Thursday 10 January 2019

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: உடலுக்குக் கெடுதல் தரும், 'ஷாம்பு, சென்ட்' உள்ளிட்ட வேதிப்பொருட்கள் எதுவும் இல்லாமல், இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி, நம் கூந்தலின் மணத்தை அதிகரிக்கலாம்.முந்தைய காலத்தில் வெந்தயத்தை அரைத்து, தலைக்குக் குளிப்பர். கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை அரைத்து, தலையில் தேய்த்து, அரப்புப்பொடி, சிகைக்காய் தேய்த்துக் குளிப்பர். வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலைக்குத் தேய்ப்பர். வடிகஞ்சித் தண்ணீரை தலைக்குத் தேய்த்துக் குளிப்பர். இப்போது இந்த முறைகளெல்லாம், வழக்கொழிந்து விட்டன.

முடக்கத்தான் கீரையை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்க, தலையில் உள்ள அழுக்கு போகும். இதன் பின், கீழ்கண்ட பொடிகளால் துாபமிட, கூந்தல் மணக்கும்.
  • வெட்டிவேர், லவங்கபத்திரி, அகரு கட்டை, திருவட்டப்பச்சை தலா ஒரு பங்கு, கற்கண்டு மற்றும் சாம்பிராணி தலா, 5 பங்கு, சந்தனத்துாள், 10 பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, பொடி செய்து, தலைக்குத் துாபமிட்டால், கபாலத்திற்கும், தலை முடிக்கும் மிகவும் நல்லது. 
  • சந்தனத்துாள், 72 கிராம், கிச்சிலிக் கிழங்கு, 55 கிராம், வெள்ளை குங்கிலியம், 33 கிராம், சாம்பிராணி, 55 கிராம், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால் தலா, 15 கிராம், நாட்டுச்சர்க்கரை, 25 கிராம் எடுத்து, நன்றாகப் பொடி செய்து, தலைக்குத் துாபமிடலாம். 
  • சந்தனத்துாள், 120 கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்திதகரம், சாம்பிராணி, திருவட்டப்பச்சை தலா, 72 கிராம் எடுத்து துாபமிடலாம்.
  • சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி தலா, 25 கிராம், கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம், கொட்டம் தலா, 16 கிராம், அகில்கட்டை, 25 கிராம் எடுத்து, பொடி செய்து, பன்னீர் விட்டுப் பிசைந்து, சூரிய ஒளியில் காய வைக்கவும். பின் அதை நன்றாக பொடித்து, துாபமிட, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதால் உண்டாகும் தலை பாரம், சைனஸ், சளி, மூக்கில் நீர்வடிதல் மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை நீங்கும். 
  • ரோஜாப்பூ, 850 கிராம், கிச்சிலிக்கிழங்கு, இலந்தைப் பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி - ஜடாமஞ்சி, லவங்கபத்திரி, பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தம் தோல் தலா, 50 கிராம், கஸ்துாரி, 6 கிராம் ஆகியவற்றை பொடித்து, அதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து காய வைக்கவும். இதை பொடி செய்து, துாபமிட, கூந்தலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி, அருமையான வாசனை உண்டாகும்!
--தினமலர் நாளிதழிலிருந்து

Friday 4 January 2019

ஓராண்டு ஆனாலும் கெட்டுப் போகாது!!!.....வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்கப்பட்ட மழைநீர்!!!

மழைநீரை சேமித்து, குடிநீராக பயன்படுத்தி வரும், அரியலுார் மாவட்டம், கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த, சண்முகசுந்தரம்: விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், நான். அதனால், விவசாயத்தில் ஆர்வம் அதிகம். 15 ஆண்டுகளுக்கு முன், இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வாரோடு அறிமுகம் ஏற்பட்டது. அதனால், பாரம்பரிய விவசாயம், மரபு மருத்துவம் என, என் கவனம் திரும்பியது. என்னுடைய, ௦.5 ஏக்கர் நிலத்தில், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் போடாமல், விவசாயம்செய்கிறேன். ஆனால், சுற்று வட்டாரத்தில் ரசாயன விவசாயம் செய்வதால், பள்ளமான பகுதியில் உள்ள என் நிலத்திலும், மழைநீர் மூலமாக அந்தரசாயனங்கள் கலந்து விடுகின்றன. அதனால், வேறு இடத்தில், நண்பர்களோடு சேர்ந்து, இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவே, பச்சை நிறத்தில் ஆடை உடுத்தி வருகிறேன்.

