Labels

Showing posts with label Dedicated persons. Show all posts
Showing posts with label Dedicated persons. Show all posts

Tuesday, 28 April 2020

காய்கறி இலவசம்!!!!!!

கிராமத்தில் புறம்போக்காக கிடந்த நிலத்தில், காய்கறி பயிரிட்டு, விளைச்சலை கிராம மக்களுக்கே இலவசமாக வழங்கி வரும், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வ.வேப்பங்குடி கிராமத்து இளைஞர், அமெரிக்காவில் வேலை பார்க்கும், நரேந்திரன் கந்தசாமி: கரூர் மாவட்டம், எப்போதுமே வறட்சியானது. அதிலும், எங்கள் ஊர், கடும் வறட்சி உடையது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத பின்தங்கிய கிராமம். கடந்த, 2010-ல், ஆஸ்திரேலியா நாட்டில், கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை கிடைத்தது. தொடர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்றேன்.சுவிட்சர்லாந்தில் நிலவிய இயற்கைச் சூழலை பார்த்து தான், 'நம்ம ஊரையும் இப்படி மாற்ற வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.

அதையடுத்து, கடந்த, 2017ல், பூவரசு, ஆலம், அரசு, வாகை, வாதாம், வாதநாராயண மரம், வேம்பு என, பல வகை மரங்களை, 10 அடி வளர்த்து, ஊர் முழுக்க நட்டோம். பொது இடங்களில், 500-க்கும் மேற்பட்ட மா, பலா, வாழை, கொய்யா மரக்கன்றுகளை வளர்த்தோம். போன வருஷம், இயற்கை காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். எங்கள் ஊர் மண்ணில் எதுவும் விளையாது; மண்ணை மாற்றிய பின், காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றனர். ஆனால், நாங்க அப்படிச் செய்யவில்லை. ஆடு, மாடு சாண எருவை மட்டுமே போட்டு, மண்ணை மாற்றினோம்.அந்த தோட்டத்துக்கு, 'சமுதாய காய்கறித் தோட்டம்' என, பெயர் வைத்தோம்.

கத்திரி, பீர்க்கங்காய், வெண்டை, துவரை, தக்காளி, மிளகாய், முருங்கை, அவரை, வெண் பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், தண்டுக்கீரை, செங்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கேரட், பீட்ருட் என, எல்லா காய்கறி, கீரைகளும் காய்ப்புக்கு வந்து விட்டன.இப்போது, ஊர் மக்களே, தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது என, எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

வாரம் இரண்டு தடவை, கிராமத்து இளைஞர்கள் வேல்முருகன், காளிமுத்து போன்றோர், எல்லா வீடுகளுக்கும் காய்கறிகளை கொடுப்பர். காய்கறி தேவைப்படுவோர், தேவையான காய்கறிகளை, தாங்களாக வந்து பறித்து செல்வர். இப்படி, இதுவரை, 3,000 கிலோ காய்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளோம். இதை பார்த்து, வெளியூர் மக்கள் சிலர், அவர்களின் ஊர்களிலும், இலவச, இயற்கை தோட்டத்தை போடத் துவங்கி விட்டனர்.

கொரோனா வைரஸ், உலகத்தையே உலுக்கிய போது, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஆனால், எங்கள் ஊர் மக்கள், எந்தக் கவலையும் இல்லாமல், சமுதாய காய்கறி தோட்டத்தில், காய்கறிகளைப் பறித்து, சமைத்து சாப்பிட்டு, ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர்!

--தினமலர் நாளிதழிலிருந்து



Friday, 15 November 2019

அரிது அரிது....இவரை போன்றோரை பார்ப்பது அரிது

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆயங்குடி பள்ளம், பாக்கியராஜ் நகரில் வசிக்கும் நீலாம்பாள்: அரியலுார் மாவட்டம், தேவாமங்கலத்தைச் சேர்ந்த வாசுதேவன் என் கணவர். எனக்கு, 17 வயதில் திருமணம்; 10 ஆண்டுகள் குழந்தை இல்லை. போகாத கோவில் இல்லை. பல ஆண்டு கால வேண்டுதலுக்குப் பின், மூன்று குழந்தைகள் பிறந்தன. இரண்டு ஆண்கள்; மகள் பிறந்தனர். திருமணமாகி, 17 ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய கட்டாயம்.

தலையில் கூடை சுமந்து, பழ வியாபாரம் செய்திருக்கிறேன்.பள்ளிக்கூடம் அருகே, சின்னதாக, பழ வியாபாரம் செய்து வந்தேன். தனியாளாக போராடி, மூன்று பேரையும் வளர்த்து, திருமணம் முதற்கொண்டு அனைத்தையும் சரியாக செய்து விட்டேன். இரண்டு மகன்களும் இறந்து விட்டனர்; மகள் லட்சுமி மட்டும் தான் இருக்கிறாள். அவளுக்கு வயது, 60. பள்ளிக்கூடம் அருகே, நான் பார்த்த, பழ வியாபாரத்தை அவள் செய்கிறாள். அவள் வீட்டில், பேரன் மற்றும் மகளுடன் வசிக்கிறேன்.

என் வயதை எண்ணிக் கொண்டு இருப்பதில்லை. எனக்கு, 102 வயது என்று, உறவினர்கள் தான் சொல்கின்றனர். உடம்பில் தெம்பு இருக்கும் வரை, தலைச்சுமையாக சுமந்து, பல இடங்களுக்கும் சென்று, பழங்களை விற்றேன்; இப்போது முடியவில்லை. 'நீ எதுவும் செய்ய வேண்டாம்; நாங்கள் சோறு போடுகிறோம்' என்கின்றனர், உறவினர்கள். ஆனால், என்னால் சும்மா உட்கார்ந்து, சோறு சாப்பிட முடியாது. கட்டையில் வேகும் வரை, உழைத்தபடி தான் இருப்பேன். 

