Labels

Showing posts with label Good reads. Show all posts
Showing posts with label Good reads. Show all posts

Tuesday, 30 July 2024

மனிதனின் உண்மையான இயல்பு ஏது தெரியுமா?

 

இருட்டில் ஒரு மொட்டையான அடிமரம் நிற்கிறது. அந்த வழியே வந்த ஒரு திருடன் அதைப் பார்த்துவிட்டு, ஒரு போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்தான். தனது காதலியையே நினைத்தவண்ணம் இருக்கும் ஒரு இளைஞன் அந்த மரத்தைக் கண்டு தனது காதலி நிற்கிறாள் என நினைக்கிறான். பேய்க் கதைகளைக் கேட்டிருந்த ஒரு குழந்தை, அதே மரத்தைப் பேயாகக் கண்டு பயத்தில் அலறுகிறது. 

இருந்தது என்னவோ ஒரே அடிமரம்தான், ஆனால் அவர்கள் தங்கள் தங்கள் நினைப்பிற்கேற்றபடி அதை வெவ்வேறாகக் கண்டார்கள்.

இதேபோல இன்னொரு உதாரணம். ஓர் அறையில் ஒரு குழந்தையும், பொற்காசுகள் நிறைந்த ஒரு பையும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திருடன் ஒருவன் அங்கே வந்து பொற்காசுகளைத் திருடிச் செல்கிறான். பொற்காசுகள் திருட்டுப் போனது குழந்தைக்குத் தெரியுமா? குழந்தையின் உள்ளே திருடன் என்ற எண்ணமே கிடையாது. ஆகவே அது வெளியிலும் திருடனைக் காணவில்லை.

இந்த இரு உதாரணங்களையும் கூறி சுவாமி விவேகானந்தர் ஒரு மகத்தான உண்மையை நம்முன் வைக்கிறார். அதாவது நமது மனநிலைக்கு ஏற்றபடிதான் நாம் வெளியுலகைக் காண்கிறோம். அவர் கூறுகிறார்: பாவம், துன்பம் என்று நீங்கள் இங்கே காணும் எல்லாமே உங்கள் பலவீன மனத்தின் விளைவுகளே அல்லாமல் வேறு என்ன?..குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல் ஆக்கப்பூர்வமான, உறுதியான, உதவுகின்ற எண்ணங்களே தோன்றட்டும். இப்படிப்பட்ட உறுதியான எண்ணங்களுக்கே  உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இடமே கொடாதீர்கள். உங்கள் மனத்தை மூடியிருக்கும் மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். உண்மையை அறியுங்கள், உண்மையையே கடைப்பிடியுங்கள். குறிக்கோள் தூரத்தில் இருக்கலாம். ஆனால் விழித்திருங்கள், எழுந்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நிற்காதீர்கள். ‘நானே பரம்பொருள், நானே பரம்பொருள்’ என்று உங்கள் மனத்திற்கு எப்போதுக் சொல்லுங்கள். இரவு பகலாக உங்கள்  மனத்தில் அந்த எண்னம் ஒரு பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். மரணத்தின் தருவாயில்கூட நானே பரம்பொருள் என்று முழங்குங்கள். அதுதான் உண்மை.

Saturday, 20 March 2021

தேஜோமயானந்தர் அருளுரை

வாழ்க்கையில் யார் ஒழுங்குமுறைகளைக் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியைத் தழுவுகிறார்கள். ஒழுக்கமில்லையெனில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.

* உயர்ந்த குணங்களை வளர்த்துக் கொண்டு, அவற்றைக்
கடைபிடித்து வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும்
எண்ணத் தொடங்கினால் போதும்.


* இவ்வுலகில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு
கண்டுவிடலாம். இது மிகவும் அவசியமான ஒன்று.
ஆனால், பிரச்னைகளுடன் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ள
நாம், பிரச்னைகள் எதுவுமே இல்லையென்றால் பயந்து
போகிறோம்.

* நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் எளிமையானவையாக,
தினசரி செய்ய வேண்டியனவாக இருக்கலாம். அல்லது
மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டியனவாக
இருக்கலாம். அவை எத்தகையனவையாக இருப்பினும்,
அவற்றை செய்வதில் உறுதியுடன் இருக்குமாறு வேதங்கள்
நமக்குக் கூறுகின்றன.

* மற்றவர்கள் எதைச் செய்கிறார்கள் அல்லது செய்யாமல்
இருக்கிறார்கள் என்று ஆராய முற்படாதீர்கள். உங்களுடைய
கடமைகளை முறையாகக் செய்வதில் மட்டும் கவனம்
செலுத்துங்கள்.

* நம் கடமைகளைச் செய்யும் பொழுது, மற்றவர் தம்
கடமைகளைச் சரிவர செய்கிறாரா இல்லையா என்பது பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அதேபோல் கடமைகளைச் செய்வதில், சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.

* ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் செய்யும் பொழுது அதைச் செய்வது நமது கடமை என்ற மனப்பாங்குடன் செய்யவேண்டும். நம்முடைய கடமைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது வெளியிலோ நமக்கென்று விதிக்கப் பட்டுள்ள கடமைகளை நாம் உறுதியுடன் செய்ய வேண்டும். மேலும் இச்சையினால் தூண்டப்பட்ட செயல்களை நாளடைவில் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
-------------------------
-தேஜோமயானந்தர்

Tuesday, 16 October 2018

தியானம்:

தியானம்,   நமக்குள் நம்மை கூட்டிச்செல்லும் ஒரு அற்புத பயணம். புறம் நோக்கி ஓடும் ஆற்றலை தடுத்து அகம் நோக்கி திருப்பி, உலகத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சலனங்களிலிருந்து நம்மை பாதுகாத்து, நமது நோக்கத்தை தெளிவுபடுத்தி நம்மை உற்சாகத்துடன் பயணிக்க வைக்க உதவும் சக்தியை  தருவது தியானம்.


 நமது உடலானது காற்று, நீர், உணவு மற்றும் உறக்கம் ஆகியவற்றின் மூலமாக ஆற்றலை பெறுகின்றது. இப்படி பெறப்பட்ட ஆற்றலை நாம் எப்படி செலவிடுகிறோம்?.....இந்த செலவிடும் தன்மை எதை பொறுத்தது?

ஆற்றலை செலவிடும் தன்மை அவரவர் மனதை பொறுத்தது. மனம் ஒரு நிலையில் இல்லையென்றால் ஆற்றல் விரயம் அதிகமாக இருக்கும், நோக்கத்தில் தெளிவு இருக்காது, செய்யும் செயல்கள் முழுமை பெறாது முடிவாக சலிப்பே எஞ்சி நிற்கும்.

ரூபமான பொருள் போல கண்களுக்கு புலப்பட்டால், மனதை நாம் கட்டுப்படுத்தும் சாத்தியம் உண்டு. ஆனால் மனமோ அரூபமானது, கட்டுக்குள் வராதது, அடங்காதது, நிலையில்லாதது, சக்தி வாய்ந்தது, எதையும் தரவல்லது, இறைவனையும் காட்ட வல்லது.....கொடூரத்தின் உச்சத்தையும் காட்ட வல்லது....இவ்வளவு ஏன் நம்மை ஏமாற்றியவர்களின் பட்டியலை தயாரித்தால் அடுத்தவர்களை எல்லாம் பின்னுக்கு அல்ல.....பாதாளத்திற்கே  தள்ளி முதலிடம் பிடிப்பது நமது மனம் தான்.

இப்படிப்பட்ட அளவற்ற சக்தியை கொண்ட மனதை அடக்க அல்லது நமது நோக்கத்திற்கு பயன்படுத்தி நம்மை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல ஒரு சக்தி உண்டென்றால் அது தியானம் மட்டும்தான்.

மனதை செப்பனிட்டால் அது ஒரு வடிவம் பெறுகிறது, நாம் பெற்ற ஆற்றலை முறையாகவும், விழிப்புணர்வுடனும் செலவிட மனம் ஒரு கருவியாக மாறும். நேரடியாக மனதை வென்றுவிட முடியுமா?... முடியாது; தியானம்தான் நம் மனதை நாம் விரும்பியபடி அழைத்து செல்ல உதவும் ஒரு ஒப்பற்ற கருவி; மாட்டின் மூக்கில் போடும் மூக்கு கயிறு போல....

நாள் முழுதும் எண்ண சிதறல்களோடு வேலைசெய்து, நாளின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ எண்ணத்தை குவித்து தியானம் செய்வதின் பலன் மிக குறைவே. ஜென் தத்துவம் போல.... ஒவ்வொரு செயலிலும் தியானத்தில் ஈடுபடுவதுபோல் ஈடுபட்டால் பிறகு வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும்.

தியானத்தின் பயன்களாக இவற்றை குறிப்பிடுகிறார் பாரதியார் .....

* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது.

* புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.

* கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.

* மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.

Unwavering Focus | Dandapani | TEDxReno
Dhiyanam (Tamil) Paperback – 2008 by K S Ilamathi (Author)
தியானம் செய்யும்போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தியானம் செய்வது எப்படி ஒரு எளிமையான விளக்கம்:
முதன் முதலான தியானம் செய்யும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள்
தியானம் செய்தால் என்ன கிடைக்கும்?



Wednesday, 18 April 2018

படித்ததில் பிடித்தது 5


உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் அந்த ஒரு நபரை தேடுகிறீர்களா?.... அப்படியென்றால் சென்று கண்ணாடியில் பாருங்கள்.

