Wednesday 13 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 2

1) பொன்னியின் செல்வன்:


பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950-1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி.1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை  அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. 

2) யவண ராணி:

 சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று  யவண ராணி  என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.
கதையோட்டம்:  ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். பூம்புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் பூம்புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராட இறுதி என்னாயிற்று என்பதே கதை. 

 3) எண்ணங்கள்:


எண்ணங்கள் எனும் இந்நூல் மனமே அனைத்திற்கும் அடிப்படை என்று சொல்கின்றது. மனம் எதை நம்புகிறதோ, எதை ஆசைப்படுகிறதோ அதை அடைந்து விடுகிறது என்றும், சின்னச்சின்ன நம்பக்கூடிய சம்பவங்களின் வழி மனதின் மகத்தான சக்தியைப் பற்றி விளக்கி உள்ளார் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி. இந்த நூல் விவரித்த உலகம் இதுவரை பார்த்திராதது. இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் புதிய உலகிற்கு இட்டுச் செல்லும். இதுவரை படித்திருந்த சரித்திர, சமூக நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் இந்த 'எண்ணங்கள்' எனும் நூல். 

4) எனது சிந்தனைகள்:

ரமாகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டிருக்கும் விவேகானந்தரின் சிந்தனைகளை போதிக்கும் ஒரு நல்ல நூல் எனது சிந்தனைகள்.

5) குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்:
மூன்று பாகங்களை கொண்ட குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நூலானது ராமகிருஷ்ணர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஆரம்பித்து அவர் வாழ்வில் அவருடன் பயணித்த முக்கிய நபர்களின் வரலாறு, காளி கோவில் உருவான விதம் மற்றும் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகான மடத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி ஆகியவைப்பற்றி விரிவாகவும் தெளிவாகவும் சாரதானந்தர் என்ற சீடரின் பார்வையில் விளக்குகிறது. 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...