காலையில், டீயை குடித்து விட்டு, ரயில்வே லைன் கரைக்கு, அரிவாளோட போவேன். குளஞ்சி தட்டையை அறுத்து, காய வைப்பேன். அதற்குள் சூரியன் உச்சிக்கு வந்து விடும். கேழ்வரகு அல்லது கம்மங்கூழை குடிச்சுட்டு, கொஞ்ச நேரம் தரையில் படுப்பேன். தட்டை காய்ந்ததும், அதை கம்பு வைத்து தட்டி, மூன்று, நான்கு கட்டுகளாக கட்டி, ஒரு கட்டு, 10 ரூபாய்னு விற்று, கிடைக்கிற பணத்தை வீட்டில் கொடுத்து விடுவேன். சாப்பிடும் சாப்பாட்டிற்கு, ஏதாவது முடிந்த வேலையைச் செய்ய வேண்டும் அல்லவா!

இரவு ஒரு வேளை மட்டும் தான், அரிசி சாதம் சாப்பிடுவேன். மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். நோய், நொடி என படுத்ததில்லை. இப்ப கொஞ்ச நாட்களாகத் தான், வயிற்றுப் பிரச்னை இருக்குது. கையும், காலும் நல்லா இருப்பதால், அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை வாங்கவில்லை. எனக்கு எதற்கு அந்தப் பணம்... இதுவரையிலும், யார் கிட்டேயும் இலவசமாக எதையும் வாங்கியதில்லை!

--தினமலர் நாளிதழிலிருந்து

Wednesday, 28 March 2018

வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி...


தொன்னுாறு வயது ஏழை பாட்டி ஒருவர் எந்தவித எதர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல வருடங்களாக வளர்த்த நுாற்றுக்கணக்கான மரங்களால் இன்று ரசும் மக்களும் பயன் அடைந்துவருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து 46 கிலோமீட்டர் பயணம் செய்தால் காங்கேயம் வரும், காங்கேயத்தில் இருந்து பழனி போகும் பாதையில் எட்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில். இங்கு சென்றால் அவசியம் தரிசிக்கவேண்டியவர்கள் இரண்டு பேர் ஒன்று முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன் இரண்டாவது பாக்கியலட்சுமி என்ற 90 வயது பாட்டி.

  
ஏழு வயதில் திக்கு தெரியாமல் எப்படியோ இங்கு வந்து சேர்ந்த இவருக்கு உலகமே இந்த வட்டமலைதான். கோவிலை கூட்டி சுத்தம் செய்து பக்தர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் தரும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார்.கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது, யாரிடமும் போய் கேட்கமாட்டார் , தாமாகவே கொண்டுவந்து கொடுத்தால் மறுக்கமாட்டார். இந்த நிலையில்தான் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் கோவில் பக்கத்தில் உள்ள ஒடையில் இருந்து தண்ணீர் எடுத்துவரும் போது கூடவே ஒரு செடியும் குடத்துடன் வர அதை அந்த கரையிலேயே நட்டுவிட்டுவந்தார். சில நாட்கள் கழித்து ஒடைப்பக்கம் வந்த போது,' ..பாக்யா என்னைப்பாரேன்' என்பது போல அந்த செடி செழித்து வளர்ந்து அழைத்தது. அதுவரை சொந்த பந்தம் என்று எதுவும் இல்லாதிருந்த பாக்கியாவிற்கு அந்த செடி ஏதோ தான் பெற்ற பிள்ளை போல தெரிய அதன் பக்கத்தில் போய் உட்கார்ந்து தடவிக்கொடுத்தார், சிறிது நேரம் கண்ணீர் விட்டார் பின்னர் தொடர்ந்து தண்ணீர் விட்டார்.

அந்த செடியின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் பாக்கியாவிற்கு மகிழ்ச்சி தர அதைப்போலவே இன்னும் பல செடிகளை விதைகளை கொண்டுவந்து அந்த பகுதியெங்கும் வளர்த்தார். எப்படி வளர்க்கணும் எந்த மரத்திற்கு எவ்வளவு குழி வெட்டணும் எப்படி உரம் போடணும் என்று எதுவுமே தெரியாது அவ்வளவு ஏன் நட்டுவைத்த செடிகூட என்ன செடி என்று தெரியாது, கிடைச்ச இடத்தில் செடியை நடணும் விடாம தண்ணீர் ஊற்றணும் இது மட்டுமே தெரிந்திருந்து, பாட்டியின் அன்பும் அந்த செடிகளுக்கு புரிந்திருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு செடியும் வேப்பமரம், இலுப்பைமரம், புளியமரமாக நன்கு வளர்ந்தது. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நுாற்றுக்கும் அதிகமான மரங்கள் வனப்புடன் வளர்ந்துள்ளது. வட்டமலை பகுதியை பசுஞ்சோலையாக்கி வைத்துள்ள இந்த மரங்களின் நிழலில்தான் இப்போது கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இளைப்பாறி களைப்பு நீங்க பெறுகிறார்கள்.