மனதிற்கு  இணக்கமான பிடித்த வேலையை தேர்ந்தெடுத்துக் கொண்டால் நீ ஒரு போதும் வாழ்வில் வேலை செய்ய வேண்டியதில்லை.
("Choose a job you love, and you will never have to work a day in your life." -Anon)

இந்த தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவெனில், மனிதன் தனது அணுகுமுறையை மாற்றியமைப்பதின் மூலம் தனது வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.
("The greatest discovery of my generation is that human being can  alter his life by altering his attitude."-William James) 

தனக்கு எந்த விதத்திலும் எதுவும் செய்ய முடியாத ஒரு மனிதனை ஒருவன் எவ்வாறு நடத்துகிறான் என்பதை வைத்து அவனின் குணநலன்களை நாம் மதிப்பிடலாம்.
("You can easily judge the character of a man by how he treats those who can do nothing for him"-James D  Miles )

சிலருக்கு மன உறுதி உள்ளது சிலருக்கு மன உறுதி கிடையாது என்று சொல்வதைவிட சிலர் மாறுதலுக்கு தயாராக இருக்கிறார்கள் சிலர் இல்லை என்று சொல்லலாம்.
("It's not that some people have willpower and some don't. It's that some people are ready to change and others are not." -James Gordon )
 
“If you want to build a ship, don’t drum up people to collect wood and don’t assign them tasks and work, but rather teach them to long for the endless immensity of the sea.” -Epictetus

"Amid all your philosophy, be still a man." -David Hume

"Our most important thoughts are those which contradict our emotions." -Paul Valery 

"A friend is someone with whom you dare to be yourself." -Frank Crane
From The Assam Tribune Newspaper.

தொடர்புடையவை...
படித்ததில் பிடித்தது 4
படித்ததில் பிடித்தது 3
படித்ததில் பிடித்தது 2
படித்ததில் பிடித்தது 1

Saturday, 17 March 2018

WhatsApp காணொளிகள் - 1:

5 Minutes-Crafts:
ஊசியில் எவ்வாறு எளிமையாக நூல் கோர்ப்பது, நீளமான முழு கால்ச்சட்டையை(Pant) வெட்டாமல் எவ்வாறு குறைப்பது போன்ற பயனுள்ள தகவல்கள் செய்முறையாக இங்கே...5 Minutes-Crafts என்ற பயனுள்ள காணொளி Facebook ல் அடிக்கடி வரும் அதில் ஒன்று தான் இந்த காணொளி. 

 

கொசுறு: ஆயத்த  முழு கால்ச்சட்டை(Ready made Pant) போட்டு பார்க்காமலே எவ்வாறு இடுப்பளவை சரிபார்ப்பது?
முழுகால்ச்சட்டையின் இடுப்பு பகுதியை கழுத்தை சுற்றி வைத்துப் பார்க்க வேண்டும், கழுத்தின் சுற்றளவும் முழுகால்ச்சட்டையின் இடுப்பு அளவும் ஒத்துப்போனால் அது உங்களுக்கு பொருந்தும். அல்லாமல் கழுத்து முழுதும் சுற்றிய  பின் pantன்  இடுப்புப் பகுதி மிச்சம் இருந்தால் முழுகால்ச்சட்டை தொளதொளவென பெரிதாக இருக்கும் அல்லது pantன் இடுப்புப் பகுதி கழுத்தை சுற்றிய  பின் கழுத்தின் சுற்றளவை விட குறைவாக இருந்தால் முழுகால்ச்சட்டை உங்களுக்கு இறுக்கமாக இருக்கும்.

மரணத்தின் விளிம்பில் மனிதர்கள் சொன்ன வருத்தமான வார்த்தைகள்:
எவ்வளவுதான் அடுத்தவர்களின் அனுபவங்களை கேட்டாலும் நாமாக பட்டு தெரிந்து கொள்ளும்வரை நம் மனதில் பதியும் விஷயங்கள் வெகு குறைவே, இருந்தாலும் இதை பார்த்தாவது ஏதாவது எடுத்துக்கொண்டால்....

 

தேசிய நீர்வழிச்சாலை திட்டம்:
சமீபத்தில் கேள்விப்பட்ட திட்டங்களில் மிகச்சிறந்த திட்டம் இது. நாடு முழுதும் பெய்யும் மழை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவுகளில் பெய்கிறது, இதன் மூலம் ஏற்படும் சமநிலையின்மையை சமன்படுத்தி பயன்படுத்தி கொள்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்களுக்கான தலைமையாசிரியர் வேண்டுகோள்:
சிங்கப்பூரில் உள்ள பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு கடிதம் கீழ்வருமாறு எழுதியதாக வந்த ஒலிப்பதிவு இது. பாட புத்தக அறிவை வளர்ப்பதோடு குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் செய்தி.


திட்டமிடாத வேலை எப்படி இருக்கும்?:
சிலர் பேசினால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம், அதுவும் நகைச்சுவையோடு பேசினால்...தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் பேச்சுப் பதிவு இது. 


Sunday, 18 February 2018

முப்பொழுதும் உற்சாகமுடன் இருக்க: உயர்ந்தவற்றிற்கு ஆசைப்படு


தொலைநோக்குடன் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் ஜெகதீஷ் வாசுதேவ்: எவ்விதமான தொலைநோக்கும் இன்றி, ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இன்றி, இங்கு ஒருவர் வாழ வேண்டுமெனில் அதற்கு ஒரே வழி, அவர் கள்ளங்கபடமற்றவராகவும் அகங்காரம் அற்றவராகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர் மட்டும் தான் இங்கே சும்மாவே ஆனந்தமாக வாழ முடியும். அவருக்கு தொலைநோக்கும் தேவையில்லை, அல்லது எதைப் பற்றிய விருப்பமும் கிடையாது. ஆனால் ஒருவர் இந்நிலையில் இல்லாவிட்டால், அவர் தொலைநோக்குடன் வாழ்வது மிகமிக அவசியம்.

