநிலையை விட வேண்டும்.

----தினமலர் நாளிதழிலிருந்து


மக்கள் தான்விழிப்புடன்இருக்க வேண்டும்!

'பிளாஸ்டிக்' அரிசியின் பின்னணி குறித்து கூறும், வேளாண் வல்லுனர், அரச்சலுார் செல்வம்: பிளாஸ்டிக் அரிசி பற்றி நாம் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் சந்தையில் வாங்கி சாப்பிடும் பளபளப்பான அரிசிகள் அத்தனையுமே நல்ல அரிசிகள் இல்லை.பளபளப்பாகவும், வெண்மையாகவும் நாம் அரிசி கேட்கிறோம். நம்முடைய இந்த ஆசையைப் பயன்படுத்தி, பல ரசாயன மேற்பூச்சுக்களை பூசி பளபளப்பாகவும், வெண்மையாகவும் அரிசியை விற்கின்றனர்.
இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வளவு அதிகமாக, தினசரி உணவில் அரிசியை உட்கொள்ளவில்லை. விழாக்கால உணவாக மட்டுமே, அரிசி இருந்தது. பசுமைப் புரட்சிக்கு பின் தான், தினமும் மூன்று வேளையும் அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது. அதன் பின், சரிவிகித உணவே இல்லாமல் போய் விட்டது. இதனால் தான், நோய்களும் அதிகமானது.
அரிசியை பட்டை தீட்டாமல், பழுப்பு அரிசியாக சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால், நாம் வெண்மையான அரிசியை விரும்புவதால், பட்டை தீட்டி தருகின்றனர். இதனால், வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டுமே சாப்பிடுகிறோம். இதே நிலை தான், சர்க்கரையிலும் நடக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் தான், இன்று பிளாஸ்டிக் அரிசி வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், கடுகு எண்ணெயில் கலப்படம் காரணமாக, 18 பேர் இறந்ததாக செய்தி வந்தது. அதன் பின், உபரியாக எண்ணெய் விற்க கட்டுப்பாடுகள் அதிகமாகி, செக்கில் எண்ணெய் ஆட்ட, விற்க கெடுபிடிகள் வந்தன. இதன் காரணமாக பல லட்சம் செக்கு தொழில் செய்வோர், வேலை இழந்தனர்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, 'ரிபைண்ட்' செய்யப்பட்ட எண்ணெய் தான் சுத்தமானது, சுகாதாரமானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. அதன்பின் தான் தெரிந்தது, ரிபைண்ட் எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனம் செய்த, 'லாபி' என்று.இதுபோலவே தான், உப்புக்கும் நடந்தது. அயோடின் உப்பு தான் சிறந்தது என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக பெரிய உணவு அரசியல் செய்யப்பட்டு, சிறிய உப்பு வியாபாரிகள் அழித்தொழிக்கப் பட்டனர்.இதுபோலவே பிளாஸ்டிக் அரிசி போன்ற பீதியை உருவாக்கி, 'நாங்கள் சுத்தமான அரிசியை தருகிறோம்' என, அரிசி சந்தையை கைப்பற்றத் தான், இந்த வதந்தியோ என்று அச்சப்படாமலும் இருக்க முடியவில்லை; மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நம் பாரம்பரிய அரிசி வகைகளை வாங்கி, பட்டை தீட்டாமல் சாப்பிட வேண்டும். அருகாமையில் சிறிய கடையில் பொருட்களை வாங்க, பழக வேண்டும் அல்லது நேரடியாக விளைவிப்பவர்களிடம் வாங்கலாம்.
வெண்மையாக இருக்கும் பொருள் தான் சுத்தமானது, பெரிய நிறுவனத்தின் பொருள் தான் தரமானது என்ற மனநிலையை விட வேண்டும்.

கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வா. மணிகண்டன் அவர்களின் நிசப்தம் தளத்திலிருந்து.............

தொடர்புக்கு: vaamanikandan@gmail.com
எப்படித் தேர்ந்தெடுப்பது?
 