புளியமரத்தில் இருந்து விழும் புளியங்காயை பொறுக்கியெடுப்பதன் மூலம் சொற்ப வருமானம் கிடைத்து வந்தது பின்னர் அரசாங்கம் அந்த மரத்திற்கு எல்லாம் எண் போட்டு அரசுக்கு சொந்தமாக்கிவிட்டதால் இப்போது புளியமரத்து பலன் மட்டுமல்ல எந்த மரத்தின் பலனும் பாட்டிக்கு கிடையாது.
ஆனால் அதைப்பற்றி இவருக்கு சிறிதும் கவலை இல்லை எம் பிள்ளை(மரம்) எனக்கு வருமானம் தந்திட்டு இருந்தான், இப்ப அரசாங்கத்திற்கே வருமானம் தர்ரான் சந்தோஷம்தான் என்கிறார் சிரிப்பு குறையாமல். பிள்ளை என்றதும் நினைவு வருகிறது குடும்பம் சொந்த பந்தம் என்று கேட்டபோது எல்லாமே இதுங்கதான் என்று கைகாட்டுகிறார், அவர் கைகாட்டிய திசையில் அவர் வளர்த்த மரங்கள் இவர் சொல்வதை ஆமோதிப்பது போல இலை கிளை அசைக்கின்றன.

தற்போது கோவில் நிர்வாகம் சாமான்கள் போட்டுவைக்கும் அறையில் சாமான்களோடு சாமான்களாக வாழ்ந்துவரும் இவர் மரங்களின் மீது கொண்ட பாசம் காரணமாக அவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய நேசம் காரணம் வட்டமலையைத்தாண்டி எங்கும் போனதில்லை இனி போகப்போவதும் இல்லை. பொதுப்பார்வையில் இவர் ஒரு அப்பாவி பாட்டியாக தென்படலாம், ஆனால் உண்மையில் மரங்கள் வளர்ப்பு என்பதற்கான நாட்டின் உயர்ந்த விருதை எல்லாம் கொடுத்து இனியும் கையேந்தவிடாமல் கவுரமாக வாழ வழிசெய்யவேண்டும், அது அவருக்கு கவுரவத்தை சேர்க்கும் என்பதற்காக அல்ல நமக்கு புண்ணியத்தை தரும் என்பதால்.

போயிட்டு வர்ரேன் தாயி என்று மரங்களை பெற்ற அந்த மாதரசி மகராசியின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வரும்போது திரும்பி பார்க்கிறேன், வட்டமலையைவிட வட்டமலையின் மீதுள்ள முத்துக்குமாரசாமி கோபுரத்தைவிட உயரமாக பாக்கியலட்சுமி பாட்டி விசுவரூபமெடுத்து நிற்கிறார்.

(நன்றி:தணிகைச்செல்வி, காங்கேயம் நல்லதம்பி)
-எல்.முருகராஜ்
--தினமலர் நாளிதழிலிருந்து (அக் 02, 2015).

 

Saturday, 10 February 2018

நாட்டு ரக விதைகள் வேணுமா?

பட்டணத்துப் பண்பாடு, கிராமங்களில் கால்பதிப்பதற்கு முன்புவரை பெரும்பாலும் ‘கூரை’ வீடுகள்தான் இருந்தன. கூரைகளில் ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’யை விஞ்சும் அளவுக்கு சுரைக்காய், அவரை, பாகல், பீர்க்கன் என கொடிகளுக்கு இடம்கொடுத்தனர், முன்னோர். ஆனால், நாகரிகம் வளரவளர… கூரை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதில், வீட்டுத் தோட்டங்களும் காணாமல் போயின. அதோடு, காணாமல் போனது, நமது நாட்டு விதைகளும்தான். கூடவே, பசுமைப் புரட்சியின் விளைவால், வீரிய விதைகள் வேகமாகப் பரவ, சுத்தமாகவே நாட்டு விதைகள் வழக்கொழிய ஆரம்பித்தன. இத்தகையச் சூழலில் மீண்டும், இயற்கை மீதான பாசம் பெருக ஆரம்பித்திருப்பதால், மாடித் தோட்டங்களும் வீட்டுத் தோட்டங்களும் செழிக்க ஆரம்பித்துள்ளன. இதோடு, நாட்டு விதைகளையும் விவசாயிகள் தேட ஆரம்பித்திருப்பது… மகிழ்ச்சிக்குரிய செய்தி!

கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்ட நாட்டு ரக விதைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் பாரம்பரிய விதைகள் என்று அனைத்தையும் தேடிப்பிடித்து, சேகரித்து, பாதுகாத்து, பயிர் செய்து விதைகளைப் பெருக்கி வருகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும்! இந்த வரிசையில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளது, சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு.