இன்று மனிதனின் விருப்பத்திலும், தொலைநோக்கிலும் ஒரு தெளிவு இல்லை. உலகிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் உண்மையிலேயே என்ன விரும்புகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை 'வாழ்ந்து' கொண்டிருக்கிறார்கள். அல்லது, தான் விரும்புவது என்ன என்று தெரிந்திருந்தும், தங்களுக்கு வேண்டியதை நடத்திக் கொள்ளும் மனஉறுதியோ, தொலைநோக்கோ அவர்களுக்கு இருப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் மக்கள் தங்களுக்கு எது மிக எளிதாகக் கிடைக்கிறதோ, தங்கள் கைகளுக்கு எது எட்டுகிறதோ, அதுவே போதும் என்று இருந்து விடுகின்றனர். 

ஏதாவது ஒன்று எளிதாகக் கிடைக்கிறதென்றால், அது வேண்டுமா, வேண்டாமா என்றெல்லாம் பார்க்காமல், அதை அடைவதற்கு மக்கள் தயாராகி விடுகின்றனர். எளிதாகக் கிடைக்கிறது, அது ஒன்றே போதும் அவர்களுக்கு! கடந்த ஆயிரம் ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளி சூழ்நிலையில் அதிசயத்தக்க மாறுதல்களை மனிதன் செய்திருக்கிறான். ஆனால் அதே நேரத்தில், 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற ஒரு எண்ணத்தால், தனக்கும் இவ்வுலகிற்கும் அவன் மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறான். இலட்சம் வருடங்களில் நடக்காதது, கடந்த 1000 வருடங்களில் நடந்திருக்கிறது. அதே நேரத்தில், 'எளிதாகக் கிடைப்பதெல்லாம் வேண்டும்' என்று, வேண்டாதவைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். தனக்கு உண்மையிலேயே தேவையற்ற பலவற்றையும் அவன் செய்திருக்கிறான். இவ்வுலகில் மனிதன் செய்திருக்கும் பலப்பல மாற்றங்கள், இன்று அவனுக்கே தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே 'செய்வதற்கு எளிது' என்ற ஒரு காரணத்தாலேயே அவனால் செய்யப்பட்டது.

தேவையான தொலைநோக்கு இல்லாமல், தனக்கு தோன்றியதை எல்லாம் செய்துவிட்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதன் விளைவுகள் தெரியும் போது, மனிதன் மனம் நொந்து கொள்கிறான். தனக்கு உண்மையிலேயே என்ன தேவை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கவனம் இன்றி, 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற கண்ணோட்டத்தில் அணுகுவதால், வரமாய் இருந்திருக்க வேண்டிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இன்று சாபக்கேடாய் ஆகியிருக்கிறது. இது போன்ற கண்ணோட்டத்தில் வாழ்வைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டுவிட்டதால், அவனின் வாழ்வை சுலபமாகவும், சுகமாகவும் மாற்றவல்ல விஞ்ஞானம், இன்று அவன் வாழ்வை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கும், மனஉறுதியும் இன்று இவ்வளவு குறைவாக இருக்கக் காரணம், சுற்றி இருக்கும் உலகை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தான். இந்த நொடியில் உலகின் போக்கு எப்படியிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டே நம் வாழ்வை நிர்மாணிக்க முயல்கிறோம். தற்போதைய நிலவரத்திற்கு ஒத்து, தொலைநோக்கை முடிவு செய்தால், மீண்டும், எது கிடைக்குமோ, எது எளிதாக நடக்குமோ, அதற்கே முன்னுரிமை வழங்குவோம். அதனால், எதை அடையமுடியும், எதை அடையமுடியாது என்று யோசிக்க வேண்டாம்.
வாழ்வில் எதை உச்சபட்சமாக அடைய முடியுமோ அதை உங்கள் தொலைநோக்காகக் கொள்ள சிந்தியுங்கள். உங்களைப் பொறுத்தவரை உயர்ந்தது எதுவோ, அதற்காக வாழுங்கள். அது நடக்குமா, நடக்காதா என்பது பற்றி கவலையில்லை. அது நடக்கிறதோ, இல்லையோ, அத்தகைய தொலைநோக்குடன் வாழ்வதே மிக உயர்வானதாக, நிறைவைத் தருவதாக இருக்கும். அப்படி வாழ்வது யாருக்குமே மகிழ்ச்சி தரும் செயலாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கு வைத்திருக்கிறீர்கள்… அது எளிதானதா, கடினமானதா என்று உங்களுக்கு கவலையில்லை, அதை சாதிக்க முடியுமா, முடியாதா என்ற தயக்கம் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அதன் முடிவைப்பற்றி உங்களுக்குக் கவலையில்லை. ஆனால் உங்கள் தொலைநோக்கிற்காக உங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாயிருக்கிறீர்கள். இப்படி வாழ முடிந்தால், இதுவே உன்னதமான நிலைகளை அடைவதற்கு மிக எளிய வழியாக இருக்கும். 
 உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது மட்டுமே கண்ணாக, வேறு எப்பக்கமும் கவனம் சிதறாமல், அது நடக்குமா நடக்காதா என்ற யோசனை இல்லாமல், உங்கள் உயிரையும் அதற்கென கொடுத்திடுங்கள். அவ்வாறு இருந்தால், அது நமக்குள்ளும், வெளியேயும் இருக்கும் தடைகளை தாண்டிச் செல்ல உதவுவதோடு, வாழ்க்கை, உயிர், மற்றும் அதைத் தாண்டிய பரிமாணங்களை அறிவதற்கும் வழிவகுக்கும். மனிதர்கள் எப்போதும் குழம்பிய குட்டையாய், தங்களுக்கு வேண்டாதவற்றையே பெரும்பாலும் தேடிக் கொண்டிருப்பதால் தான், அவர்களுக்கு வேண்டியது அவர்களுக்குக் கிட்டுவதில்லை. வாழ்வின் எக்கணத்திலும், நாம் கடந்து வந்திருக்கும் சூழ்நிலைகளையே அளவுகோலாகக் கொண்டால் அல்லது நம் தர்க்க அறிவிடம் ஒன்று முடியுமா, முடியாதா என்று நாம் கேட்டால், அது எப்போதுமே சராசரியான விஷயங்கள் மட்டுமே சாத்தியம் என்று சொல்லும். ஆனால் ஒருவருக்கு அவரது தொலைநோக்கு தெள்ளத் தெளிவாக இருந்தால், தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அதுவே வேண்டும் என்று அவர் ஏங்கினால், மிகமிக உயரியவையும் அவர் காலடியில் வந்து விழும்.