(23/02/18 நிலவரப்படி நேரடி கலந்தாய்வு நிறுத்தப்பட்டு, அதற்க்கு பதில் ONLINE கலந்தாய்வு வரவிருக்கிறது)

 பொறியியல் கலந்தாய்வுக்கான தகுதிப்பட்டியல் வெளியாகிவிட்டது. அடுத்தது கலந்தாய்வுதான். இந்தச் சமயத்தில் குழப்பமாகத்தான் இருக்கும். எந்தக் கல்லூரி, எந்தப் பாடப்பிரிவு என்றெல்லாம் மண்டைகாயும். கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை முடிவுற்று ‘இனி பொறியியல்தான்’ என்று இருக்கிற இத்தகைய தருணத்தில் தொடர்பு கொள்கிறவர்களுக்குக் பொதுவாகக் காட்டுகிற வழிமுறைகளை எழுதிவிடலாம் என்று தோன்றுகிறது.

1) முதலில் பாடத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் பாடப் பிரிவுத் தேர்வு இருக்கலாம். ‘எந்தப் பாடத்தை எடுக்கிறதுன்னே தெரியலை’என்று இப்பொழுதும் குழம்பியிருப்பவர்களுக்கு 

Electronics and Communication, 
Electrical, 
Computer science
IT, 
Mechanical
என்பதுதான் என்னுடைய பரிந்துரை வரிசை. அதற்காக பிற பாடப்பிரிவுகள் மோசம் என்று அர்த்தமில்லை- தரமான கல்லூரிகள் எனில் பிறப் பாடப்பிரிவுகளைப் எடுப்பது பற்றி யோசிக்கலாம். ஆகாவழிக் கல்லூரியென்றால் பிற பாடப்பிரிவுகளுக்குக் கும்பிடு போட்டுவிடலாம்.

2) பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்த பிறகு கல்லூரிகளின் பட்டியலைத் தயாரிப்பது இரண்டாவது முக்கியமான பணி. ஒவ்வொரு மாணவருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு கையேட்டை வழங்கியிருப்பார்கள். அந்தக் கையேட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் விவரங்களும் இருக்கும். கையேட்டின் உதவியுடன் பட்டியலைத் தயாரிக்க முடியும்.

3) எப்படி கல்லூரிகளின் பட்டியலைத் தயாரிப்பது?
  • அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு எனத் தனித்த பட்டியலைத் தயாரிக்க வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி, எம்ஐடி, அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி கோவை என்று கல்லூரிகளின் தரக் குறியீட்டின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியலைத் தயாரிக்கலாம். 
  • இரண்டாவது பட்டியல் தனியார் பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கியது. இப்பட்டியலும் கல்லூரிகளின் தரக் குறியீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும். 
கல்லூரிகளுக்கான பட்டியல் தயாரிக்கும் போது ‘இது நல்ல கல்லூரியா?’ என்கிற சந்தேகம் வரும். உதாரணமாக மதுரையில் இருப்பவர்களுக்கு சத்தியமங்கலத்தில் இருக்கும் பண்ணாரியம்மன் கல்லூரி பற்றித் தெரியாது. கூகிளில் (College name) engineering college review என்று தேடுவது மிகச் சுலபமான வழி. இரண்டு மூன்று தளங்களில் கல்லூரி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று படித்துப் பார்த்து முடிவுக்கு வரலாம். என்ன பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து கொண்டு மேற்சொன்னபடி கல்லூரிகளின் பட்டியலையும் தயாரிப்பதோடு வேலை முடிவதில்லை. நமக்கு பட்டியலில் இருக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்கிற தெளிவும் வேண்டும்.

4) உதாரணமாக 189.5 மதிப்பெண்களை(Cut-off) ஆகக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் கணிப்பொறி அறிவியல் படிக்க விரும்பினால் அவனுக்கு நிச்சயமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. ஆகையால் தமது பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை வைத்திருப்பது அவசியமற்றது. நீக்கிவிடலாம்.

தமது மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எப்படித் தெரிந்து கொள்வது? 

