Thursday 30 June 2016

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 5

பசி: ஆற்றிலிருந்து ரயில் நிலையம் வரும் வழியில் ஒரு இடத்தில், சாலையில் சென்றுகொண்டிருப்பவர்களை அழைத்து வந்து உணவு கொடுத்தனர், எனக்கும் கொடுக்கப்பட்டது, அவர்கள் கூப்பிடாமல் இருந்திருந்தாலும் நானே சென்று வாங்கியிருப்பேன் அவ்வளவு பசி, களைப்பு. அருகில் உணவு விடுதிகள் இல்லை, அந்த நேரத்து உணவு தேவ அமிர்தமாக இருந்தது, அதை சுவைத்தது இல்லை ஆனால் இப்படி தான் இருக்கும் என்ற ஒரு கற்பனை. சாப்பிட்டு களைப்பு தீர நிழலில் அமர்ந்து இளைப்பாறிவிட்டு ரயில்நிலையத்தை அடைந்தேன், பயணசீட்டு எடுக்க 4 பெரிய வரிசைகளில் மக்கள் காத்துக்கிடந்தனர். அதில் ஒரு வரிசையில் நின்று அரை மணி நேரம் கழித்து ஹவ்ராவிற்கு ஒரு பொது வகுப்பு பயணசீட்டு  எடுத்து, 10.30 மணிக்கு நடைமேடையை அடைந்தேன்.

ஏற்றிவிட்டார்கள்: வரும் ரயில்கள் அனைத்திலும் மக்கள் சாரை சாரையாய் வந்து கொண்டே இருந்தனர் அவர்களை வேடிக்கை பார்த்தே நேரம் ஓடிவிட்டது. டெல்லியிலிருந்து வரும் ரயிலுக்காக காத்திருந்தேன், 1.5 மணி நேரம் ரயில் தாமதம், 12 மணிக்கு வரவேண்டிய வண்டி 1.30 க்கு தான் வந்தது. General compartmentல் கால் வைக்க முடியாத நிலை, வேறு வழியே இல்லை sleeper coachல் தான் ஏறியாக வேண்டும். ஏகப்பட்ட தள்ளு முள்ளு. இறங்குபவர்களாலும் நிதானமாக இறங்கமுடியவில்லை ஏறுபவர்களாலும் சரியாக ஏறமுடியவில்லை. எனக்கு முன் 10 பேர் எனக்கு பின் 10 பேர், உண்மையில் நான் ரயில் ஏற முயற்சிசெய்துகொண்டிருந்தேன். ஆனால் எனக்கு பின் இருந்தவர்களின் உந்து விசையால் நான் ரயிலில் ஏற்றப்பட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக எனக்கு பின் இருந்த குண்டு பெண்மணி முரட்டுத்தனமாக தள்ளிக்கொண்டு ஏற முயன்றுகொண்டிருந்தார், அவர்தான் என்னை தள்ளி தள்ளி ரயிலில் ஏறச்செய்தார் ஒருவழியாக ஏறிவிட்டேன், இல்லை ஏற்றிவிட்டார்கள். நம்ம ஊரில் வேலை நாட்களில் Peak hoursல் பேருந்துகளில் எவ்வளவு கூட்டம் இருக்குமோ அவ்வளவு கூட்டம் இருந்தது, இத்தனைக்கும் அது Sleeper compartment. இதுவே இப்படி என்றால் General compartment நிலைமை எப்படி இருக்கும்!!!!!!!!!!#####???????. யாராலும் எங்கும் நடந்து போய்வர முடியவில்லை, நின்ற இடத்திலேயே அசைந்துகொண்டிருக்க மட்டுமே முடிந்தது, இந்த கூட்டத்தில் TT வரமாட்டார் என்ற ஒரு நிம்மதி, அவரும் கடைசி வரை வரவேயில்லை. 2 மணிக்கு ரயில் கிளம்பியது, செல்ல செல்ல கூட்டம் குறைய ஆரம்பித்தது, 2 மணி நேரம் கழித்து நின்ற இடத்திலேயே அமரும் அளவிற்கு இடம் கிடைத்தது.