இது சாக்ரடீஸின் வாழ்வில் நடந்தது: சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணத்தால், துரதிர்ஷ்டவசமாக அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தன் தண்டனைக்காக அவர் காத்திருந்த அந்த கடைசி சில வாரங்களில், அவருக்கு இசையின் மீது ஆர்வம் பிறந்தது. தன் வாழ்வில் அதுவரை அவர் தத்துவமேதையாகவே அறியப்பட்டார். அவரும் அவ்வாறே இருந்தார். இசையின் மீது அப்படி ஒன்றும் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கடைசி சில வாரங்களே இருந்த போது அவருக்கு இசையின் மீது நாட்டம் வந்தது. அந்தக் கடைசி வாரங்களிலே இசையைக் கற்க ஆரம்பித்து, மிக அற்புதமாகவே இசைக்க ஆரம்பித்துவிட்டார். இசையின் வாயிலாக தன் வாழ்வையே புதுவிதமாய் அனுபவிக்கத் துவங்கினார் அவர். திடீரென அவருக்கும், அவரது வாழ்விற்கும் இசை ஒரு புதிய அழகை ஏற்படுத்தியது. அன்று அவரைக் கொல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவர் ஒரு பெரிய இசைக் கலைஞனாய் வளர்ந்திருக்கலாம். நாமும் அவரை தத்துவமேதையாக அல்லாமல், இசைவல்லுநனராய் அறிந்திருப்போம். இதுபோல், ஒரு மனிதன் முடிவு செய்தால்… தன் வாழ்நாளின் கடைசி வாரங்கள் என்றாலும், அந்தக் கடைசி நாட்களிலும் கனவு காண்பதற்கும், அதை நிறைவேற்றிக் கொள்வதற்குமான மனோதிடமும், உறுதியும் அவனுக்கு உண்டு.

இவையெல்லாம் தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் ஒரு விஷயம் - உங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாக இருந்தால், அதுதான் எல்லாம் என்று நோக்கம் வைத்திருந்தால், இன்று மிகக் கடினமாகத் தோன்றுவது கூட, நாளையே உங்கள் வாழ்வில் சராசரி விஷயமாகிவிடும். எவ்வித ஆரவாரமும் இன்றி, உங்கள் காலடியில் அது வந்து விழும். ஆனால் ஒவ்வொரு கணமும், 'இது முடியுமா, முடியாதா' என்று உங்கள் தர்க்க அறிவை நீங்கள் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால், உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் குழப்பமே, இவ்வுலகிலும் பிரதிபலிக்கத் துவங்கிவிடும்.

உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அது, இன்றைக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி அல்ல. ஒரு மனிதனாக, உங்களுக்கு உண்மையிலேயே வேண்டியது என்ன? உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் மிக உயரியது எது? என்று பார்த்து அதற்கான தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரேயொரு மனிதனுக்கு தொலைநோக்கு இருந்து, மற்றவர்கள் எல்லாம் அதற்கு எதிராக வேலை செய்தால், மிகக் குறைந்த அளவில்தான் அதை நோக்கிய முன்னேற்றம் இருக்கும். ஆனால் பலர் ஒன்றாக இணைந்து ஒரே தொலைநோக்கில் செயல்பட்டால், மிகமிக அழகான விஷயங்கள் நம் சமுதாயத்தில் நிகழும்!

