Tuesday 14 November 2017

கறிவேப்பிலையின் மருத்துவ நற்குணங்கள்:

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன் குறித்து கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி:

 

கருமுட்டை உற்பத்தி: கறிவேப்பிலையில் உள்ள, 'கார்பசோஸ்' என்ற ஆல்கலாய்டுகள், கருமுட்டை உற்பத்தியை துாண்டுகிறது.

பித்த மற்றும் கருப்பை சூடு: 20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து, காலையில், வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், பித்த மற்றும் கருப்பை சூடு சரியாகும்.

கறிவேப்பிலை - 100 கிராம், மிளகு - 5 கிராம், சீரகம் - 5 கிராம், தோல் நீக்கிய சுக்கு - 2 கிராம், பெருங்காயம் - 2 கிராம் என, அனைத்து பொருட்களையும் தனித்தனியே இளம் வறுவலாக வறுத்து, உப்பு சேர்த்து அரைத்து துாள் செய்து கொள்ளவும்.
வயிற்றுப் பொருமல், மந்தம், அஜீரணம்:
தினமும் பகல், இரவு இரண்டு நேரமும் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்க்க, வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, பித்த வாயு, மந்தம், அஜீரணம் சரியாகும்.

 தழும்பு மறைய: சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்துாரி மஞ்சள், கசகசா, பட்டை சேர்த்து அரைத்து, அம்மை நோயால் வந்த தழும்புகளில் தேய்த்து வந்தால், தழும்பு மறையும்.
  • இரும்பு சத்து, பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள கறிவேப்பிலை, ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
  • முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, 'அமீபியாசிஸ் 3' எனப்படும் ஒரு வகை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த, இன்றியமையாத மூலிகை, கறிவேப்பிலை.
  • வயோதிகத்தில் வரும், 'அல்சைமர்' எனும் ஞாபக மறதியைக் குறைக்கும். 
  • உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவை சீர்படுத்தி, பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. 
  • கல்லீரல் மற்றும் கணையத்தை பலப்படுத்துகிறது.  கறிவேப்பிலை சாறு அருந்தி வர, கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • ரத்த சர்க்கரை அளவை, 42 சதவீதமும், ரத்தக் கொழுப்பை, 30 சதவீதமும் கறிவேப்பிலை குறைப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 
  • கறிவேப்பிலையில் சிறிது நீர் சேர்த்து, சங்கால் அரைத்து முகப்பருவில் தடவினால், பருக்கள் மறையும்.
  • இளநரையை கறிவேப்பிலை தடுக்கிறது.
  • கறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து, தினமும் மூன்று மாதங்கள் பருகி வர, இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள தளர்ந்த உடலை குறைத்து, அழகை மேம்படுத்தும்.
  • கறிவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து, காலை, மாலை, ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நீர்க்கோவை, சூதக வாயு தீரும்.
கறிவேப்பிலையின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம். உணவே மருந்து.

 --தினமலர்  நாளிதழிலிருந்து.

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...