5) கடந்த ஆண்டில் இதே மதிப்பெண்ணுக்கு அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறதா என்று தேட வேண்டும். TNEA 2016 Engineering Admission cutoff என்று கூகிளில் தேடினால் நிறையத் தளங்கள் வந்து விழுகின்றன. தமது கட்-ஆஃப், சாதிப்பிரிவு (OC, BC, MBC, SC) ஆகியவற்றின் அடிப்படையில் தேடினால் நமக்கு குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை தீர்மானம் செய்துவிடலாம். ஒரே தளத்தை மட்டும் நம்பாமல் ஒன்றிரண்டு தளங்களிலிருந்து விவரங்களை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

6) தம்முடைய மதிப்பெண்ணைவிடக் குறைவான மதிப்பெண்ணுக்குக் கடந்த ஆண்டு இடம் கிடைத்திருந்தால் பச்சை நிறத்தில் குறித்து வைக்க வேண்டிய கல்லூரி அது. நிச்சயமாக இம்முறையும் கிடைத்துவிடும். கடந்த ஆண்டில் நம்முடைய மதிப்பெண்ணைவிடவும் கூடுதலாக அரை மதிப்பெண் அல்லது ஒரு மதிப்பெண்ணுக்குக் கிடைத்திருந்தால் (அதாவது 190 மதிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு கிடைத்திருக்கிறது - மாணவனின் மதிப்பெண் 189.5 ) நம்முடைய பட்டியலில் இத்தகைய கல்லூரிகளை சிவப்பு நிறத்தில் குறித்து வைத்துக் கொள்ளலாம்- கிடைத்தாலும் கிடைக்கும். இல்லாவிட்டாலும் இல்லை.

7) கல்லூரிகளின்  பச்சை சிவப்புப் பட்டியலைத் தயாரித்த பிறகு நம் வசதிக்கு ஏற்ப பச்சை நிறக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். வசதி என்பதில் குடும்பச் சூழல், நிதிச் சூழல் என பல தரப்பும் உள்ளடக்கம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் திருநெல்வேலிப் பெண் சென்னையிலும், கோவையிலும் படிக்கத் தயங்கலாம். அப்படியென்றால் தமது பட்டியலில் பச்சை நிறத்தில் குறித்து வைத்திருக்கும் தென் தமிழகத்துக் கல்லூரிகளை முதல் வரிசையில் வைத்துக் கொள்வது வேலையைச் சுலபமாக்கும்.


8) கலந்தாய்வுக்குச் செல்லும் போது இப்பட்டியல் தயாராக இருந்தால் பிரச்சினையே இருக்காது. 🙋🙋 நம்முடைய மதிப்பெண்ணுக்கு எந்தெந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருப்போம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் கணினி அறிவியல் என்ற எண்ணத்தில் கலந்தாய்வில் அமர்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம் . நம்முடைய வரிசை வரும் போது ஒருவேளை அந்தக் கல்லூரியில் இடம் காலியாகியிருந்தால் நம் பட்டியலில் அடுத்ததாக இருக்கும் சாலைப் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதுவுமில்லையென்றால் நம் பட்டியலில் உள்ள அடுத்த கல்லூரி. குழப்பமே இருக்காது.

9) தாம் விரும்புகிற பாடப்பிரிவு கணினி அறிவியல் என்றாலும் இன்னும் ஒன்றிரண்டு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அப்பாடப்பிரிவுகளுக்கும் இதே போன்ற பட்டியலைத் தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது. கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்க்க உதவும். சற்று மெனக்கெட்டால் இரண்டு மூன்று நாட்களில் நமக்கான இப்பட்டியலைத் தயாரித்துவிட முடியும். பிறகு ஒன்றிரண்டு பேர்களிடம் கலந்தாலோசித்து சிற்சில மாற்றங்களைச் செய்து இறுதி செய்து கொள்ளலாம்.மிக எளிமையான காரியம் இது. ஆனால் பெரும் சுமையைக் குறைத்துவிடும்.

ப்ளஸ் டூ முடித்துவிட்டு பொறியியல் சேர்வதற்குத் தயாராக இருப்பவர்களுக்கான குறிப்புகள் இவை என்பதால் அத்தகைய மாணவர்களிடமோ, கல்வி நிறுவனங்களிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்காக எழுதப்பட்ட பதிவு இது.

தொடர்புக்கு: vaamanikandan@gmail.com
வாழ்த்துக்கள்.
தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12?  


Thursday 29 June 2017

பால் தவிர்த்து...... கால்சியம் உள்ள உணவு வகைகள்

பால் குடிக்காதவர்களுக்கு, கால்சியம் கிடைக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன. 