--தினமலர் நாளிதழிலிருந்து.


Sunday, 3 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 1

மணிப்பூரின் அன்னையர்கள் - உலகையே உலுக்கிய போராட்டம்!:
காஸ்வேதா தேவியின் முக்கியமான சிறுகதைகளுள் ஒன்று ‘திரௌபதி’ (1978). நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த திரெளபதி என்ற பெண்ணை, காவலர்கள் கைதுசெய்து, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதுதான் அந்தக் கதையின் சாராம்சம். அதில் வரும் திரெளபதி, ஆடைகள் களைந்து, ‘நான் வெட்கப்படுவதற்கு இங்கு எந்த ஆணும் இல்லை. ஆடையால் என்ன பயன்? நீங்கள் என்னை ஆடையிழக்கச் செய்ய முடியும். ஆனால், உங்களால் என்னை மீண்டும் உடுத்தச் செய்ய முடியாது. நீங்களெல்லாம் ஆணா?’ என்று கேட்க, அந்தக் கதை முடிகிறது. 

இந்தக் கதையை ஹீஸ்நம் கண்ஹைலால் என்ற மணிப்பூரைச் சேர்ந்த நாடக ஆசிரியர், 2000-ல், நாடகமாக அரங்கேற்றினார். அதில் அவரின் மனைவியும், ‘திரெளபதி’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவருமான ஹீஸ்நம் சாவித்ரி, மேடையில், நிர்வாணமாகத் தோன்றினார். இந்திய மேடை நாடக வரலாற்றிலேயே, ஒரு கதாபாத்திரம் ஆடையில்லாமல் தோன்றியது அதுதான் முதன்முறை. அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு சரியாக நான்கு வருடங்கள் கழித்து, அதாவது 2004-ல், மணிப்பூரில் தங்கள் ஆடைகளைக் களைந்து, ‘இந்திய ராணுவமே, எங்களை வன்கலவி செய்’, ‘எங்கள் சதையை எடுத்துக்கொள்’ என்று கோஷமிட்டனர் 12 நவீன திரெளபதிகள். எதற்காக அந்த 12 பெண்களும் அப்படிச் செய்தார்கள்?

தங்ஜம் மனோரமா

அஸாம் ரைஃபிள்ஸ் படையின் தலைமையகம் மணிப்பூரின் இம்பால் நகரத்தில் உள்ள கங்லா கோட்டையில் அமைந்திருந்தது. 2004-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, பயங்கரவாதக் குழு ஒன்றுடன் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறி, தங்ஜம் மனோரமா எனும் 32 வயது பெண் கைதுசெய்யப்பட்டு, கங்லா கோட்டைக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்படுகிறார். அடுத்த நாள், இவரது உடல், தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்படுகிறது. பிறகுதான் தெரிந்தது, அவர் அஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் அந்தப் படையினர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட சில பெண்கள், அங்குள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலைப் பார்க்கச் சென்றார்கள். அஸாம் ரைஃபிள்ஸ் படையின் இப்படியான தொடர் ஒடுக்குதல்களுக்கு எதிராக, மிகத் தனித்துவமான ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர் அந்தப் பெண்கள். ஜூலை 15 அன்று, கங்லா கோட்டை முன்பு தங்கள் ஆடைகளைக் களைந்து அந்த 12 பெண்களும் கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். மிகக் குறைந்த நேரமே நடைபெற்ற அந்தப் போராட்டம், உலகையே உலுக்கியது. அதன் விளையாக, மணிப்பூரின் ஏழு தொகுதிகளிலிருந்து அஸாம் ரைஃபிள்ஸ் படை நீக்கப்பட்டிருக்கிறது. கங்லா கோட்டையிலிருந்த அந்தப் படையின் தலைமையகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் 50 வயதுக்கு மேலான அந்த 12 பெண்கள், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ‘இமா’க்கள் என்று அழைக்கப்படலாயினர். ‘இமா’ என்ற மணிப்பூரிச் சொல்லுக்கு ‘அன்னை’ என்று பொருள். மணிப்பூர் பெண்களின் மானம் காக்கப் போராடிய அவர்களை, அன்னை என்று அழைப்பதுதானே உத்தமம்?

12 அன்னையர்கள்

இந்திய சமகால வரலாற்றில் தழும்பாக அமைந்துவிட்ட அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற, அந்த 12 அன்னையரைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையை, உணர்வுகளை ‘தி மதர்ஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற புத்தகத்தில் ஆவணமாக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் தெரசா ரஹ்மான். இதை ‘சுபான்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. வெறுமனே அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லாமல், மணிப்பூரின் கலாச்சாரம், இரண்டாம் உலகப் போரில் அதன் பங்கு, குடிப்பழக்கத்துக்கு எதிராக மணிப்பூர் பெண்களின் போராட்டம், பயங்கரவாதக் குழுக்களால் மணிப்பூர் சிறுவர்கள் கடத்தப்பட்டுக் குழந்தை பயங்கரவாதிகளாக ஆக்கப்படுவது, இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டுகால உண்ணாநிலைப் போராட்டம் உள்ளிட்ட மணிப்பூரின் நிகழ்கால வரலாற்றையும் இந்தப் புத்தகம் சொல்லிச் செல்வதால், இது தனித்துவம் பெறுகிறது.

தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, திருமணம் செய்துகொண்டு, அரசியல்ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கத் தற்போது முயற்சித்துவருகிறார் இரோம் ஷர்மிளா. இந்த சந்தோஷமான தருணத்தில், இந்தப் புத்தகத்தை வாசிப்பது, ஆறிய புண்ணை மீண்டும் கிழித்துப் பார்க்கும் விஷயமல்ல; தழும்பாக மாறிவிட்ட வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் முயற்சி!

-ந.வினோத்குமார்,
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து 

Monday, 26 September 2016

படித்ததில் பிடித்தது 4

1) இரண்டாவதாக பிடித்த வேலையை முழு நேர வேலையாக வைத்துக்கொள்; மிகவும் பிடித்த வேலையை பகுதி நேர வேலையாக வாழ்நாள் முழுதும் பத்திரமாக வைத்துக்கொள்.
--கொரியன் நாடகம்

2) கடந்த காலத்தில் மிச்சம் வைக்கும் எந்த செயலும்  மீண்டும் நம்மை வந்தடையும், நல்லதானாலும் சரி கெட்டதானாலும் சரி.

3) மனிதனின் கடமை பிரபஞ்சத்தின் பிரச்சனையை தீர்த்துவைப்பதில்லை, தான் செய்ய வேண்டிய செயலை சரியாய் செய்வதே.

4) சரியாக செய்யாத வேலையை இரண்டு முறை செய்ய நேரிடும்.

5) சிடு மூஞ்சி கடை வைக்க கூடாது.

6) ஒரு புது தொடக்கம் தான் நமக்கு நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று காட்டும்.
--பதிவர் யாசிர் அஸனப்பா

7) நினைப்பது அல்ல நீ... (உனக்கு)  நிரூபிப்பதே நீ...
-ஜாக்கி சேகர்

8) Man's greatness lies in his power of THOUGHT

9) சந்தோஷமான நினைவுகளே உங்கள் உற்ற நண்பன், கடினமான நேரங்களில் அவனை அழைத்து கொள்ளுங்கள்.
--கொரியன் நாடகம்

10)  கற்றுக்கொடுப்பவர்கள் எல்லோரும் ஆசிரியர்கள் கிடையாது; யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.

11) சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே.

12) பயணம் கற்றுக்கொடுக்கும் முதல் பாடமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். பயணத்தில் நோயுற்றால் பயணம் தடைப்படுவதோடு மனதில் காரணமற்ற நூறு பயங்கள் கவ்விக்கொள்ளத் துவங்கிவிடும். பார்த்துக்கொண்டிருக்கும் போதே பயம் கிளைவிட்டு நம்மை முடக்கிவிடும்.

       அதே போல வாழ்க்கை பயணத்தில் மனதை ஆரோக்கியமாக வைத்து கொண்டால் தான் பயத்தின் பிடியில் சிக்காமல் வாழ்வை சுலபமாக கடக்க முடியும்.
--எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன்

தொடர்புடையவை...
படித்ததில் பிடித்தது 5
படித்ததில் பிடித்தது 3
படித்ததில் பிடித்தது 2
படித்ததில் பிடித்தது 1



 




Thursday, 30 June 2016

படித்ததில் பிடித்தது 3

1) உண்மை ஒன்றே ஒன்றுதான்; பொய்கள்தான் பல.

2) நமது மனங்கள் சிறியவை, புரிதல் ஆற்றலும் குறுகியது. முழுமையை பார்க்க நம்மால் முடிவதில்லை, ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்கிறோம்.

3) வெறுப்பு கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் மட்டுமே இருக்க கூடியது; அன்புக்கு இறந்த காலமும் எதிர்காலமும் இல்லை.

4) புலன்களை நம்பாதே, விழிப்புணர்வை நம்பு; விழிப்புணர்வு புலன்களுக்கு பின்னால் மறைந்திருப்பது.

5) பிறருடைய சத்தியத்தை நம்ப ஆரம்பிக்கும் போது நீ சிரமப்பட்டுதான் போகிறாய்.