கொல்கத்தா: இரவு 2 மணி வரை தூங்கவேயில்லை, நின்றுகொண்டும், தரையில் அமர்ந்து கொண்டும் காலத்தை கடத்தினேன். இன்னும் 2 மணி நேரத்தில் கொல்கத்தா அடைந்துவிடும் சமயத்தில் Sleeper berth ஒன்று காலியாகி இடம் கிடைத்தது. படுத்து நன்றாக தூங்கிப்போனேன். 4 மணிக்கு ஹவுரா நிலயத்தை அடைந்து, ஹோட்டல் ஹவுராவில் (ஹவுரா நிலையத்தை விட்டு வெளிவந்து நின்று பார்த்தால் இந்த ஹோட்டல் தெரியும்) அறை எடுத்து தங்கினேன், ஒரு நாள் வாடகை 300 ரூபாய். 9 மணி வரை உறங்கி பின் எழுந்து குளித்து சாப்பிட சென்றேன்.

(http://myventure.in/list-of-startups-from-kolkata-that-are-making-it-big/)

தட்கால் சீட்டு: இதுதான் முதல் முறை கொல்கத்தா வீதிகளில் உலாவருவது, ஏனோ தெரியவில்லை கொல்கத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது குவாஹாத்தி செல்ல ரயில் கிடைக்காது விமானம்தான் ஒரே தீர்வு, விலையும் 2500 ஐ தாண்டாது. அதனால் விமானசீட்டு முன்பதிவு செய்ய Browsing center தேடிக்கண்டுபிடித்து browsing செய்துகொண்டிருந்தபோது ஒரு எண்ணம் தோன்றியது. எனவே சும்மா தெரிந்து கொள்ளலாமே என்று "இன்று (11/2/13) மலை குவாஹாத்தி செல்ல ரயிலில் பயணசீட்டு கிடைக்குமா?"  என்று விசாரித்தேன். கிடைக்குமென்றார்கள், Agentஇடம் சென்று Saraighat trainக்கு தட்கலில் முயற்சி செய்தபோது Tatkal Waiting List 7 என்று காட்டியது, சீட்டு உறுதியாகிவிடும் என்றார்கள், சரி பதிவு செய்யுங்கள் என்று சொல்லி 100 ரூபாய் முன்பணம் செலுத்தி வந்துவிட்டேன்.

காளி தரிசனம்: மாலை 3.50 மணிக்குத்தான் வண்டி, அதுவரை என்ன செய்யலாம், காளி கோவில் சென்றுவரலாம் என்ற யோசனை வந்தது. வரும் வழியில் ஒரு தமிழ் ஹோட்டல் இருந்தது. அங்கு இட்லி, தோசை சாப்பிட்டு காளி கோவில் செல்ல வழி கேட்டு  சென்றேன். காசி சென்று வருவதாகத்தான் திட்டம், ஆனால் காளி அன்னை தன்னை பார்க்க அழைத்திருக்கிறாள். கோவிலில் அன்னையின் தரிசனம் சிறப்பாக முடிந்தது. இப்போது வீட்டிற்கு phone செய்து கும்பமேளா சென்று வந்தது பற்றி கூறினேன், அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை, திட்டவுமில்லை. பிறகு கோவிலிருந்து படகு மூலம் ராமகிருஷ்ண மடம் வந்தடைந்தேன், மணி மதியம் ஒன்றாகியிருந்தது அதனால் மடம் மூடப்பட்டுவிட்டது.

VISITING  HOURS OF BELUR MATH

April to September:: 6.00 to 11.30 a.m. and 4.00 to 7.00 p.m.
October to March  :: 6.30 to 11.30 a.m. and 3.30 to 6.00 p.m.

அப்படியே பேரூந்து பிடித்து வந்து Tatkal ticket நிலவரம் பார்த்தால் உறுதியாகி இருந்தது. மீதி பணத்தை கொடுத்து சீட்டை வாங்கி கொண்டு மீண்டும் தமிழ் ஹோட்டலில் சாப்பிட்டு, ஹௌரா ஹோட்டல் அறையை காலி செய்து ரயில் நிலையத்தை மாலை 3.20 மணிக்கு அடைந்தேன். 3.50 க்கு கிளம்பி அடுத்த நாள் காலை 11.45 க்கு குவாஹாத்தியை வந்தடைந்தேன். இவ்வாறாக கும்பமேளா பயணம் எதிர்பாராத திருப்பங்களுடன் முடிவடைந்தது. எண்ணங்கள் நிறைவேறும் என்பதற்க்கேற்ப காசி செல்லும் வாய்ப்பு கிடைத்தது அடுத்த பதிவில் தொடர்வோம்........
  

    (http://www.railwire.co.in/pilgrimage.html)                                                 (http://blog.onlineprasad.com/amazing-and-rare-aarti-video-from-dakshineshwar-kali-temple/)

You see, my son, it is not a fact that you will never face danger. Difficulties always come, but they do not last forever. You will see that they pass away like water under a bridge. - Sarada Devi




 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...