விஷயத்தைப் புரிய வைத்த வீரிய விதை!
‘வசிஷ்டா கிராம விதை வங்கி’ என்ற பெயரில், சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் செயல்படத் துவங்கியுள்ள விதை வங்கியில், உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமனைச் சந்தித்தோம்.
”விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாம இருந்த சூழ்நிலையில, ‘எதிர்கால விவசாயமாவது லாபகரமா மாறட்டும்’னு சொல்லி, ஏழு வருஷத்துக்கு முன்ன அபிநவம் கிராமத்துல உழவர் மன்றம் ஆரம்பிச்சோம். இது மூலமா விவசாயிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்து, விவசாயிகளையும் விற்பனையாளரா மாத்தின பிறகு, எங்களுக்கு ஓரளவு லாபம் வர ஆரம்பிச்சுது. ஒரு வருஷத்துக்கு முன்ன தனியார் விதை கம்பெனிக்காரங்க ‘எஃப்-1’ விதை உற்பத்திக்காக எங்க உறுப்பினர்களைப் பயிர் செய்யச் சொன்னாங்க. அவங்க சொன்னபடி நாங்களும் விதையை உற்பத்தி செஞ்சு கொடுத்தோம். ஆனா, பணம் கொடுக்கல. ஏன்?னு கேட்டத்துக்கு ‘விதை தரமா இல்லாததால சான்று கிடைக்கலை’னு சொன்னாங்க. ஆனா, தரமற்ற அந்த விதையை விவசாயிங்க தலையில கட்டி கோடிக்கணக்குல லாபம் பார்த்தாங்க. எஃப்-1 விதையை ஒவ்வொரு முறையும் வாங்கிப் போடும்போது அதிக செலவாகும். ஆனா, அந்த விதை ஒரு முறைதான் நல்ல மகசூல் கொடுக்கும். அதுல இருந்து விதை எடுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழல்ல… ‘உரம், பூச்சிக்கொல்லிக்கு அதிகமா செலவாகுதுனு சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சாங்க எங்க விவசாயிங்க. அப்பதான் ‘இயற்கை விவசாயத்துக்கு ஒட்டு விதைகள் ஏத்ததில்லை’னு புரிஞ்சுது. இதுக்குப் பிறகுதான் நாட்டு விதைகளைத் தேட ஆரம்பிச்சோம். கிடைச்ச விதைகளைப் பயிர் பண்ணி, விளைச்சலை அறுவடை பண்ணி சந்தைக்குக் கொண்டு போனப்ப… அந்த காய்களுக்குக் கூடுதல் விலை கிடைச்சுது. இதுக்குக் காரணம், எங்க தோட்டத்துக் காய்களோட சுவைதான். ஒட்டு விதைகளை விதைச்சு, உரம் போட்டு, மருந்தடிச்சு, பண்டுதம் பார்த்து கிடைக்கிற வருமானம் மொத்தமும் செலவுக்கே சரியாபோயிடும். ஆனா, பாரம்பரிய விதை களை இயற்கை முறையில விளைய வைக்கிறப்போ, செலவும் குறைவு. வருமானமும் கிடைக்குது. இந்த உண்மை இப்போதான் எங்களுக்கு உறைச்சிருக்கு” என்ற ஜெயராமன், தொடர்ந்தார்.
வகை வகையான பாரம்பரிய விதைகள்!
”பாரம்பரிய நெல் ரகங்கள், பயறு வகைகள், சிறுதானிய ரகங்கள், காய்கறி ரகங்கள்னு பலவிதமான பாரம்பரிய விதை ரகங்களை தனி ஆளா சேகரிச்சு, பாதுகாக்க முயற்சிகள் செஞ்சா சரிப்பட்டு வராதுனு, ‘சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு’னு ஆரம்பிச்சு… அது மூலமா பாரம்பரிய விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சோம். உழவர் மன்றங்களின் அறிமுகமும், ‘பசுமை விகடன்’ மூலமா கிடைச்ச விவசாய நண்பர்களும் விதை சேகரிப்புக்கு உதவியா இருந்தாங்க. தமிழ்நாடு முழுக்க சுத்தி 64 பாரம்பரிய நெல் ரகங்கள், 8 வகையான சிறுதானிய ரகங்கள், 6 வகையான பயறு ரகங்கள், 37 வகையான நாட்டுக் காய்கறி ரகங்கள் பாரம்பரிய விதைகளைச் சேகரிச்சிருக்கோம். ஆத்தூரைச் சுத்தி இருக்குற உழவர் மன்ற உறுப்பினர்களுக்கு விதைகளைக் கொடுத்துட்டு இருக்கோம். 

விதை தேவைப்படுறவங்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கு. ஒரு பங்கு விதை வாங்கினா, நாலு பங்கு விதையா திருப்பிக் கொடுத்திடணும். விவசாயிங்க, அவங்க கிட்ட இருக்குற ஒரு ரக விதையைக் கொடுத்திட்டு, இங்க இருக்குற வேற ரக விதையை வாங்கிக்கலாம். வீட்டுத் தோட்டம் போடுறவங்களுக்காக சாம்பிள் பாக்கெட்டுகளா போட்டு, ஒரு பாக்கெட் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம்” என்ற ஜெயராமன் நிறைவாக, ”பாரம்பரிய நெல் ரகங்கள் ‘பசுமை விகட’னோட முயற்சியால விவசாயிங்க மத்தியில பரவி இருக்கு. இதேமாதிரி காய்கறி விதைகளையும் பரப்பணும் அப்படிங்கிற ஆசையில இருக்குறோம். இன்னும் ரெண்டு வருஷத்துல, நாட்டுக் காய்கறி ரகங்கள் அத்தனையும் விவசாயிங்க மத்தியில பரவிடும்” என்றார், மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு, ஜெயராமன்,
செல்போன்: 99424-43055
--விகடன் இணைய இதழிலிருந்து 


இயற்கையின் மகிமை!

நாட்டு ரக விதைகளின் தாயான, இயற்கை விவசாயி, ஒம்பாலம்மா: கிருஷ்ணகிரி மாவட்டம், தளியிலிருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ள ஆலப்பன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவள் நான். 20 ஆண்டுகளுக்கு முன், தளியில் நடந்த இயற்கை விவசாயம் குறித்த கூட்டத்தில், கலந்து கொண்டேன். அதில், இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு ரக விதை குறித்து விளக்கினர். அதன் பின் தான், நாட்டு விதைகள் மீது பாசம் வந்தது. நாட்டு விதைகளை பயிர் செய்யும் போது, அவற்றில் இருந்தே விதைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி, நான் விளைவித்த பயிர்களில் இருந்தே, எனக்கு விதைகள் கிடைக்கத் துவங்கியதால், அடுத்தவரிடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 


எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலம் உள்ளது. அது, மேட்டு நிலம் என்பதால், மழை வந்தால் தான் விதைப்பேன். மலையை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலத்திலும், மானாவாரி விவசாயம் செய்கிறேன்.பெரும்பாலும், கேழ்வரகை தான் மானாவாரியாக சாகுபடி செய்வேன். வீட்டுக்கு அருகில் சிறிய காய்கறி தோட்டத்தை அமைத்து, அதன் மூலமாகவும் விதைகளை பெருக்குகிறேன்.

