Friday 1 July 2016

தண்ணீர் 1: நீர் மேலாண்மை

" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 

விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

 (https://www.tripadvisor.in/LocationPhotoDirectLink-g297679-d2422622-i188836246-Pykara_Lake-Ooty_Tamil_Nadu.html)

நீரின் முக்கயத்துவதை உணர்த்த குறளின் முதல் மூன்று சொற்களே போதும், அந்த அளவிற்கு நீர் நமது உடலின் ஒரு அங்கம், காற்றிற்கு அடுத்து இன்றியமையாதது நீர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான, சுகாதாரமான  நீர் அவசியம். இன்றைய காலகட்டத்தில், அதாவது நம்மாழ்வார் கூறுவதை போல பனி நீரையும் சேமிக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம், நீர் மேலாண்மை  என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று, நமக்கு தேவையான அளவு மழை கிடைக்கிறது ஆனால் பரவலாக கிடைக்க வேண்டிய மழை குறிப்பிட்ட சிறு கால இடைவெளியில் கிடைத்துவிடுகிறது அதை  சேமித்து, முறையாக பயன்படுத்துவதில் போதிய விழிப்புணர்வு, தொழில்நுட்பம் இல்லாததே இங்கு பிரச்சனை.

தொழில்நுட்பம் என்பது நமது தேவைகளை பொறுத்தது; அதை சொல்லிக்கொடுக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்தான் வர வேண்டும் என்று இல்லை. அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் இயற்க்கை விஷயங்களை கூர்ந்து நோக்கினாலே போதும். அனைத்து விஷயங்களும் சிறு யோசனையில் இருந்துதான் பிறக்கிறது. நம்மை சுற்றி வாழ்பவர்களில் பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும், அவற்றை ஒருங்கினைத்து பயன்படுத்தி நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை.
 
அந்த வகையில் நீர் மேலாண்மையில் நான் படித்த சில செய்திகளை, வியந்த சில மனிதர்களை, சில நுட்பங்களை பகிர்ந்து கொள்வதே இந்த "தண்ணீர்" தொடர்பதிவின் நோக்கம்.

குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி???

தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்
தண்ணீர் 3: ராஜஸ்தானின் தண்ணீர் மனிதன்
தண்ணீர் 4: பீஹாரின் பசுமைப் பெண் (The Green Lady of Bihar)
தண்ணீர் 5: ஒரு ரூபாய் மனிதர்
தண்ணீர் 6: மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பமும் (Bhungroo) குஜராத்தும்
தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2
தண்ணீர் 8: மழை இல்லம்
தண்ணீர் 9: நீர் வித்தகர், 600 ஏரிகளை உருவாக்கியவர் - ஐயப்ப மசாகி


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...