Monday 2 October 2017

மீண்டும் மீண்டும்.....கேட்க்கத்தூண்டும் இசை: 2

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல இந்த பட்டியலில் உள்ள இசையும் கேட்ட உடனே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை அமைதியாக கேட்க வேண்டும், சிலவற்றை கண்களை மூடி கேட்க வேண்டும், சில பாடல்கள் துள்ளலை கொண்டுவரும், சில பாடல்கள் அமைதியை கொண்டுவரும் மற்றும் சில வாழ்வின் உண்மையை உணர்த்தும். கலவையான இசை தொகுப்பு.


1) Hang drum / Space drum: Hang drum கருவியை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறேன், வாசிப்பது என்னவோ நமது மிருதங்கம், தபேலா வாசிப்பது போலத்தான் உள்ளது ஆனால் வரும் இசை உலோகத்திலிருந்து. ஸ்விட்சர்லாந்து நாட்டில்தான் இந்த கருவி முதலில் தயாரிக்கப்பட்டது, இதன் இசை மிக அற்புதமாக இருக்கும் கேட்டுப்பாருங்கள். அட புதுசா இருக்கே!!!

 


2) பெர்சியன் (Persian) இசை: அமைதியாக கண்களை மூடி கேட்க வேண்டிய இசை.


3) ஜெர்மானிய Faun இசை குழு: (Faun Band) 1998ல் ஆரம்பிக்கப்பட்ட இசை குழு. பழைய இசை கருவிகளை பயன்படுத்துவதே இவர்களின் தனிச்சிறப்பு. ஜெர்மன், லத்தீன், கிரீக் மற்றும் ஸ்கேண்டிநேவியன் மொழிகளில் இவர்கள் பாடல்கள் இருக்கும், இங்கு உள்ள பாடல் எந்த மொழி என்று தெரியாது அநேகமாக ஜெர்மன் மொழியாக இருக்கக்கூடும். ஆடணும் போல தோணுதே!!!

 
 

4) பின்னிஷ் (Finnish) இசை: 1936ல் வந்து தற்போது பிரபலமாக உள்ள பின்னிஷ் நாட்டுப்புற பாடலும் (Loituma - Ievan's Polkka), Nightwish என்ற இசைக்குழுவின் Last of The Wilds இசை பாடலாகவும். இசை கருவிகள் இல்லாமல் பாடும் நாட்டுப்புற பாடலை கேட்டுப்பாருங்கள் அருமை. இசை மீது ஆர்வம் கொண்ட மகள் தாயை ஏமாற்றிவிட்டு கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்வது பற்றியான பாடல் என்று நினைக்கிறேன்.

  

5) ஹரியான்வி நாட்டுப்புறப் பாடல்: சில நாட்களுக்கு முன்பு Whats App மூலமாக பார்க்க நேரிட்டது, இது பற்றி வெங்கட் நாகராஜ் என்ற பதிவரும் பதிவிட்டிருந்தார். பள்ளி மாணவிகள் பாடும் பாடல் தாலாட்டு ரகம்.


6) T.ராஜேந்தர் மற்றும் யேசுதாஸ் அவர்களின் பாடல்கள்: எங்கு பறந்தாலும் தரையில் தான் வந்து நிற்க முடியும், அதுபோல எந்த மொழிப் பாடல்/இசை கேட்டாலும் நம் தமிழில் கேட்பது என்பது தனி சுகம் தான். கல்லூரியில் படிக்கும் போது NCCயில் இருந்த காரணத்தால் ஒரு முறை Camp ற்கு அழைத்து சென்றிருந்தார்கள், (10 நாள் campற்கு பல கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வருவார்கள்) அங்கு நமது தனித்திறமையை (பாட்டு, நடனம், இசை கருவிகள் வாசிப்பு, கவிதை மற்றும் பல...) காட்ட மாலை/இரவு பொழுதுகளில் வாய்ப்பு வழங்கப்படும். அப்படி ஒரு சமயத்தில் ஒரு மாணவன் பாடிய பாடல்தான் "ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்..." என்ற பாடல், அன்று கேட்ட பாடல் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அருமையான வரிகள், யேசுதாஸ் அவர்களின் மெய் மறக்க செய்யும் குரல். மற்றொன்று T.ராஜேந்தர் அவர்களின் காலத்தை வென்ற பாடல்களுள் ஒன்று.

  




No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...