தானியம் - கேழ்வரகு, சிவப்பு அவல், வரகு, கோதுமை, பனி வரகு; 



பருப்பு - கடலைப் பருப்பு, உடைத்த கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, ராஜ்மா, துவரம் பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணி;
 


கீரை - அகத்தி, பருப்பு, வெந்தயம், முருங்கை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி; 


காய் - கேரட், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய், நெல்லிக்காய், காலிபிளவர், முருங்கைக்காய், சுண்டைக்காய், வாழைப்பூ;

 
பழம் - கொய்யா, பேரீச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி. 



இலை - கேரட் இலை, முட்டைக்கோஸ் இலை, கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, காலிபிளவர் இலை; 



விதை - சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, எள்ளு உருண்டை, வால்நட், பாதாம்.  இவை தவிர பாதாம், வேர்க்கடலையை, 10 - 16 மணி நேரம், நீரில் ஊற வைத்து அரைத்து, தேங்காய் பால் போல பிழிந்து, பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.  இதன் பச்சையான சுவை பிடிக்காதவர்கள், சூடாக்கியும் பயன்படுத்தலாம்.



பிரண்டை - துவையல் செய்து சாப்பிடலாம் 



சூரிய ஒளி - வாரத்திற்கு 2 லிருந்து 4 முறை காலை (9 மணிக்கு முன்பாக) வெய்யிலில் 10 - 15 நிமிடங்கள் நிற்கலாம் இதன் மூலம் Vitamin D நமக்கு கிடைக்கிறது. 


(செய்தி   : தினமலர் நாளிதழிலிருந்து) 
(படங்கள் : கூகிளிலிருந்து )



Tuesday 27 June 2017

தண்ணீர் 6: மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பமும் (Bhungroo) குஜராத்தும்

குஜராத் 7 மாதங்கள் வெயிலில் வாட்டி எடுத்து, 3மாதங்கள் மிதமான வெயிலை கொடுத்து, 2 மாதங்கள் மழையில் நனைத்து எடுக்கும் மாநிலம். ஜூன் மாத துவக்கத்தில் இருந்து ஜூலை மாத இறுதி வரை நல்ல மலை பொழிவு இருக்கும். இதுவரை இருந்த ஊரா இது? என்று வியக்குமளவுக்கு மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் நீர் சூழ்ந்து இருக்கும்.

(மழைக்காலத்தில் நீர் நிரம்பி காட்சியளிக்கும் ஆழம் குறைவான கிணறு, ஜாம்நகர் அருகே குஜராத்)
ஒரு போகம் தான் விவசாயம் பண்ண முடியும். வசதியுள்ளவர்கள் (அதிக நிலம் வைத்திருப்பவர்கள்) வேண்டுமானால் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்வார்கள், மற்றபடி சிறுவிவசாயிகள் நிலை கஷ்டம்தான். வருட மழைநீர் பகிர்வை இயற்க்கை சமநிலையில் வைக்கவில்லை, வருடத்தில் அதிக நாட்கள் வறட்சியுடனும் குறைந்த நாட்கள் உபரி நீருடனும் இருக்கிறது குஜராத். 

