Thursday 9 June 2016

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 2

ரயில் பயணம்: பொதுவாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் February மாதம் காலை மாலைகளில் சற்று குளிர் அதிகமாகவே இருக்கும் sweater இல்லாமல் இருக்க முடியாது. பகல் பொழுதில் நன்றாக இருக்கும் 20 டிகிரி தாண்டாது. எனவே ரயில் பயணம் நன்றாகவே இருக்கும் வெப்ப கால பயணம் போல புழுக்கமாக இருக்காது. ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டே வந்தேன், 1.5 மணி நேரம் கழித்து ஒரு  குடும்பம் (அப்பா, 2 மகன்கள்) என் berth அருகில் வந்தமர்ந்தனர். அப்பாவை மருத்துவத்திற்க்காக அழைத்து செல்கிறார்கள் என்று எனக்கு தெரிந்த ஹிந்தியை வைத்து தெரிந்துகொண்டேன். 

இப்பொழுது ஆட்கள் இருக்கிறார்களே என்று பையை வைத்துவிட்டு (பெரிதாக ஏதும் இல்லை என்றாலும் கொஞ்சம் பணம் இருந்தது) கதவருகில் வந்து நின்றுகொண்டிருந்தேன். 2.5 மணி நேரம் ஓடியிருக்கும், கதவருகில் நின்றுகொண்டிருந்த எனக்கு கண்கொள்ளா காட்சி, தண்டவாளத்தின் இரு புறமும் வயல்வெளிகள், அதில் அழகான மஞ்சள் நிற பூக்கள் பூத்திருந்தன, அதன் கீழ் இலையின் பச்சை நிறம், மஞ்சள் பச்சை கூட்டணி அற்புதமாக இருந்தது அவை அனைத்தும் கடுகு செடிகள். அது பழைய ஞாபகங்களுக்கு என்னை இட்டுச் சென்றது, 6 ஆம் வகுப்பில் William Wordsworth அவர்களின் Daffodils poem படித்த ஞாபகம். நம்மூர் வரலாற்றை இவ்வளவு ஞாபகம் வைத்திருந்ததாக தெரியவில்லை.


(http://www.panoramio.com/photo/64803240
https://assamscience.wordpress.com/2014/02/14/alternative-cultivation-help-assams-flood-affecrd-farmers/)

காட்சிகள்: நேரம் ஆக ஆக ரயிலில் கூட்டம் அதிகமானது, பலவிதமான மனிதர்கள் காபி & டீ விற்பவர்கள், விளையாட்டு பொருட்கள் & மின்னனு சாதனங்கள் விற்பவர்கள், பிச்சை எடுப்பவர்கள், ரோந்து பணியில் இருக்கும் மிலிட்டரி ஆட்கள், TTR, தண்ணீர் & குளிர் பானம் விற்பவர்கள், கைதட்டிக்கொண்டே வரும் மூன்றாம் பாலினத்தவர்கள், நொறுக்கு தீனி & புகையிலை வஸ்து பாக்கு  விற்பவர்கள் என கடவுளின் படைப்பில் உள்ள அனைவரும் sleeper coach ல் வந்து சென்று கொண்டிருந்தனர். 

நிலையாக அமர்ந்திருக்கும் என் கண்களின் பார்வைக்குட்பட்ட எல்லையில் இறைவன் இயக்கும் நாடகத்தில் இயக்கிவைக்கப்படும் பாத்திரங்கள் அனைத்தும் வந்து போய்கொண்டிருந்தனர். வாழ்க்கைக்கும், திரைப்படத்திற்கும் எத்தனை ஒற்றுமைகள். சிறிது நேரம் யோசனை, சிறிது நேரம் வேடிக்கை, மதிய உணவு, அமர்ந்த படியே தூக்கம், எனக்கு தெரிந்த ஹிந்தியில் சிறிய உரையாடல்கள் என பகல் பொழுது கழிந்தது. இரவு உணவிற்குப்பின் upper berth ல் சென்று படுத்து கொண்டேன், நல்ல குளிர் வேறு. sweat shirt மற்றும் போர்வையின் துணை கொண்டு குளிரை என்னிடம் இருந்து தள்ளி வைத்து தூங்கி போனேன்.