6) மனம் என்பது சேர்த்து வைத்து கொண்டிருக்கும் எண்ணங்கள், கடந்த காலத்தின் குப்பை கூளம், நீ அதனிடமிருந்து முழுக்க வித்தியாசமானவன்.
                                                                                                                                                 -ஓஷோ

7) தினமும் 2 மணிநேரத்தை உங்களுக்காக இல்லாமல், லாப நோக்கத்திக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகவும், பொதுநலனுக்காகவும் செலவிடுங்கள் வாழ்க்கை பயணம் பெரிதும் இனிக்கும், முதுமை இனிமையாக கழியும். முதியோர் இல்லங்களுக்கு சென்று முதியோருடன் பேசுங்கள்.
-வரலொட்டி ரெங்கசாமி

கேட்டதில் பிடித்தது

8) மனுஷனோட மனுஷன் சேர்ந்து வாழறதுதானே சந்தோசம், இது தெரியாத அறிவு என்ன அறிவு? 
 -தம்பி ராமய்யா

9) வேணும்னு சொல்றதுல இல்ல, வேண்டாம் அப்படிங்கறத அழுத்தி சொல்றதுதான் கெத்து.
-பாபி சிம்ஹா

10) KNOWING IS OWNING
-Sherlock Holmes, Season-3(Episode-3)

Monday, 7 September 2015

படித்ததில் பிடித்தது 1

                                                 சுவாமி விவேகனந்தர்

1) மனதை ஒரு செயலுக்கு பழக்கபடுத்தி விட்டால் நம்மை அறியாமலேயே அந்த செயல் ஒரு பழக்கமாகவும் பிறகு வழக்கமாகவும் மாறுகிறது.

2) மினசாரமும் மின்சார உபகரணங்களும் உள்ளது என்று வைத்துக்கொள்வோம், மின்சாரம் காத்தாடிக்கு சென்றால் காற்று வருகிறது, விளக்கிற்கு சென்றால் வெளிச்சம் வருகிறது. அதே போல மனம் என்பது மின்சாரத்திற்கு ஒப்பானது. மனம் கண்களுடன் சேர்ந்தால் பார்க்கிறோம், காதுடன் சேர்ந்தால் கேட்கிறோம் புலன்களான கண்ணும் காதும் வெறும் ஜடங்கள் அவைகளுடன் மனம் சேர்ந்தால் மட்டுமே இயக்கம்.

                                                                    ஓஷோ 

                                     அற்புதத்தில் அற்புதம்

1) நீங்கள் யார் என்பதை நீங்கள் உணர்ந்தவுடன் எல்லா நோய்களும் பறந்துவிடும். உங்கள் சுய அறிவை மறைத்து வைப்பதாலும், உங்களை நீங்கள் புறக்கணிப்பதாலும்தான்  நோய்கள் நிலைகொள்கின்றன.

2) வெளியே பார்க்கும் கண்களை மூடிக்கொள்ளும் போது கண்கள் வழியாக செயல்பட்ட அந்த ஆற்றல் உள்நோக்கி திரும்ப ஆரம்பித்துவிடுகிறது .

3) ஒரு மரத்தை நெருங்கினால் இனிய உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வு உங்கள் உள்ளிருந்து வருவது, மரத்திலிருந்து வருவதன்று. மரத்திடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமற் போவதால் நீங்கள் நிம்மதி அடைகிறீர்கள்.

4) பிரபஞ்சமே உன்னை வேண்டும் போது-கடவுளும் உன்னை வேண்டும் போது ஒரு அர்த்தம் , முக்கியத்துவம், நறுமணம் பிறக்கிறது.

5) களங்கமான வினா:பதில் தெரிந்து கொண்டே வினா கேட்பதுகளங்கமற்ற வினா: பதில் தெரியாமல் அறிந்து கொள்ளும் நோக்கோடு கேட்கும் வினா.

6) பொறுப்புணர்வை ஏற்காதவரை நீங்கள் உள்ளீடற்றவராகத்தான் இருக்க முடியும், மேல் மட்டத்தில்தான் மிதந்து கொண்டிருக்க முடியும், ஆழங்களுக்குள் செல்ல முடியாது.

7) அகபோருக்கான சரியான சொல் உராய்வு. உங்களுக்குள் உராய்வு இல்லையென்றால், நீங்கள் மேலோட்டமான ஆற்றலையே பயன்படுத்துவீர்கள்.

8) மனதோ (அ) உடலோ சொல்வதை கேட்பதில்லை என்ற முடிவை எடுத்து பாருங்கள் உள்முரண்  தோன்றும், உள்முரண் உராய்வை ஏற்படுத்தும்.

9) மனமும் , உடலும் எளிமையான, அற்பமான விஷயங்களுக்கே நம்மை இட்டுச்செல்லும். அதனை எதிர்த்து கடினமான செயல்களுக்கு உட்படும்போது  நமக்குள் ஒரு சக்தி பிறக்கிறது.

10) நீங்கள் ஒரு முயற்சி  செய்து பார்க்க விரும்பினால் வெற்றி பெற்றே தீரவேண்டும், இல்லாவிட்டால் முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

11) வெற்றி பெற்றே தீருவது என்ற தீர்மானம் எடுத்த பிறகே முயற்சியில் இறங்குங்கள். தோற்கும் போறல்ல இது வென்றே முடிக்க வேண்டிய போர் இது.

 12) நீங்கள் ஒரு முறை வென்றுவிட்டால் வேறு அடுக்கின் ஆற்றலை வென்றுவிடுவீர்கள்.




கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...