வட்டம், லிங்கம், பந்து என, மூன்று வடிவங்களில் பூசணி விதைகள் உள்ளன. நாட்டு பூசணி விதைகளில் காய்க்கும் காய்கள், சுவையாக இருப்பதோடு, வாட்டமாகவும், கடினத்தன்மை உடையதாகவும் இருக்கும்.கோலி வடிவத்தில் இருக்கும் பாகல் விதை, மலைப்பகுதியில் மட்டுமே விளையக் கூடியவை; அரிதான ரகம். பாகற்காய்க்கு உரிய தன்மை மாறாமல் இருக்கும். இவை போல் கத்தரிக்காய், தக்காளி, அவரை, மிளகாய், கடலை, மொச்சை, சுரைக்காய், கடுகு, சூரியகாந்தி, வெள்ளரி, வரகு, சாமை, கீரை வகைகள் என, நாட்டு விதைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். நாட்டு ரக பயிர்களை சாகுபடி செய்யும் போது, பெரும்பாலும் பூச்சிகளே வருவதில்லை. அதுபோல, ஆமணக்கு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தால், பூச்சி தாக்குதல் இருக்காது.

ஆமணக்கு எண்ணெயை தலைக்கு தேய்த்து வருவதால், 67 வயதிலும் தலைமுடி நரைக்கவில்லை. இதுதான் இயற்கையின் மகிமை.காய்கறி மற்றும் சிறு தானியங்கள் என, மொத்தம், 31 வகையான, நாட்டு ரக விதைகளை பத்திரப்படுத்தி, விற்பனை செய்து வருகிறேன். தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். நான் சொல்லும் விலையை விட, அதிக தொகை கொடுத்து பலர் வாங்குகின்றனர். இதன் மூலமாக வரும் வருமானத்தை, பெரிதாக எண்ணுவதில்லை. நாட்டு ரகங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, என் ஆசை!
--தினமலர் நாளிதழிலிருந்து


Sunday, 21 January 2018

வேலை செய்து வந்தால்.....

திருச்சி, எடமலைப்பட்டி புதுாரில், மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வரும், 91 வயது பாட்டி, ஜெயலட்சுமி: என் கணவர், இறந்து விட்டார். எங்களுக்கு ஐந்து பெண், இரண்டு ஆண் குழந்தைகள். நாலாவது தலைமுறையை பார்த்து விட்ட நான், ஐந்தாவது மகள் வீட்டில் வசித்து வருகிறேன்.மாடித்தோட்டம் அமைத்து நாலைந்து ஆண்டுகளாகிறது. எந்த விதையை கேட்டாலும் பிள்ளைகள், மறக்காமல் வாங்கி தந்து விடுவர்.

மாடித்தோட்டம்: எனக்கு ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார பிடிக்காது. அந்த உழைப்பு தான், இந்த வயதிலும் மாடித்தோட்டம் போட வைத்துள்ளது.
பெயின்ட் வாளி, பழைய பிளாஸ்டிக் வாளிகளில், செம்மண், மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் போட்டு, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளை தயார் செய்து கொள்வேன். முதலில் காய்கறி, பூச்செடி விதைகளை போட்டு நாற்று உருவாக்கி, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளில் அவற்றை நட்டு, இரண்டு வேளையும் தண்ணீர்
ஊற்றுவேன்.

செடி வகைகள்: பாகல், பீர்க்கை, புடலை, அவரை கொடி, வெண்டை, தக்காளி, கத்திரிக்காய், வெள்ளை முள்ளங்கி, கொத்தவரங்காய், கீரை வகைகளும் உள்ளன. எனக்கும், என் மகளுக்கும் போக மீதியை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தந்து விடுவேன்.
மூலிகைகளில் துளசி, துாதுவளை, பிரண்டை, சிறியாநங்கை, கீழாநெல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஓமவல்லி வளர்த்து வருகிறேன்.
  • துளசி, துாதுவளை, சளிக்கு நல்லது. 
  • சிறியாநங்கை இலையை தினசரி மென்று வந்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். 
  • கீழாநெல்லி, மஞ்சள் காமாலை நோய்க்கு கைக்கண்ட மருந்து. 
  •  திருநீற்றுப் பச்சிலை, கொய்யா இலை, குப்பைமேனி மூன்றையும் அரைத்து, தோல் பிரச்னை உள்ள இடங்களில் தேய்த்தால், பிரச்னை நீங்கும்.
  • அடுக்கு நந்தியாவட்டை பூவை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வெள்ளை துணியில் கட்டி, கண்ணில் ஒற்றி எடுத்தால், கண்களுக்கு குளிர்ச்சி. சுமங்கலிகள் யாராவது வீட்டுக்கு வந்தால், வெற்றிலை கொடியிலிருந்து பறித்து, தாம்பூலம் தந்து அனுப்புவோம்.
உணவு பழக்கம்:
6:00 மணிக்கு காப்பி;
8:00 மணிக்கு, வாரத்தில் இரண்டு நாள் பழச்சாறு, ஒரு நாள் பயத்தம்பயறு கஞ்சி, ஒரு நாள் வெந்தயக்கஞ்சி, இரண்டு நாள் ஏதேனும் மூலிகை சூப், ஞாயிற்றுக்கிழமை நிலவேம்பு கஷாயம் அல்லது மிளகு கஷாயம்.
10:30மணிக்கு சாப்பாடு;
2:00மணிக்கு இரண்டு இட்லி அல்லது பழம்;
5:30 மணிக்கு ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட்;
7:30 மணிக்கு இரவு உணவு; இதுதான், என் உணவுக் கட்டுப்பாடு.
துாங்கி நேரத்தை வீணாக்காமல், வேலை செய்து வந்தால், எந்த நோயும் வராது. உடம்பும் உடற்பயிற்சி செய்தது போல் ஆரோக்கியமாக இருக்கும்.