புங்ரூ (Bhungroo):
புங்ரூ என்றால் குஜராத்தியில் உறிஞ்சி குழாய் (straw) என்று அர்த்தம். மழைநீரை நிலத்தின் மேல் சேமிப்பதற்கு பதிலாக குழாய் வழியாக நிலத்திற்கு அடியில் செலுத்தி சேமித்து வைத்து நமக்கு வேண்டும் போது எடுத்து உபயோக படுத்தும் ஒரு தொழிநுட்பமே புங்ரூ. போர் போட்டு நீர் எடுப்பதற்கு பதிலாக போர் போட்டு நீரை உட் செலுத்தி மீண்டும் நீரை எடுத்து பயன்படுத்தும் முறை. 
பிப்லாப் கேட்டன் பால் (Biplap Ketan Paul): 
வங்காளத்தை சேர்ந்த 46 வயதான பிப்லாப் என்பவர்தான் இந்த முறையை 2000மாவது ஆண்டில் வடிவமைத்து குஜராத்தில் முதல் முறையாக செயல்படுத்தினார், பின் 14 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றி திட்டத்தை செம்மைப்படுத்தி இன்று பல குடும்பங்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்திய திட்டமாக மாற்றியிருக்கிறார். நைரீடா தனியார் சேவை நிறுவனம் (Naireeta Services PVT LTD) என்ற  அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மானிய விலையிலும், வசதியானவர்களுக்கு மானியம் இல்லாமலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி தருகிறார். நிறுவனத்தின் முக்கிய நோக்கமே வறுமை ஒழிப்புதான்.
  1. முதலில் நிலமுள்ள தகுதி வாய்ந்த 5 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் திட்டத்தை பற்றி விளக்கி சம்மதம் பெறுவது.
  2.  பின் நிலத்தின் சரிவு தன்மையை (Landslope) ஆராய்ந்து புங்ரூ அமைப்பதற்கான தகுந்த இடத்தை தேர்ந்தெடுப்பது.
  3.  அடுத்து, நீரை நிலத்தின் அடியில் அனுப்பி மீண்டும் எடுத்து பயன்படுத்த முடியுமா என்ற நிலத்தடி ஆய்வு (பாறை பாங்கான இடங்களில் செய்யல்படுத்த முடியாது, நீரை தேக்கி வைத்து தன்னூடே நீர் ஓட்டத்தை அனுமதிக்கும் பாறைகள் அல்லாத பகுதியே சிறந்த இடம்) மேற்கொள்ளப்படுகிறது.
  4.  அதன் பிறகு 30 முதல் 100 மீட்டர் ஆழத்திற்கு குழாய் இறக்க படுகிறது, பின் அதனை சுற்றி 1 முதல் 2.5 மீட்டர் நீள அகலமும் மற்றும் 1 மீட்டர் ஆழமும் உடைய சிமெண்ட் தொட்டி கட்டப்பட்டுகிறது. இதனால் அடைப்பு ஏற்படாது, இலை, தலை, குப்பைகள் உள் செல்லாது தடுக்கப்படும்.
  5. இறுதியாக தண்ணீர் எடுக்க மோட்டார் வசதி அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பிற்கு மகளிர் சுய உதவி குழுக்களோ அல்லது நிலத்தின் உரிமையாளரோ பொறுப்பாக நியமிக்க படுகிறார்கள். 

40 மில்லியன் லிட்டர் நீரினை சேகரித்து வைத்து 7 மாதங்கள் வரை எடுத்து பயன்படுத்த முடியும், 17 வகையான வடிவங்களில் பல்வேறு வகையான பருவநிலைக்கு ஏற்றவாறு புங்ரூ இருக்கிறது. குஜராத், ஜார்கண்ட், பந்தல்கண்ட் (Bhundelkhand), உத்திர பிரதேசம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 7 மாநிலங்களில் வெற்றிகரமாக இந்த புங்ரூவை நிறுவியிருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்த திட்டம் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை, ஏனெனில் பிற மாநிலங்களில் உள்ளது போல "குறிப்பிட்ட காலத்தில் அதீத மழை பொழிவு" என்ற நிலை இல்லை.



Sunday 25 June 2017

அடேங்கப்பா ............இதுக்கு டெல்லி அளவு இடம் வேணுமாம்ல........

குப்பைகளை தரம்பிரித்து அதனை சரியாகக் கையாளத் தெரியாத நிலையில் 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட புதுடெல்லி அளவுக்கு பெரிய இடம் தேவைப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பு அசோசேம் தெரிவித்துள்ளது.

இத்தகைய தேவையினால் “இப்பெரும் நிலப்பரப்புகள் வேறு பயன்களுக்கு பயன்படுத்த முடியாத உருப்படியற்ற நிலப்பகுதியாக இருக்கும்.

2050-ல் 88 சதுர கிமீ நிலப்பரப்பு அதாவது புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பு அளவுக்கு குப்பைகளைக் கொட்ட இடம் தேவைப்படும்” என்று இந்தியாவில் கழிவு மேலாண்மை: மாறும் நிலமைகள் என்ற ஆய்வறிக்கையில் அசோசேம் மற்றும் கணக்கியல் நிறுவனமான பிடபிள்யுசி கூறியுள்ளது.

இந்தியாவின் 50% மக்கள் தொகை நகரப்பகுதிகளிலேயே வாழும் நிலை 2050-ல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 5% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது இந்த அறிக்கை.

