Wednesday 17 March 2021

வாழை நாரும் சிறந்ததே!!

வாழை நாரில் விதவிதமான கலைப் பொருட்களை படைத்து, பிரதமர் மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றது குறித்து, தமிழகத்தை சேர்ந்த முருகேசன்: சொந்த ஊர், மதுரை அருகே உள்ள மேலக்கால் என்ற கிராமம். விவசாய குடும்பம் என்னுடையது.விவசாயத்தில் பழைய முறைகளை பின்பற்றாமல், புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம், சிறு வயது முதல் இருந்து வந்தது. எங்கள் பகுதியில், எல்லாரும் கையால் அறுவடை செய்த போது, நான் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தேன்.வழக்கமாக, இரண்டொரு நெல் ரகங்களையே விதைத்து வந்த எங்கள் பகுதியினர் மத்தியில், நான் புதுப்புது அரிசி ரகங்களை பயிரிட்டு காட்டினேன். விவசாயத் துறையால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்பேன். 


கரும்பு சக்கையை, நல்ல இயற்கை உரமாக மாற்ற முடியும் என, சொல்லித் தந்தனர். அதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.அதுபோல, பல விதமான விவசாய கழிவு பொருட்களில் இருந்து, புதுமையான பொருட்களை படைக்க முடியும் என்பதை யோசித்து அறிந்தேன்.அந்த காலத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை கூட அறியாமல், அனைத்து தரப்பினரும், பிளாஸ்டிக் பைகளை சகட்டு மேனிக்கு பயன்படுத்தத் துவங்கி இருந்தனர்.அதற்கான மூலப்பொருட்களை, கடைக்காரர்களும் வாங்கிக் குவித்திருந்தனர். 

இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமே என, மனம் கலங்கியது.தென்னை நார், கயிறாக மாறுகிறது. பல தரப்பினராலும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவது போல, வாழைக் கழிவான, வாழை நாரிலிருந்தும், பல பொருட்களை தயாரிக்கலாமே என, பத்தாண்டுகளுக்கு முன் யோசித்தேன்.வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நார், பூ கட்டுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. பிற தேவைகளுக்கு, அவை பயன்படுத்தப்படாமல், வீணாக எரிக்கப்படுகின்றன அல்லது மண்ணில் போடப்பட்டு மக்க வைக்கப்படுகின்றன. 

எனவே, வாழை நாரிலிருந்து கயிறு தயாரித்து, அந்த கயிற்றை பலமாக ஆக்கி, அதன் மூலம், பை, பழக்கூடை, மிதியடி, டேபிள் மேட் போன்றவற்றை தயாரிக்க முடியும் என அறிந்து, கயிறு திரிக்கும் இயந்திரங்கள் கிடைக்கிறதா என, பல இடங்களிலும் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை.பிறகு, நானே அந்த எளிய இயந்திரத்தை உருவாக்கி, வாழை நாரிலிருந்து கயிறு தயாரிக்கத் துவங்கினேன். விளம்பரம் இல்லாததால், பெரிய அளவில் விற்பனையாகவில்லை. 

அப்போது ஒரு நாள், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கண்காட்சியில், வாழை நார் பொருட்களை காட்சிக்கு வைத்தேன். அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான 'ஆர்டர்'கள் குவியத் துவங்கின.துவக்கத்தில், நான் மட்டுமே செய்த இந்த வேலையில், இப்போது, எங்கள் பகுதியில், 300 பேர் ஈடுபடும் அளவுக்கு, வாழை நார் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், இன்னமும் ஏராளமான வாழை நார்,வீணாகத் தான் போகிறது

முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ள : 93605 97884

From Dinamalar paper

வாழவைக்கும் வாழை நார் (From Dinamani paper)

கற்றாழை, வாழை நார்... கலகலப்பான மாற்றம்!

வாழை நார் ஆடைகள்: 'துணி'ந்தால் லாபம்தான்!

வாழைநாரில் டாலர்களைக் குவிக்கும் பாமர விவசாயி!

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...