--தினமலர் நாளிதழிலிருந்து.

ஏன் உழைக்க வேண்டும்? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன், இந்த கேள்விக்கான தங்களின் பதிலை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ........


Wednesday, 3 January 2018

ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா...

ஒரு காலத்தில் இரண்டு ரூபாய் பள்ளிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டவர் இன்று இந்தியா முழுவதும் 14 இடங்களில் தொண்டு நிறுவனம் அமைத்து பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கும், முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறார். கடந்த நாற்பது வருடங்களில் நுாற்றுக்கணக்கான பார்வையற்ற மாணவர்களை பட்டதாரிகளாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர்,நக்சலைட்டுகள் நடமாடும் வட மாநிலங்களில் உள்ள கந்தமால்,காலகண்டியில் உள்ள மலைவாழ் குழ்ந்தைகளின் மறுவாழ்விற்கு வித்திட்டவர், இலவச கண் மருத்துவமனை நடத்துபவர்,இப்படி இன்னும் பல ஆச்சர்யமான விஷயங்களுக்கு சொந்தக்காரரான இவர் ஒரு தமிழர் என்பதுடன் தேசமே பெரிதென்று போற்றும் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியும் கூட. அவரே ஸ்ரீதர் ஆச்சார்யா.



இந்தியாவின் ஐஎஸ்ஒ சான்றிதழ் பெற்ற தொண்டு நிறுவனம் இவருடைய நவஜீவன் பார்வையற்றவர்களுக்கான மறுவாழ்வு மையம்தான். இந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி மத்திய அரசு சிறப்பு தபால் உறை வெளியிட்டுள்ளது ஒன்றே போதும் நிறுவனத்தின் தரத்தை சொல்ல.

நவஜீவனுக்குள் செல்லும் முன் ஸ்ரீதர் ஆச்சார்யாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். வேதபண்டிதர் வீட்டு குழந்தையான ஸ்ரீதர் காஞ்சியில் இவரது தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார்.அப்போது தனியார் பள்ளிகள் கிடையாது அரசாங்க பள்ளிகள்தான் மாதம் இரண்டு ரூபாய் கட்டணம்.இந்த இரண்டு ரூபாய் கட்டணத்தை ஸ்ரீதரால் கட்டமுடியாத நிலை.

காஞ்சி மடத்தின் மகா பெரியவரான சந்திரசேரேந்திர சுவாமிகள், ஸ்ரீதர் போன்ற நாற்பது மாணவர்களை தேர்வு செய்து படிக்கவைத்தார்.அப்படி படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த சிறுவர்களிடம் நிறைய பேசுவதுண்டு, அதிலும் ஸ்ரீதர் என்றால் அவருக்கு மிகவும் பிரியம்.ஸ்ரீதரை மடத்தின் சார்பில் நடந்து வந்த வேதபாடசாலையில் படிக்கவைத்தார்.

(இதற்கு தாத்தாவிடம் அனுமதி பெறுவதற்காக மின்சாரம் இல்லாத அந்தக்காலத்தில் ஒரு அரிக்கேன் விளக்கின் உதவியுடன் மகா பெரியவர் இரவு நேரம் வீட்டிற்கு வந்ததை நினைத்தால் இப்போதும் மெய்சிலிர்க்கிறது என்கிறார்.)

மேற்கொண்டு வேதம் படிப்பதற்காக காசிக்கு சென்றார் அங்கு நிறைய படித்தார், வேதம் படித்ததன் காரணமாக பத்ராச்சலம் உள்ளீட்ட நாட்டின் பல்வேறு மடங்கள் கோவில்களில் பார்த்த வேலையில் மனம் லயிக்கவில்லை, இந்த நேரத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் ஜூனியர் காமெண்ட் ஆபிசராக பதவி கிடைத்தது. அங்கு 17 ஆண்டுகள் பணியாற்றினார் ஆனாலும் மனதில் ஒரு நிறைவில்லை,தன் மனம் எதை நாடுகிறது என்பதை அறிய மீண்டும் மகா பெரியவருடன் ஒரு சந்திப்பு.

அந்த சந்திப்பின் போது நடந்த நீண்ட உரையாடலில் முடிவில்...

சொர்க்கம் பற்றி தெரியாது ஆனால் நரகம் பற்றி சொல்ல முடியும் நான்கு விதமான நரகங்கள் உண்டு

முதுமை என்பதே முதல் நரகம்

முதுமையின் போது வறுமை இருந்துவிட்டால் அது இரண்டாவது நரகம்

முதுமை வறுமை இவற்றுடன் பார்வை பறிபோவது மூன்றாவது நரகம்

முதுமை வறுமை பார்வையின்மையோடு பார்க்கவும் பராமரிக்கவும் ஆள் இல்லாமல் போவது நான்காவது நரகம்.

இந்த நான்கு நரகங்களோடும் வாழும் மனிதருக்கு சேவை செய் அதுக்குதான் நீ பிறந்திருக்கே என்று பெரியவர் சொல்லிவிட்டார்.