2021- ம் ஆண்டில் கழிவுகளின் உற்பத்தி 101 மில்லியம் மெட்ரிக் டன்கள் என்றும் 2031-ல் 164 மெட்ரிக் டன்கள் என்றும் 2050-ல் இது 436 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை இருக்கும் முதல் அடுக்கு நகரங்கள் நாட்டின் மொத்த கழிவுகளில் 80% கழிவுகளை உற்பத்தி செய்யும், என்கிறது இந்த அறிக்கை.


2050-ம் ஆண்டுவாக்கில் குப்பைகளை கொட்ட புதுடெல்லி அளவுக்கு இடம் தேவைப்படும்: அறிக்கையில் தகவல் (தமிழ் ஹிந்து செய்தி)



நுகர்வு கலாச்சாரம் என்ன விளைவுகளை நம் சந்ததிகளின் மீதும் நம்மீதும்  ஏற்படுத்த போகிறது என்று யோசிக்கையிலேயே மலைக்க வைக்கிறது. வீதியில் இருக்கும் குப்பைகளை கொண்டு சென்று கடை கோடியில் உள்ள இடத்தில் கொட்டுவது இல்லை சுத்தம்,  நமது குப்பைகளை நாமே மறுசுழற்சி செய்து குப்பை வண்டிக்கு வேலை இல்லாமல் செய்வதே சுத்தமாக இருக்க முடியும். நமது குழந்தைகளுக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் தொடக்கமும் அது சென்று சேரும் இடத்தை பற்றியம் செய்தியை கொடுக்க வேண்டும். அது அவர்களை சிந்திக்க வைக்கும்.

தற்போது உள்ள குப்பை மேலாண்மை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய எனது முந்தய பதிவு . Awareness on Solid WasteManagement: (Reduce, Reuse, Recycle) 



இந்த விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும், நல்ல நல்ல திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளது சிறிது கஷ்ட்டப்பட்டாலும் குப்பையிலிருந்தும் சம்பாதிக்கலாம். மேலும் பயனுள்ள தகவல்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள் இணைந்து செயலாற்றுவோம்.


Sunday 18 June 2017

10 பயனுள்ள இலவச மென்பொருள் / வலைதளம்

ன்றைய அன்றாட வேலைகளில் கணிப்பொறியின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது, அத்தகைய சூழலில் சிறு சிறு வேலைகளுக்கு கூட நாம் Internet center சென்று பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு word document  to  PDF file ஆக மாற்றுவது, PDF fileன் size குறைப்பது (compress), Antivirus software வாங்குதல், video and audio file editing, தமிழ் typewriting போன்றவை. இந்த செயல்களுக்கு இலவசமாகவே மென்பொருளும் உள்ளது மற்றும் இணையதளமும் உள்ளது.

1) தமிழ் தட்டச்சு:

OFFLINE:  தமிழில் தட்டச்சு செய்ய Azhagi என்ற மென்பொருள் கிடைக்கின்றது, இது transliteration முறையில் செயல்படுகிறது.  http://www.azhagi.com/



ONLINE: இணையதளத்தில் தட்டச்சு செய்ய Quillpad,Google உள்ளீட்டு கருவி

2) Word document to  PDF file conversion offline:

CutePDF என்ற மென்பொருள் இதற்கு பயன்படுகிறது, இந்த இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் Download cutePDF from FileHippo . சில சமயங்களில் Word document ஐ printout எடுக்கும்போது word fileன் அமைப்பு முழுவதுமாக மாறிவிடும் அதுபோன்ற சமயங்களில் word file ஐ PDF file ஆக மாற்றி printout எடுத்தால் எந்த பிச்னையும் இருக்காது. 

3) PDF document compression online :

இணையதளத்தில் ஏதேனும் விண்ணப்பிக்கும் சமயத்தில் சில கோப்புகளை (Photo, mark sheet, resume,...) பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும் அதுவும் குறைந்த அளவில். நம்மிடம் உள்ள கோப்பு பெரிய அளவில் (large file size) இருந்தால் பதிவேற்றம் செய்ய இயலாது. 

உதாரணமாக 100kb size உடைய file தான் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனும் போது நம்மிடம் உள்ள file 150kb size இருந்தால்.......அது போன்ற சமயங்களில் நமது கோப்பின் அளவை குறைக்க pdfcompressor பயன்படுத்தலாம்.

