Saturday 14 January 2017

ரமண மஹரிஷி பொன்மொழிகள்:

லகில் பல மதங்கள் உள்ளது, எண்ணற்ற ஆன்மீக பெரியவர்கள் அனைத்து மதங்களிலும் தோன்றி மக்களை நல்வழி படுத்தியிருக்கிறார்கள், பல்வேறு இடங்களில் பல்வேறு புனித தளங்கள் உள்ளன, ஏன் இவ்வளவு பிரிவுகள்? எதற்க்காக அனைத்தும்? யார் சொன்னதை/சொல்வதை கேட்பது? ஏன் இவ்வளவு குழப்பங்கள்? சிலர் சொல்வது பலிக்கிறது சிலர் சொல்வது நடப்பதில்லை. 

அனைத்திற்குமான விடை மிக எளியது. ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கைதான் அனைத்திற்குமான ஆணிவேர், ஆதாரம். மதம், உணவு, மருத்துவம், தொழில், நட்பு, பகை, உறவுகள் இப்படி எதை எடுத்தாலும் அனைத்தின் அடிநாதமும் நமது நம்பிக்கை மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

அதாவது நம் வாழ்க்கை இயங்குவது முதலில் எண்ண வெளியில்தான் (In Mental Space), அங்கு ஒரு எண்ணம் உருவான பிறகுதான் இந்த உலகில் (Physical Space) செயலாக மாறுகிறது. முழுமையான நம்பிக்கையோடு ஒரு செயலில் இறங்கினால் என்றும் வெற்றியே. கடவுள் நம்பிக்கையானாலும் சரி, மருத்துவ நம்பிக்கையானாலும் சரி, உறவுகள் மீது வைக்கும் நம்பிக்கையானாலும் சரி நாம் எந்த அளவு நம்புகிறோம் என்பதை பொறுத்துதான் நமக்கு கிடைக்கும் பலன்களும் அமையும்.

இந்த நம்பிக்கை பிறரிடமிருந்து வரலாம் அல்லது இயற்கையாகவே நமக்குள்ளிருந்து வரலாம். ஆனால் பிறரின் நம்பிக்கைகளை நம்புவதை விட நமது திடமான நம்பிக்கையை கொண்டு நமது வாழ்வை வாழும் போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் பிறக்கிறது. அதாவது பிறர் நம்புகிறார்களே அதனால்  நாமும் நம்பினால் நமக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.

ஒருவரின் செயல்கள், வாழ்க்கை, உபதேசங்கள் இவற்றின் மூலம் நம்பிக்கை பிறந்து அதை நம்புவது வேறு விஷயம். அந்த வகையில் எனக்கு இயற்கையாகவே ஈர்ப்பு ஏற்பட்ட மஹான்கள் மிக சிலரில் ரமண மகரிஷியும் ஒருவர். "நான்  யார்?" இந்த ஒற்றை கேள்வியில் அனைத்தையும் அடக்கியவர். அவரது விளக்கங்கள் அனைத்தும் இந்த கேள்வியை முன்னிறுத்தியே இருக்கும்.  அதில் சிலவற்றை இங்கு கொடுத்திருக்கிறேன்.



3



மனசு ஒரு மந்திர சாவி மாதிரி நம்பினால் எந்த அதிசயத்தையும் நடத்திக் காட்டும்

Never Stop Believing Because Miracles Happen Every Day
 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...