Saturday 24 February 2018

பொறியியல் இடங்களை ONLINE லேயே தேர்வுசெய்துகொள்ளலாம்: (Tamil Nadu Engineering Counselling Online)

வரும் கல்வியாண்டு முதல் (2018-2019) இன்ஜினியரிங் (B.E, B.Tech) மாணவர் சேர்க்கை ஆன்லைன் கவுன்சிலிங் மூலம்  நடத்தப்படும் இதற்க்காக தமிழகம் முழுவதும் 44 உதவி மையங்கள் அரசு கல்லூரிகளில் அமைக்கப்படும், என, உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதிலிருந்து....

கடந்த ஆண்டு வரை மாணவர்களைச் சேர்ப்பதற்கான, ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டு வந்தது, மாணவர்களும் பெற்றோரும் நேரடி கலந்தாய்விற்கு சென்னை சென்று வர வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் வரும் கல்வி ஆண்டில் இருந்து, அதாவது 2018 ஜூன் முதல், மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் நடத்த, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்து, கணினி வழியாக விண்ணப்பித்து, ஆன்லைனில் விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்யலாம், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக உதவி மையம் சென்றாக வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைகாக 44 உதவி மையங்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்படும். மாவட்டத்தின் அளவைப் பொறுத்து மாவட்டந்தோறும் 1 அல்லது 2 மையங்கள் அமைக்கப்படும். இந்த உதவி மையங்களில், எந்த காரணத்திற்க்காகவும், தனியார் கல்லுாரிகள் ஈடுபடுத்தப்பட மாட்டாது.

இந்த மையங்களை, கவுன்சிலிங் நாளுக்கு மட்டுமின்றி, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் பயன்படுத்தலாம்; அதற்கும் வசதிகள் செய்யப்படும்.
கவுன்சிலிங்குக்கான தேதி, விண்ணப்ப பதிவு துவங்கும் நாள், கடைசி நாள், துணை கவுன்சிலிங் துவங்கும் தேதி, &'ரேண்டம்&' எண் மற்றும் தரவரிசை வெளியிடப்படும் தேதி போன்றவை, விரைவில் அறிவிக்கப்படும். 

கவுன்சிலிங் தொடர்பாக, விரிவான வழிகாட்டுதல், அண்ணா பல்கலையால் வழங்கப்படும். மேலும், கவுன்சிலிங்குக்கு பதிவு செய்வோருக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு நாளில், கல்லுாரிகளின் பட்டியல் அடங்கிய, கையேடுகள் தரப்படும். அதில் இருந்து, கல்லுாரிகளின் பதிவு எண், பெயர், மாவட்டம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். 
விளையாட்டு வீரர்கள், மாற்றுதிறனாளிகள், தொழிற்துறை படிப்பை முடித்தவர்கள் உள்ளிட்டோறுக்கான கலந்தாய்வும், துணை கலந்தாய்வும் நேற்முக கலந்தாய்வாக நடைபெறும்.
மேலும், கவுன்சிலிங்கை எப்படி அணுகுவது என்ற வழிகாட்டுதல், விண்ணப்ப படிவத்தின் மாதிரி, நிரப்பும் முறை போன்றவை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும்.

கவுன்சிலிங் நடக்கும் முறை :

ஆன்லைன் முறையில் இன்ஜி., கவுன்சிலிங் முறை குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:

* முதற்கட்டமாக, விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள், தங்கள் வீட்டில் உள்ள கணிணி வழியாகவோ, அரசின் கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

* ஒவ்வொரு மாணவரும், பயனாளர் அடையாள குறியீடு மற்றும் ரகசிய எண்ணை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் தயாரித்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஆன்லைனில் பதிவு செய்யபடும். 

* விண்ணப்ப பதிவுக்கு பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். 
அனைவருமே (வீட்டில்இருந்தே ஆன் லைனில் பதிவு செய்தவர்களும் மற்றும்  உதவி மையத்தில் பதிவு செய்தவர்களும்) சான்றிதழ் சரி பார்ப்புக்கு உதவி மையம் வர வேண்டும். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள், புகைப்படத்துடன் வரவேண்டும்

* பின், மதிப்பெண் தரவரிசையை உறுதி செய்வதற்கான, ரேண்டம் எண்; தரவரிசை பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும். தர வரிசையின்படி, ஐந்து சுற்றுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கும். ஒவ்வொரு மாணவருக்கும், ஐந்து நாட்கள் கவுன்சிலிங் நடவடிக்கைகள் இருக்கும்.

* முதல் மூன்று நாட்கள், விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விருப்ப பட்டியலில், ஒவ்வொரு மாணவரும், கணினியில் காட்டும் கல்லுாரிகள் மற்றும் இடங்களில், விருப்பப் பட்ட எண்ணிக்கையில், கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்

* முதல் நாள் முதல், மூன்றாம் நாள் மாலை, 6:00 மணி வரை, விருப்ப பதிவுக்கு, 66 மணி நேரம் அவகாசம் தரப்படும். 

* மூன்றாம் நாளில், மாலை, 6:00 மணியுடன் விருப்ப பட்டியல் பக்கம், &'லாக்&' செய்யப்படும். அன்று இரவே, மாணவர்களுக்கான தோராய மான இட ஒதுக்கீட்டை, இன்ஜி., கமிட்டி, ஆன்லைனில் வழங்கும். மாணவர்கள் அதை பார்த்து, நான்காம் நாளில் உறுதி செய்து, ஆன்லைனில் பதில் அளிக்க வேண்டும்.

* ஐந்தாம் நாளில், அவர்கள் உறுதி செய்த இடம் ஒதுக்கப்பட்டு, டிஜிட்டல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். ஒரு முறை ஒதுக்கீடு பெற்றவர் கள், அதை ரத்து செய்யலாம்; மீண்டும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.

* தரவரிசைப்படி, மாணவர்களுக்கு ஒதுக்கபட்ட நாட்களில், ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களின் பெயர், மதிப்பெண் அடிப்படையில், அடுத்த சுற்றுக்கு வந்துவிடும். அடுத்த சுற்றில், எந்த கல்லுாரிகளில் இடங்கள் இருக்கிறதோ அவற்றில், இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

--தினமலர் மற்றும் தினமணியிலிருந்து.


தொடர்புடைய  பதிவுகள்:
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று

 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...