Thursday 30 June 2016

படித்ததில் பிடித்தது 3

1) உண்மை ஒன்றே ஒன்றுதான்; பொய்கள்தான் பல.

2) நமது மனங்கள் சிறியவை, புரிதல் ஆற்றலும் குறுகியது. முழுமையை பார்க்க நம்மால் முடிவதில்லை, ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்கிறோம்.

3) வெறுப்பு கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் மட்டுமே இருக்க கூடியது; அன்புக்கு இறந்த காலமும் எதிர்காலமும் இல்லை.

4) புலன்களை நம்பாதே, விழிப்புணர்வை நம்பு; விழிப்புணர்வு புலன்களுக்கு பின்னால் மறைந்திருப்பது.

5) பிறருடைய சத்தியத்தை நம்ப ஆரம்பிக்கும் போது நீ சிரமப்பட்டுதான் போகிறாய்.

6) மனம் என்பது சேர்த்து வைத்து கொண்டிருக்கும் எண்ணங்கள், கடந்த காலத்தின் குப்பை கூளம், நீ அதனிடமிருந்து முழுக்க வித்தியாசமானவன்.
                                                                                                                                                 -ஓஷோ

7) தினமும் 2 மணிநேரத்தை உங்களுக்காக இல்லாமல், லாப நோக்கத்திக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகவும், பொதுநலனுக்காகவும் செலவிடுங்கள் வாழ்க்கை பயணம் பெரிதும் இனிக்கும், முதுமை இனிமையாக கழியும். முதியோர் இல்லங்களுக்கு சென்று முதியோருடன் பேசுங்கள்.
-வரலொட்டி ரெங்கசாமி

கேட்டதில் பிடித்தது

8) மனுஷனோட மனுஷன் சேர்ந்து வாழறதுதானே சந்தோசம், இது தெரியாத அறிவு என்ன அறிவு? 
 -தம்பி ராமய்யா

9) வேணும்னு சொல்றதுல இல்ல, வேண்டாம் அப்படிங்கறத அழுத்தி சொல்றதுதான் கெத்து.
-பாபி சிம்ஹா

10) KNOWING IS OWNING
-Sherlock Holmes, Season-3(Episode-3)

4 comments:

  1. Replies
    1. வருகைக்கும், பார்வைக்கும், இடுகைக்கும் நன்றி ஸ்ரீ. தங்களின் விதைக்கலாம் (vithaikkalam.blogspot.in) பார்த்தேன் நல்ல முன் மாதிரி.

      Delete
  2. Can you pls give your contact email if

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி முரளி அவர்களே. krsomes@gmail.com

    ReplyDelete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...