4) File format conversion online:

தரவுகளை பல்வேறு வகையான வடிவங்களில் (image, document, மற்றும் audio, video) நமது தேவைக்கு ஏற்ப சேமித்து வைக்கலாம். 

Image format         : png, jpeg, tiff, gif,....,etc
Document format    : doc, docx, pdf, djvu, pub, ppt, xlsx,....,etc
Audio format          : mp3, wma,....,etc
Video format          :3gp, avi, flv, wmv, mp4, mpeg,.....,etc
Compressed format : rar, zip,....,etc

மேலுள்ள format களில் ஒரு format ன் உட்பிரிவில் உள்ள எந்த வடிவத்தையும் எதற்கும் மாற்றலாம். உதாரணமாக நாம் ஒரு புகைப்படத்தை jpeg என்ற வடிவத்தில் வைத்திருக்கிறோம் ஆனால சில இடங்களில் அதனை பார்க்க முடியாது tiff வடிவத்தில்தான் பார்க்க முடியும். அதாவது Photo.jpeg -----> Photo.tiff என்று மாற்றித்தான் பார்க்க முடியும். இதுபோன்ற வடிவ மாற்றத்திற்கு zamzar


5) இலவச மென்பொருள் பதிவிறக்க:

Browser, media player, drivers,.... போன்ற category களில் உள்ள இலவச மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய filehippo.

6)  ஒலிப்பதிவு மற்றும் திருத்தம: (multi-track recording and editing

சிறிது கடினமான மென்பொருள், ஒலிப்பதிவும் செய்யலாம் பாடல்களில் திருத்தமும் செய்யலாம்Audacity

7) Video cutter and joiner

மிக எளிமையான video editing மென்பொருள் Free Video Cutter Joiner.

8) Plot Digitizer:

நம்மிடம் ஒரு ஸ்கேன் செய்யப்பட்ட வரைபடமோ (graph) அல்லது செயல்பாட்டு தரவு (functional data) இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதிலிருந்து தரவுகளை எடுக்க அற்புதமான மென்பொருள் Plot Digitizer

9) ஆங்கில அகராதி: மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள ஆங்கில அகராதி மென்பொருள் WordWeb

10) Antivirus: Microsoft நிறுவனமே இலவசமாக இந்த  Microsoft security essentials
ஐ கொடுக்கிறது, ஆனால் நம்முடைய இயங்குதளம் அசலாக இருக்க வேண்டும் (Operating system should be Genuine not pirtaed)

கொசுறு:

1) UBUNTU/FEDORA: Windows Operating System க்கு மாற்றாக பெரும்பான்மையானவர்களால் பயன்படுத்தப்படும் மாற்று Operating Systemமே இந்த ubuntu/fedora, Linux Operating System வகையை  சார்ந்தது.

சாதகம்: இலவசமானது, Virus பிரச்னை அறவே இல்லை, எளிதில் நிறுவி விட முடியும், இயக்குவதும் சுலபம், Windows Operating System உடன் இதையும் சேர்த்து நிறுவி கொள்ளலாம் (Dual operating system).

பாதகம்: புது புது பயன்பாடுகள் நிறுவுவது (கண்டிப்பாக இணைய  வசதி தேவை), சிறிது முன் அனுபவம் வேண்டும்.
Ubuntu is an open source software operating system 
Fedora is an Unix-like operating system based on the Linux kernel and GNU programs 

2) rufus: இது USB drive/pen drive களை bootable device ஆக மாற்ற பயன்படும் ஒரு மென்பொருள். 

கணினியில் ஏதாவது ஒரு மென்பொருளையோ அல்லது ஒரு Operating System ஐயோ நிறுவ CD/DVD தேவைப்படும். அப்படி இல்லாமல் pen drive ஐ கொண்டு நிறுவுவது மிகவும் எளிதான வழி, அதற்க்கு இது உதவுகிறது.
Rufus is a utility that helps format and create bootable USB flash drives, such as USB keys/pendrives, memory sticks, etc.
 

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டணமில்லா Open Source மென்பொருளுக்கான பிரத்யேக இணையதளம் 
 
OPENSOURCE.COM 

இதுபோன்று கணிணி சம்பந்தமான தகவல்களுக்கு மிகவும் பயனுள்ள தமிழ் வலைதளம்




 
    

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...