 

'மழை நீரில், உயிராற்றல் அதிகம். அதை குடித்தால், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழலாம். கண் குறைபாடு வராது' என, நம்மாழ்வார், அடிக்கடி சொல்லி இருக்கிறார். அதனால், எங்கள் வீட்டில் உள்ள அனைவருமே, மழை நீரைத்தான் குடித்து வருகிறோம். 'மழை நீரைக் குடித்தால், சளி பிடிக்கும்' எனக் கூறுவர்; அது, தவறான கருத்து. எங்கள் அனுபவத்தில், அப்படி யாருக்கும் நடக்கவில்லை. பொதுவாக, தண்ணீரை சுட வைத்தால், அதன் சுவை மாறும். ஆனால், மழைநீரைக் கொதிக்க வைத்து குடித்தாலும், சுவை மாறாது. அத்துடன், மழை நீரைக் கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒரு நாளுக்கு, 300 மி.லி., மழைநீரே, ஒருவருக்குபோதுமானதாக இருக்கும்.

மழை நீரை குடிப்பதால், தாகம் எடுக்காது; உடலில் சோர்வு ஏற்படாது. அந்தளவு, அதில் தேவையான உயிர் சத்துக்கள் உள்ளன. மழை பெய்ய ஆரம்பித்ததும், மொட்டை மாடியில் உள்ள கழிவுகள் எல்லாம் அடித்து, குழாய் வழியாக கீழே வரும்.அதெல்லாம் நீங்கி, தண்ணீர் சுத்தமாக வரத் துவங்கியதும், பருத்தி துணியால் வடிகட்டி, பாத்திரங்களில் பிடித்து வைத்துக் கொள்வோம். வெயில் படாமல் வைத்திருந்தால், ஓராண்டு ஆனாலும் மழைநீர் கெட்டுப் போகாது; துர்நாற்றம் வராது. இயல்புத் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். மழைநீரை மட்டுமே குடித்து, எந்த உணவும் சாப்பிடாமல், பல நாட்கள் இருந்துஉள்ளேன்.
--தினமலர் நாளிதழிலிருந்து

மழைநீரை வடிகட்டி குடிக்கும் முறை:
எங்கள் வீட்டிலும் மழைநீரைத்தான் குடிக்க பயன்படுத்துகிறோம். வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் போது முதல் இரண்டு மழை நீரை பிடிப்பதில்லை, அதில் காற்றில் மற்றும் மேற்கூரையில் இருக்கும் அசுத்தங்கள் கலந்து இருக்கும். வசதி இருந்தால் மழை நீர் சேமிப்பு அமைப்பை முறையாக நிறுவிக்கொள்ளலாம் இல்லையெனில் மழைநீரை பாத்திரத்திலோ, drum அல்லது பிளாஸ்டிக் Barrel லிலோ பிடித்து வைக்கலாம். ஒரு நாள் அந்த பாத்திரத்திலேயே இருக்க வேண்டும்.....பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும, அதன் பிறகு நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து வேறொரு பாத்திரத்தில் மழைநீரை மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும.

என்னதான் வடிகட்டினாலும் மழைநீரில் கலந்திருக்கும் நுண் துகள்கள் வடிகட்டப்படாது, ஒரு வாரம் வரை வைக்கும் போதுதான் அந்த துகள்கள் பாத்திரத்தின் அடியில் சேகரமாகும். பாத்திரத்தில் உள்ள மழைநீரை மாற்றிய பிறகு பாத்திரத்தின் உட்பகுதியை தேய்த்து கழுவினால் வெளிர் பழுப்பு நிறத்தில் படிந்துள்ள அசுத்தங்களை காண முடியும். இப்படி இரண்டு மூன்று முறை மாற்றிய நீரை குடிக்க பயன்படுத்தலாம். கடைசியாக மாற்றிய பாத்திரத்தில் கூட அடியில் உள்ள நீர் வரை குடிக்காமல் கடைசியில் உள்ள நீரை அலசி ஊற்றி விட வேண்டும். தொடர் மழை பெய்யும் காலங்களில் இந்த அசுத்தங்கள் குறைய வாய்ப்புள்ளது.

 தொடர்புடையவை....
தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்
தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2  
 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...