தலைக்குள் ஆயிரம் விளக்கு போட்டது போல ஒரு பிரகாசம் தனது தேடலுக்கான விடை கிடைத்த சந்தோஷத்துடன் என்ன பெயரில் நான் என் தொண்டு நிறுவனத்தை நடத்தட்டும் என்றதும் எந்த ரயிலில் என்னைப்பார்க்க வந்தாய் என்று கேட்டு நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்று சொன்னதும் அந்தப்பெயரையே வைத்துக்கொள், சீனிவாசப் பெருமாள் என்றால் கண்கண்ட தெய்வம் மட்டுமில்ல கண்கொடுக்கும் தெய்வமும் கூட ஆகவே பெருமாள் இருக்கும் இடத்திற்கு போய் உன் சேவையை ஆரம்பி என்றும் சொல்லிவிட்டார்.

இப்படி திருப்பதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் நவஜீவன் முதியோர் பராமரிப்பு இல்லம் மற்றும் பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கான பள்ளி. ஆரம்பிக்கும் போது திருப்பதியில் ஆரம்பிக்கும் அளவிற்கு பணம் இல்லை ஐந்து ரூபாய் வாடகையில் மங்களம் என்ற கிராமத்து குடிசையில்தான் ஆரம்பித்தார்.பிறகு நல்லவர்கள் உதவியால் நன்கொடையால் படிப்படியாக திருப்பதி பக்கம் உள்ள திருச்சானுார் வந்து இடத்தை வாங்கி முதியோர் இல்லாம் பார்வையற்றோர் பள்ளி இவற்றுடன் இலவச கண் மருத்துவமனை நடத்திவருகிறார்.ராணுவத்தில் இருந்த போது சுற்றிய அனுபவமும் கற்ற மொழிகளும் இவரது சேவைக்கு கைகொடுக்கின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் மெதுவாக அதே நேரம் உறுதியாக இவரது சேவை தொடர்கிறது.ஆந்திரா அரசின் சித்துார் மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே பார்வையற்றோர் பள்ளி இவருடையதுதான். திருச்சானுாரில் மட்டுமின்றி தமிழகத்தில் பெருங்களத்துார் உள்பட நாட்டின் பதினான்கு இடங்களில் நவஜீவன் தொண்டு நிறுவனம் வெற்றிகரமாக  இயங்கிவருகிறது.1070 பேர் அன்றாடம் பயன் பெற்றுவருகின்றனர்.14 கிளைகளில் 164 பேர் பணியாற்றி வருகின்றனர்.ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

இந்த செலவு முழுவதும் நன்கொடையாளர்கள் தரும் பணத்தில்தான் நடக்கிறது.அவர்கள்தான் நவஜீவனின் நிஜமான துாண்கள் நான் வெறும் கருவிதான்.தாத்தா,மகன்,பேரன் என்று மூன்று தலைமுறைகளாக நன்கொடை கொடுப்பவர்களும் உண்டு.இதில் மகன்களும் பேரன்களில் பலரும் நவஜீவனுக்கு வந்ததேயில்லை ஆனால் இதன் ஜீவன் என்ன என்பதை உணர்ந்து வழங்குகின்றனர், அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.

அதே போல மாளிகை போன்ற வீடு பணியாட்கள் உயர்ந்த உணவு கல்வி என்று அனைத்து வசதிகள் வாய்ப்புகள் உள்ள ராணுவ வேலையை விட்டுவிட்டு தொண்டு நிறுவனம் தொடங்கப்போகிறேன் என்றதும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் என்னுடன் வந்து பல காலம் குடிசை வீட்டில் தங்கியபடி என்னையும் நவஜீவனையும் உயிர்ப்புடன் இயங்கச் செய்தவர் இப்போதும் செய்பவர்,இன்று வரை என் பென்ஷன் பணத்தில் மட்டுமே குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் மனைவி கவுசல்யாவிற்கு நன்றி.

இறந்து போகும் ஆதரவற்ற முதியார்களுக்கு நானே பிள்ளையாக இருந்து காரியம் செய்யும் போது குறுக்கே விழுந்து தடுக்காமல் தன் பிள்ளை எது செய்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மனதார என்னுடன் இருந்து என்னை வாழ்த்திக்கொண்டு இருக்கும் என் வயதான தாயார் ருக்மணி, என்னை புரிந்து கொண்டதுடன் தன்னையும் புரிந்து கொண்டு சாதாரண பள்ளியில் படித்து இன்று நல்ல நிலையில் இருந்து எனக்கு உதவிக்கொண்டிருக்கும் என் பிள்ளைகள் பதஞ்சலி-ரம்யா ஆகியோருக்கும் நன்றி சொன்னார்.

முத்தாய்ப்பாக நவஜீவனை ஆசீர்வாதிக்கும் திருமலை சீனிவாசன், மற்றும் அறக்கட்டளை செயலாளர் சீனிவாசன், மேலாளர் சீனிவாசன் ஆகிய மூன்று சீனிவாசன்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என்று சொல்லும் ஸ்ரீதர் ஆசார்யாவிற்குதான் பார்வையற்ற பள்ளிக்குழந்தைகள் ஆதரவற்ற முதியோர்கள் சமூகம் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளது.

அவரது எண்:9849617808,மேலாளர் எண்:9908537528.

--தினமலர் நாளிதழிலிருந்து.