புதிய நாள்: Feb-9'2013 எங்கோ சென்றிருந்த மனது அதிகாலை என்னை வந்து எழுப்பியது, கண் விழித்தேன் மணி 5.20, காலம் தெரிந்து விட்டது ஆனால் வண்டி சென்று கொண்டிருக்கும் இடம் என்னவென்று தெரியவில்லை. கீழே பார்த்தால் இரவு இருந்ததை விட அதிக கூட்டம், சென்று வரும் வழியிலேயே படுத்து உறங்கிகொண்டிருந்தார்கள். டீ விற்பவர்கள் வந்து படுதிருந்தவர்களை எழுப்பி பாதையை மீட்டெடுத்து கொடுத்தனர். 6.45 க்கு முகல்சராய் நிலையம் வரும் அங்கு இறங்கி வாரணாசி செல்லலாம் என தயாரானேன். வந்தது நிலையம் நான் இருந்த Compartment மட்டும் திறந்திருந்தது மற்ற Compartmentகள்  மூடியிருந்தது அதனால்  ஒடிஷாவில் இருந்து கும்பமேளாவிற்க்கு வந்த அனைவரும் இதில் ஏற ஆரம்பித்தனர். 

கூட்டம் கூட்டம்...: Platform ல் அதிக கூட்டம், இருவர் மட்டுமே ஏற கூடிய வாயிலில் 4,5 பேர்  என ஆண்கள் பெண்கள் அனைவரும், ஒரே நேரத்தில் தாங்கள் கொண்டுவந்திருந்த சாமான்களுடன் ஏற முயன்று கொண்டிருந்தனர். Survival of the fittest என்ற மொழிக்கேற்ப பலமுள்ளவர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். உள்ளே வந்தவர்களும் உள்ளிருந்தவர்களும் கூட்டத்தை பார்த்து கதவை மூட முயன்றனர், ஆனால் வெளியிலிருந்து ஏறுபவர்களின் ஒரே தீர்கமான நோக்கம் உள்ளே எப்படியாவது ஏறிவிடவேண்டும், அதுவே கடைசியில் வென்றது கதவை மூட முடியவில்லை. ரயில் கிளம்பியபின்தான் ஏறுவது நின்றது கதவும் மூடப்பட்டது. 3 பேர் அமரகூடிய berth இல் 5 பேர், ஒருவர் தாராளமாக நிற்கக்கூடிய இடத்தில் 3 பேர், நிற்பவர்கள் தலையில் அவர் அவர் சாமான்கள், ரயிலின் தரை பகுதி கண்களுக்கு புலப்படவேயில்லை. அதிக கூட்டமிருந்தால் "எள்ளு போட்டா எண்ணை வந்துவிடும்" என்ற சொலவடை உண்டு ஆனால் இங்கு எள்ளு போட்டாலும் சரி, கடுகு போட்டாலும் சரி எதுவுமே வெளியில் வராது, எண்ணை கூட!!!! அவ்வளவு கூட்டம்.



Plan  பண்ணியும் இறங்க முடியலையே!!!! ரயில் கிளம்ப ஆரம்பித்தது, அவரவர் அகத்தின் அழகு முகத்தில் கண்களின் வழியே தெரிந்துகொண்டிருந்தது. ஏறமுடியாதவர்களின் கண்களில் இடத்திற்கான ஏக்கம், ஏறியவர்களின் கண்களில் மகிழ்ச்சி, அமர்ந்திருந்தவர்கள் கண்களில் தாராளமான இடம் பறிபோன கோபம், ஒரு ஜோடி கண்களின் வழியே மட்டும் இங்கு இறங்கமுடியவில்லையே Master Plan தவிடுபபொடியாகிவிட்டதே என்ற சோகம், வேறுயாருமல்ல நான்தான், என்கண்களில்தான். அந்த கூட்டம் ஏறும் ஆவேசத்தை பார்த்ததும் இங்கு இறங்க வேண்டும் என்ற எண்ணமே மறைந்துவிட்டது. (கவனிக்க எனக்கு Lower berth கிடைத்திருந்தால் நான் இறங்கியிருப்பேன், விதி என்று சொல்லலாமில்லையா?) அலஹாபாத் வரை பயணச்சீட்டு இருந்ததால் பிரச்சனையில்லை, காசியை மாலையில் பார்த்து கொள்ளலாம் என் இருந்துவிட்டேன், 9.45 மணிக்கு அலஹாபாத் நிலையத்தை ரயில் அடைந்தது.


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...