Wednesday 13 December 2017

காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

தினமலர் இணையதளத்தில் எனக்கு பிடித்த இரண்டு பகுதிகள் இவை: (i) சொல்கிறார்கள் (ii) நிஜக்கதை. எனது பதிவுகளில் பாதி இதிலிருந்தோ அல்லது இந்த செய்தியை சார்ந்தோதான் இருக்கும். இந்த பதிவு நிஜக்கதை பகுதியிலிருந்து.

அதிகம் நெரிசல் இல்லாத அமைதியான காரைக்கால் கடற்கரையின் காலை வேளையில் ஒரு மாருதி கார் வந்து நிற்கிறது.காரை ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு பின்பக்க கதவை திறக்கிறார் வரிசையாக பொருட்களை இறக்கிவைக்கிறார்.அடுத்த இருபதாவது நிமிடத்தில் இயற்கை மூலிகை பானங்கள் விற்கும் கடை ரெடி.
  • அருகம்புல், வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், நெல்லிக்கனி சாறாகவும்(juice)
  • சுக்கு காபி, மூலிகை கீரை, முடக்கத்தான் கீரை ஆகியவை சூடான சூப்பாகவும்
  • கேழ்வரகு கஞ்சி, சிறுதானிய கஞ்சி, உளுந்தக்களி, முளைகட்டிய பயிறு ஆகியவை சாப்பிடவும் கிடைக்கிறது.
இவரது கடை எப்போது திறக்கும் என்று எதிர்பார்தவர்கள் போல கடற்கரையில் நடைப்பயிற்சி உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கடையை சுற்றி கூடி தங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிடுகின்றனர்.

  
சிவ நடராஜன் இவர்தான் இந்த இயற்கை உணவகத்தின் தொழிலாளி முதலாளி எல்லாம். நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞர்களில் இவரும் ஒருவராகத்தான் இருந்தார். மலேசியா,சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர் இவரது தந்தையும் இயற்கை மூலிகை உணவுப்பொருள் தயாரித்து விற்றுவந்தவருமான ஜெயச்சந்திரன் "கையில் நல்லதொரு ஆரோக்கியமான தொழில் இருக்கேப்பா இதை ஏன் செய்யக்கூடாது?" என்றதும் உடனே சரி என்று சொல்லி தொழிலில் இறங்கிவிட்டார். இவருக்கு பக்க பலமாக இருப்பது இவர் மனைவி லலிதா.

சுற்றுச்சுழல் ஆர்வலர் என்பதால் பிளாஸ்டிக் என்பது அறவே இல்லை.

ஓரு முறை வாடிக்கையாளர் உபயோகித்த ஸ்டீல் டம்ளரை மறுமுறை உபயோகிப்பது கிடையாது,வெந்நீரால் கழுவியபிறகு மறுநாள்தான் உபயோகிக்கிறார்.

காசு வருமே என்பதற்க்காக செயல்படுவதும் கிடையாது உதாரணமாக யாராவது அருகம்புல் சாப்பிட்டுவிட்டு உடனே கேப்பைக்கூழ் கேட்டால் அருகம்புல் சாறு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது அப்போதுதான் அருகம்புல்லின் மருத்துவத்தன்மை உடம்புக்கு கிடைக்கும் என்று சொல்லி அவர் கேட்ட கேப்பைக்கூழை விற்கமாட்டார்.

வெளிநாடுகளில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தபோது இல்லாத மன நிறைவு இந்த இயற்கை உணவகத்தின் மூலம் கிடைக்கிறது, பண வரவு குறைவு ஆனால் மனநிறைவு அதிகம் எனக்கு மனநிறைவுதான் தேவை என்று சொல்லும் சிவ.நடராஜனுக்கு ஒரு கனவு உணடு, அது முழுக்க முழுக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவகம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அவரது அந்தக்கனவு விரைவில் நனவாகட்டும்.

சிவ.நடராஜனுடன் பேசுவதற்கான எண்:9965970290.
காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...