Sunday, 24 December 2017

இல்லம் தேடிய சிகிச்சை

ழைய கறுப்பு - வெள்ளை படங்களில், கையில் ஒரு பெட்டியைத் தூக்கியபடி வீட்டுக்கே வந்து சிகிச்சை தரும் டாக்டர் கேரக்டர்களைப் பார்க்க முடியும். கறுப்பு-வெள்ளை படங்கள் போலவே, இப்படிப்பட்ட டாக்டர்களும் காணாமல் போய்விட்டார்கள். அந்த மரபை மீட்டுள்ளது, சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனின் முயற்சியில் உருவான ‘இல்லம் தேடிய சிகிச்சை’ என்ற அமைப்பு.

முதியவர்களை மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல முடியாத சூழல் இருக்கும் போது, அதனால் கூட அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். இது பற்றி மருத்துவ நண்பர்கள், மாணவர்களிடம் கோரிக்கை வைத்ததற்கு, 'தாராளமாக செய்யலாம்' என முன்வந்தனர். சென்னையில், 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இந்த சேவையை செய்கின்றனர். எந்த நேரம் அழைத்தாலும், மறுப்புச் சொல்லாமல் முதியவர்களின் வீடுகளுக்கு சென்று, சிகிச்சை அளிக்கிறோம். வயதானவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு அழைத்து போவதால், கால தாமதம் ஆகும். அதை தவிர்க்கவே இந்த முறை.

 

இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட முதியவர்களை காப்பாற்றியுள்ளோம். வீடுகளுக்கு மட்டுமின்றி, முதியோர் இல்லங்களுக்கும் போய், சிகிச்சை அளித்து வருகிறோம். வீடுகளில் சென்று சிகிச்சை அளிக்கும்போது, அவர்கள் இலகுவாக உணர்வதால், பாதி பிரச்னை, அதிலேயே சரியாகி விடும். அலோபதி மருத்துவர்கள் மட்டுமின்றி, இயற்கை மருத்துவர்களும், ஹோமியோபதி மருத்துவர்களும் இந்த அமைப்பில் உள்ளனர். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, ஆதரவில்லாத முதியவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என, முடிவு செய்து உள்ளோம்.

முதியவர்கள், அவர்கள் வயதுக்கேற்ற உணவுகளை சாப்பிடாததால், பல நோய்கள் வருகின்றன; அதை தவிர்க்கவே இந்த முயற்சி. தற்போது, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள முதியவர்களுக்கும் இந்த அமைப்பின் கீழ் சிகிச்சை அளிக்கிறோம். இது போன்ற திட்டத்தை, அரசே எல்லா பகுதிகளிலும் துவங்க வேண்டும்.
தொடர்புக்கு: 98841 45189; 98413 71278.

--தினமலர் மற்றும் விகடனிலிருந்து.
 வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

Saturday, 21 October 2017

பணி ஓய்வுக்கு முன் பணமும்...; பணி ஓய்வுக்கு பின் மனமும்...

எட்டாம் வகுப்பை முடித்து அஞ்சலகத்தில் பணிக்குச் சேர்ந்த குருசாமி, தற்போது 91 வயதாகியும் அஞ்சல் துறைக்கு தன்னாலான சேவைகளைச் செய்து வருகின்றார்.

1940-ல் அஞ்சல் துறையில் பணியாளாகச் சேர்ந்தவர் பி.எம்.குருசாமி. 'பிஎம்ஜி' என்று அறியப்படும் இவர் 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்தார். இதனால் சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கிருந்த ஜெயிலர் அவருக்கு 16 வயதே ஆகிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதனால் குருசாமி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டவில்லை. அதையடுத்து தன்னுடைய அஞ்சலக வேலையை மீண்டும் தொடர்ந்தார் குருசாமி.


 காலங்கள் உருண்டோடின. மண்டபம் அஞ்சல் நிலையத்தில் 1943-ல் கிளாஸ் - IV ஊழியராக பதவியேற்றார் குருசாமி. தன்னுடைய அர்ப்பணிப்பான வேலை உணர்வால் 1985-ல் தபால்காரராக ஓய்வு பெற்றார். 

தற்போது குருசாமிக்கு 91 வயதாகிறது. ஆனாலும் பணி ஓய்வுக்குப் பிறகு சுமார் 32 வருடங்களாக தினந்தோறும் தலைமை தபால் நிலையத்துக்குத் தவறாமல் வந்துவிடுகிறார். தினசரி காலை 2 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் வரும் அவர், தபால் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உதவுகிறார். தெரியாதவர்களுக்கு படிவங்களை நிரப்பிக் கொடுப்பது, பணத்தைக் கணக்கில் போடுவது, எடுத்துத் தருவது ஆகியவற்றை மேற்கொள்கிறார். அத்துடன் ஆர்.டி. ஆரம்பித்துக் கொடுப்பது, அரசின் அஞ்சலக திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் விளக்குவது ஆகிய செயல்களையும் குருசாமி ஆர்வத்துடன் மேற்கொள்கிறார்.

''ஓய்வுக்குப் பிறகு யாருமே பழைய அலுவலகத்துக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் அதில் குருசாமி விதிவிலக்கு. 'மை ஸ்டாம்ப்' திட்டத்தைத் தொடங்க ஏராளமானோரை ஊக்குவித்தவர் அவர்தான்'' என்கிறார் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் என்.ஜே.உதயசிங்.

தன்னுடைய நெடும் பயணம் குறித்து 'தி இந்து'விடம் பகிர்ந்துகொள்ளும் குருசாமி, ''கடவுள் எனக்கு நல்ல உடல்நிலையைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரை என்னாலான சேவைகளைத் தொடர்வேன்'' என்கிறார். இவரின் சேவைகளைப் பாராட்டி காரைக்குடி கம்பன் கழகம் குருசாமிக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கியுள்ளது.

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து.

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...