Thursday 5 December 2019

நெரூர் சதாசிவ ப்ரமேந்திராள் ஜீவ சமாதி

வெகு நாட்களுக்கு முன்பே இந்த ஜீவ சமாதி பற்றி தெரியும், போக வேண்டும் என்றும் தோன்றிக்கொண்டே இருக்கும்; ஆனால் இன்றுதான் நேரம் காலம் கூடி வந்தது போல.....அவரின் அருளை பெற. கரூரை அடுத்து 14 கி மீ தொலைவில் உள்ள நெரூர் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது சதாசிவ ப்ரமேந்திராள் அவர்களின் சமாதி. ஸ்ரீ காசி விசுவநாதர் விசாலாட்சி ஆலயமும் அதன் பின்புறம் சமாதியும் உள்ளது. இவ்வளவு தொலைவில் உள்ளதால் பக்தர்கள் குறைவாக இருப்பார்கள் என்று நினைத்தால்.....அது தவறு என்று நிரூபிப்பதை போல பக்தர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள். கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது; 13 ருபாய் கட்டணம். ஆட்டோவில் 250 ருபாய் --- செல்வதற்கு மட்டும், காத்திருந்து மீண்டும் கரூர் கூட்டி வர வேண்டுமென்றால் 400 ருபாய்.



(மூலம் :: Thedal blog)




(பேருந்து கால அட்டவணை)

தொடர்புடையவை:

ஜீவ சமாதிகள்:
Thedal

1 comment:

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...